search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்ரீ கலைவாணி பள்ளி"

    • 20 மாணவர்கள் 475 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
    • கணித தேர்வில் 14 பேர் 100-க்கு100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    சங்கரன்கோவில்:

    திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 244 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 20 மாணவர்கள் 475 மதிப்பெண்களுக்கு மேல், 53 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல், 121 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். 226 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 488 மதிப்பெண் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் கிஷோர், சிவ கணேஷ், ராகுல். 487 மதிப்பெண் அபிநயா என்ற மாணவி பெற்றுள்ளார். சங்கரேஸ்வரி, அர்ஷா, சஹானா, விஸ்வநாதன் ஆகிய மாணவர்கள் 486 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    பாடவாரியாக தமிழ் 98 மதிப்பெண்கள் ஒரு நபர், ஆங்கிலம் 99 மதிப்பெண் 7 நபர், கணிதம் 100-க்கு100 மதிப்பெண் 14 நபர், அறிவியல் 100 மதிப்பெண் 1 நபர், சமூக அறிவியல் 98 மதிப்பெண் 2 நபர் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வர் பொன்னழகன் என்ற கண்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

    • மாநில அளவிலான டென்னிகாய்ட் போட்டி காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
    • இரட்டையர் ஆட்டத்தில் எப்சிபா, தீபா ஆகியோர் மாநில அளவில் 3-ம் இடம் பிடித்தனர்.

    சங்கரன்கோவில்:

    தமிழக அரசு சார்பில் மாநில அளவிலான டென்னிகாய்ட் போட்டி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள இன்பன்ட் மேட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. இதில் 38 மாவட்டத்தில் உள்ள மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் தென்காசி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் கலந்து கொண்டு பெண்கள் இளையோர் பிரிவில் இரட்டையர் ஆட்டத்தில் எப்சிபா, தீபா ஆகியோர் மாநில அளவில் 3-ம் இடம் பெற்று சாதனை படைத்தனர். மாநில அளவில் மூன்றாம் இடம் பெற்ற மாணவிகளை பள்ளி முதல்வர் மற்றும் நிர்வாகி பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர், ஆசிரியைகள் ஊர் பொதுமக்கள் பாராட்டினார்கள்.

    ×