search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு"

    • 20 மாணவர்கள் 475 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
    • கணித தேர்வில் 14 பேர் 100-க்கு100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    சங்கரன்கோவில்:

    திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 244 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 20 மாணவர்கள் 475 மதிப்பெண்களுக்கு மேல், 53 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல், 121 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். 226 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 488 மதிப்பெண் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் கிஷோர், சிவ கணேஷ், ராகுல். 487 மதிப்பெண் அபிநயா என்ற மாணவி பெற்றுள்ளார். சங்கரேஸ்வரி, அர்ஷா, சஹானா, விஸ்வநாதன் ஆகிய மாணவர்கள் 486 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    பாடவாரியாக தமிழ் 98 மதிப்பெண்கள் ஒரு நபர், ஆங்கிலம் 99 மதிப்பெண் 7 நபர், கணிதம் 100-க்கு100 மதிப்பெண் 14 நபர், அறிவியல் 100 மதிப்பெண் 1 நபர், சமூக அறிவியல் 98 மதிப்பெண் 2 நபர் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வர் பொன்னழகன் என்ற கண்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

    • மதுரை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர்.
    • பறக்கும் படைகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    மதுரை

    தமிழகம் முழுவதும் இன்று 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 9 லட்சத்து 76 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்வு இன்று (6-ந் தேதி) தொடங்கி வருகிற 20-ந்தேதி வரை நடக்கிறது. முதல் தேர்வாக இன்று தமிழ் மொழி பாட தேர்வு நடந்தது.

    மதுரை மாவட்டத்தில் 38 ஆயிரத்து 945 மாணவ, மாணவிகள் இன்று 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். இதற்காக மாவட்டம் முழு வதும் 145 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தன. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு பணியில் ஆசிரியர்கள், அலுவலர்கள் என ஆயிர த்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட தனிப் படைகள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று கண்காணித்த னர்.

    முன்னதாக தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தேர்வு மையங்க ளில் மாணவ, மாணவிகளுக்கு தேவைான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டி ருந்தன.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 12,755 மாணவர்களும், 12,791 மாணவிகளும் மற்றும் தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 25 ஆயிரத்து 776 பேர் 10-ம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். இதற்காக மாவட்டத்தில் 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தன.

    இன்று காலை சரியாக 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. ஆனால் மாணவ- மாணவிகள் 20 நிமிடம் முன்பே தேர்வு அறைக்குள் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பா ளர்கள் என 1200-க்கும் மேற்பட்டோர் தேர்வு பணியில் ஈடுபட்டனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் 8,890 மாணவர்களும், 9,123 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 13 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதற்காக அமைக்கப்பட்டி ருந்த 101 தேர்வு மையங்களில் இன்று காலை தேர்வு தொடங்கியது. தேர்வு பணியில் 1,500க்கும் மேற்பட்டோர் ஈடு படுத்தப்பட்டிருந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 84 தேர்வு மையங்களில் 8,359 மாணவர்களும், 8,480 மாணவிகளும், 497 தனி தேர்வர்கள் என மொத்தம் 17 ஆயிரத்து 501 பேர் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதினர். 1264 கண்கா ணிப்பாளர்கள், 84 முதன்மை கண்காணிப்பா ளர்கள், 84 துறை அலு வலர்கள், மற்றும் 148 பணியாளர்கள் தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்டி ருந்தனர்.

    முதல்முறையாக இன்று அரசு பொதுத்தேர்வை எதிர்கொண்ட பத்தாம் வகுப்பு மாணவ-மாணவி கள் தமிழ் மொழிப்பாட தேர்வை உற்சாகமாக எழுதினர். தேர்வு மையங்க ளுக்கு முன்கூட்டியே வந்தி ருந்த அவர்கள் கடைசி நேர தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் ஆசிரியர் ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு எழுதுவது குறித்து விளக்கியதை நேரில் காண முடிந்தது.

    தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் மாணவ மாணவிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். துண்டு தாள் வைத்துக்கொள்வது, பிறரை பார்த்து எழுதுவது, ஆள் மாறாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 3 ஆண்டுகள் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை எச்ச ரித்திருந்தது.

    எனவே 3 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட னர்.

    • ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 12 ஆயிரத்து 504 மாணவர்களும், 12, 243 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 747 மாணவ மாணவிகள் எழுதினர்.
    • மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.54, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 79.27, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 91.97 மொத்த தேர்ச்சி விகிதம் 85.83 சதவீதமாகும்.

    ஈரோடு, ஜூன். 20 -

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 12 ஆயிரத்து 504 மாணவர்களும், 12, 243 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 747 மாணவ மாணவிகள் எழுதினர்.

    இதில் மாணவர்களில் 10 ஆயிரத்து 913 பேரும், மாணவிகளில் 11 ஆயிரத்து 635 பேரும் என மொத்தம் 22, 548 மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 87.28, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.03 என மொத்தம் 91. 11 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் 180 அரசு பள்ளிகளை சேர்ந்த 5897 மாணவர்களும், 6351மாணவிகள் என மொத்தம் 12,248 பேர் எஸ்.எஸ் எல் .சி பொது தேர்வை எழுதினர்.

    இதில் 4671 மாணவர்களும், 5,841 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.54, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 79.27, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 91.97 மொத்த தேர்ச்சி விகிதம் 85.83 சதவீதமாகும்.

    மேலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 148 மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் எழுதினர். இதில் 144 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். 

    ×