search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் பள்ளி சாதனை
    X

    எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் பள்ளி சாதனை

    • 20 மாணவர்கள் 475 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர்.
    • கணித தேர்வில் 14 பேர் 100-க்கு100 மதிப்பெண் பெற்றுள்ளனர்.

    சங்கரன்கோவில்:

    திருவேங்கடம் ஸ்ரீகலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் 244 மாணவர்கள் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 20 மாணவர்கள் 475 மதிப்பெண்களுக்கு மேல், 53 மாணவர்கள் 450 மதிப்பெண்களுக்கு மேல், 121 மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சாதனை படைத்துள்ளனர். 226 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். 488 மதிப்பெண் பெற்று பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள் கிஷோர், சிவ கணேஷ், ராகுல். 487 மதிப்பெண் அபிநயா என்ற மாணவி பெற்றுள்ளார். சங்கரேஸ்வரி, அர்ஷா, சஹானா, விஸ்வநாதன் ஆகிய மாணவர்கள் 486 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

    பாடவாரியாக தமிழ் 98 மதிப்பெண்கள் ஒரு நபர், ஆங்கிலம் 99 மதிப்பெண் 7 நபர், கணிதம் 100-க்கு100 மதிப்பெண் 14 நபர், அறிவியல் 100 மதிப்பெண் 1 நபர், சமூக அறிவியல் 98 மதிப்பெண் 2 நபர் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவ-மாணவிகளை பள்ளி முதல்வர் பொன்னழகன் என்ற கண்ணன் மற்றும் ஊர் பொதுமக்கள் பாராட்டினர்.

    Next Story
    ×