search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "91.11 percent pass"

    • ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 12 ஆயிரத்து 504 மாணவர்களும், 12, 243 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 747 மாணவ மாணவிகள் எழுதினர்.
    • மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.54, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 79.27, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 91.97 மொத்த தேர்ச்சி விகிதம் 85.83 சதவீதமாகும்.

    ஈரோடு, ஜூன். 20 -

    எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாகின. ஈரோடு மாவட்டத்தில் மொத்தம் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு 12 ஆயிரத்து 504 மாணவர்களும், 12, 243 மாணவிகளும் என மொத்தம் 24 ஆயிரத்து 747 மாணவ மாணவிகள் எழுதினர்.

    இதில் மாணவர்களில் 10 ஆயிரத்து 913 பேரும், மாணவிகளில் 11 ஆயிரத்து 635 பேரும் என மொத்தம் 22, 548 மாணவ -மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 87.28, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 95.03 என மொத்தம் 91. 11 தேர்ச்சி பெற்றுள்ளனர்.

    இதில் 180 அரசு பள்ளிகளை சேர்ந்த 5897 மாணவர்களும், 6351மாணவிகள் என மொத்தம் 12,248 பேர் எஸ்.எஸ் எல் .சி பொது தேர்வை எழுதினர்.

    இதில் 4671 மாணவர்களும், 5,841 மாணவிகளும் தேர்ச்சி பெற்றனர். மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 88.54, மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 79.27, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் 91.97 மொத்த தேர்ச்சி விகிதம் 85.83 சதவீதமாகும்.

    மேலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை 148 மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகள் எழுதினர். இதில் 144 மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். வழக்கம் போல் மாணவர்களை விட மாணவிகளே அதிகளவில் தேர்ச்சி பெற்றனர். 

    ×