search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "intensive monitoring"

    • மதுரை மாவட்டத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வமுடன் எழுதினர்.
    • பறக்கும் படைகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

    மதுரை

    தமிழகம் முழுவதும் இன்று 10-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு தொடங்கியது. இந்த தேர்வை சுமார் 9 லட்சத்து 76 ஆயிரம் மாணவ-மாணவிகள் எழுதுகின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

    தேர்வு இன்று (6-ந் தேதி) தொடங்கி வருகிற 20-ந்தேதி வரை நடக்கிறது. முதல் தேர்வாக இன்று தமிழ் மொழி பாட தேர்வு நடந்தது.

    மதுரை மாவட்டத்தில் 38 ஆயிரத்து 945 மாணவ, மாணவிகள் இன்று 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். இதற்காக மாவட்டம் முழு வதும் 145 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தன. காலை 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. தேர்வு பணியில் ஆசிரியர்கள், அலுவலர்கள் என ஆயிர த்துக்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். மேலும் 10-க்கும் மேற்பட்ட தனிப் படைகள் அமைக்கப்பட்டு தேர்வு மையங்களுக்கு நேரில் சென்று கண்காணித்த னர்.

    முன்னதாக தேர்வு மையங்களை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகர், முதன்மை கல்வி அதிகாரி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். தேர்வு மையங்க ளில் மாணவ, மாணவிகளுக்கு தேவைான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டி ருந்தன.

    விருதுநகர் மாவட்டத்தில் இந்த ஆண்டு 12,755 மாணவர்களும், 12,791 மாணவிகளும் மற்றும் தனித்தேர்வர்கள் உள்பட மொத்தம் 25 ஆயிரத்து 776 பேர் 10-ம் வகுப்பு தேர்வை எழுதுகின்றனர். இதற்காக மாவட்டத்தில் 116 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டி ருந்தன.

    இன்று காலை சரியாக 10 மணிக்கு தேர்வு தொடங்கியது. ஆனால் மாணவ- மாணவிகள் 20 நிமிடம் முன்பே தேர்வு அறைக்குள் தீவிர சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். முதன்மை கண்காணிப்பாளர்கள், துறை அலுவலர்கள், அறை கண்காணிப்பா ளர்கள் என 1200-க்கும் மேற்பட்டோர் தேர்வு பணியில் ஈடுபட்டனர்.

    சிவகங்கை மாவட்டத்தில் 8,890 மாணவர்களும், 9,123 மாணவிகள் என மொத்தம் 18 ஆயிரத்து 13 பேர் 10-ம் வகுப்பு தேர்வு எழுதினர். இதற்காக அமைக்கப்பட்டி ருந்த 101 தேர்வு மையங்களில் இன்று காலை தேர்வு தொடங்கியது. தேர்வு பணியில் 1,500க்கும் மேற்பட்டோர் ஈடு படுத்தப்பட்டிருந்தனர்.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று 84 தேர்வு மையங்களில் 8,359 மாணவர்களும், 8,480 மாணவிகளும், 497 தனி தேர்வர்கள் என மொத்தம் 17 ஆயிரத்து 501 பேர் பத்தாம் வகுப்பு தேர்வை எழுதினர். 1264 கண்கா ணிப்பாளர்கள், 84 முதன்மை கண்காணிப்பா ளர்கள், 84 துறை அலு வலர்கள், மற்றும் 148 பணியாளர்கள் தேர்வு பணிக்கு நியமிக்கப்பட்டி ருந்தனர்.

    முதல்முறையாக இன்று அரசு பொதுத்தேர்வை எதிர்கொண்ட பத்தாம் வகுப்பு மாணவ-மாணவி கள் தமிழ் மொழிப்பாட தேர்வை உற்சாகமாக எழுதினர். தேர்வு மையங்க ளுக்கு முன்கூட்டியே வந்தி ருந்த அவர்கள் கடைசி நேர தயாரிப்பில் மும்முரமாக ஈடுபட்டனர். மேலும் ஆசிரியர் ஆசிரியர்களும் மாணவ-மாணவிகளுக்கு தேர்வு எழுதுவது குறித்து விளக்கியதை நேரில் காண முடிந்தது.

    தேர்வு எழுதுபவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்ததால் மாணவ மாணவிகள் தீவிர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். துண்டு தாள் வைத்துக்கொள்வது, பிறரை பார்த்து எழுதுவது, ஆள் மாறாட்டம் போன்ற செயல்களில் ஈடுபட்டால் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், 3 ஆண்டுகள் தேர்வு எழுத நிரந்தர தடை விதிக்கப்படும் என்றும் பள்ளி கல்வித்துறை எச்ச ரித்திருந்தது.

    எனவே 3 மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருந்த பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட னர்.

    • பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
    • 1,206 கோழி பண்ணைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    கோவை,

    கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் ஆழுர் மற்றும் கோட்டயம் பகுதியில் பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப் பட்டுள்ளது.

    அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள கோழி பண்ணைகள் தீவிரமாக கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. திடீரென கோழி இறப்பு அதிகளவில் இருந்தால் உடனடியாக கால்நடை பராமரிப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என பண்ணை உரிமையாளர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து கால் நடை பராமரிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    கேரளாவில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, கோவை மாவட்டத்தில் உள்ள 1,206 கோழி பண்ணைகளில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

    கோவையில் ஒரு பன்முக கால்நடை ஆஸ்பத்திரி, 96 மருந்தகம், 15 கால்நடை ஆஸ்பத்திரிகள், 25 கிளை சென்டர்கள், ஒரு கிளினிக்கல் சென்டர் ஆகியவை உள்ளன. இவற்றில் பணியாற்றும் டாக்டர்கள் மூலம் அருகே உள்ள கோழிப் பண்ணைகளில் தொடர்ந்து சென்று கண்காணிக்கப்பட்டு வருகின்றது. திடீரென ஏராளமான கோழிகள் இறந்தால் உடனடியாக கால்நடை துறையினருக்கு தகவல் தெரிவிக்க பண்ணை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.நீர் நிலைகள் மற்றும் பிற இடங்களில் இடம் பெயர்ந்து வரும் பறவைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

    மேலும், கோவையில் இருந்து கேரளாவிற்கு கோழிகள் கொண்டு செல்ல தடையின்மை சான்றிதழ் அளிக்கப்படுகிறது. கோழி பண்ணைகளை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாதிப்பு வந்தால் 6 மாத காலம் அதன் தாக்கம் இருக்கும்.

    இதனால், முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வாளையாறு, மீனாட்சி புரம் உள்ளிட்ட 12 இடங்களில் உள்ள சோதனைச் சாவடிகளில் வாகன கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. தற்போது வரை கோவையில் எந்த பகுதியிலும் பறவைக்காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்படவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • உபரி நீர் விநாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடி தண்ணீர், காவிரி ஆறு மற்றும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது.
    • கொள்ளிடக் கரை பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கர்நாடக மாநிலத்தில் கடும்மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு அதிக அளவில்தண்ணீர்வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவான120 அடியை எட்டிய நிலையில், உபரி நீர் விநாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடி தண்ணீர், காவிரி ஆறு மற்றும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது. பவானிசாகர்பகுதியில் பெய்யும் மழையும், கொள்ளிடம் ஆற்று பகுதியில் பெய்யும் மழை நீருடன் சேர்ந்த உபரி நீரும் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. கீழணை யில் 8 அடி தண்ணீ ரை மட்டுமே தேக்க முடியும் என்பதால் நேற்று முன்தி னம் மதியம் விநாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடிதண்ணீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனா ல்கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு வெள்ள நீர் சென்றது. மேலும் கொள்ளிட ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    ஆற்றில் வெள்ள நீர் செல்வதால் சிதம்பரம் அருகே தீவு கிராமங்களான அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம்,திட்டுக்காட்டூர்,கீழ குண்டலபாடி ஆகிய கிராமங்களில் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இப்பகுதி மக்கள் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வருகிறது. இக்கிராமங்களில் வருவாய்,வளர்ச்சித்துறை ஊரக அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். மேலும் நீர்வளத்துறை கொள்ளிடம் வடிநில கோட்ட சிதம்பரம் செயற்பொ றியாளர் காந்தருபன் தலைமையில் உதவி செய ற்பொறியாளர் அணை க்கரை குமார், சிதம்பரம் ஞானசேகர் மற்றும் உதவிப்பொறியாளர்கள், நீர்வளத்துறை பணியாளர்கள் கொண்ட குழுவினர் கொள்ளிடக் கரை பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    ×