search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கொள்ளிடத்தில் 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு: தீவு கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்
    X

    கொள்ளிடத்தில் 2 லட்சம் கனஅடி நீர் திறப்பு: தீவு கிராமங்களை சூழ்ந்த வெள்ளம்

    • உபரி நீர் விநாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடி தண்ணீர், காவிரி ஆறு மற்றும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது.
    • கொள்ளிடக் கரை பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    கடலூர்:

    கர்நாடக மாநிலத்தில் கடும்மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு அதிக அளவில்தண்ணீர்வந்து கொண்டிருக்கிறது. மேட்டூர் அணை முழு கொள்ளளவான120 அடியை எட்டிய நிலையில், உபரி நீர் விநாடிக்கு 1 லட்சத்து 95 ஆயிரம் கன அடி தண்ணீர், காவிரி ஆறு மற்றும் கொள்ளிடத்தில் திறந்து விடப்படுகிறது. பவானிசாகர்பகுதியில் பெய்யும் மழையும், கொள்ளிடம் ஆற்று பகுதியில் பெய்யும் மழை நீருடன் சேர்ந்த உபரி நீரும் அதிக அளவில் வந்து கொண்டிருக்கிறது. கீழணை யில் 8 அடி தண்ணீ ரை மட்டுமே தேக்க முடியும் என்பதால் நேற்று முன்தி னம் மதியம் விநாடிக்கு 2 லட்சத்து 20 ஆயிரம் கன அடிதண்ணீர் கொள்ளிடத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனா ல்கொள்ளிடம் ஆற்றில் கரைபுரண்டு வெள்ள நீர் சென்றது. மேலும் கொள்ளிட ஆற்றின் கரையோர கிராம மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    ஆற்றில் வெள்ள நீர் செல்வதால் சிதம்பரம் அருகே தீவு கிராமங்களான அக்கரை ஜெயங்கொண்டப்பட்டினம்,திட்டுக்காட்டூர்,கீழ குண்டலபாடி ஆகிய கிராமங்களில் குடியிருப்பு பகுதியில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இப்பகுதி மக்கள் புயல் பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டு, உணவு வழங்கப்பட்டு வருகிறது. இக்கிராமங்களில் வருவாய்,வளர்ச்சித்துறை ஊரக அதிகாரிகள் முகாமிட்டுள்ளனர். மேலும் நீர்வளத்துறை கொள்ளிடம் வடிநில கோட்ட சிதம்பரம் செயற்பொ றியாளர் காந்தருபன் தலைமையில் உதவி செய ற்பொறியாளர் அணை க்கரை குமார், சிதம்பரம் ஞானசேகர் மற்றும் உதவிப்பொறியாளர்கள், நீர்வளத்துறை பணியாளர்கள் கொண்ட குழுவினர் கொள்ளிடக் கரை பகுதியில் முகாமிட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

    Next Story
    ×