search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஸ்டால்கள்"

    • 98-வது வாவுபலி பொருட் காட்சி நேற்று மாலை தொடங்கியது.
    • பொருட்காட்சி திடலில் உள்ள பக்க காட்சி ஸ்டால்கள் திறந்து வைக்கப்பட்டது

    கன்னியாகுமரி :

    குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி ஆடி அமாவாசையை ஒட்டி நடைபெற்று வருகிறது இவ்வாண்டு நடைபெறும் 98-வது வாவுபலி பொருட் காட்சி நேற்று மாலை தொடங்கியது.

    நகராட்சி சேர்மன் பொன். ஆசைத்தம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் தொடர்ந்து வி.எல்.சி. திருமண மண்ட பத்தில் தொடக்க விழா நடைபெற்றது.

    நகராட்சி சேர்மன் பொன், ஆசைதம்பி தலை மை தாங்கினார். துணை தலைவர் பிரபின் ராஜா முன்னிலை வகித்தார். பக்க காட்சி காண்டிராக்டர் பால்ராஜ், திருவட்டார் பஞ். யூனியன் தலைவர் ஜெகநாதன், முன்னாள் எம்.பி. தி.மு.க மகளிர் அணி மாநில அமைப்பாளர் ஹெலன் டேவிட்சன், மேல்புறம் முன்னாள் ஒன்றிய செயலாளர் சிற்றார் ரவிச்சந்திரன், வர்த்தக அணி நகர தலைவர் ஷாஜி லால், உண்ணாமலைக்கடை பஞ். தலைவர் பமலா, என்ஜினியர் பேரின்பம், கவுன்சிலர்கள் ஜெயந்தி, ஷாலின் சுஜாதா, ஜூலியட் மெர்லின் ரூத், மெர்லின் தீபா, லலிதா, லில்லி புஷ்பம், ஆட்லின் கெனில், ரீகன், விஜு, ரத்தின மணி, விஜயலட்சுமி, அருள்ராஜ், மினி குமாரி, ஜலீலா ராணி, ரவி, சர்தார் ஷா, ஜெயின் சாந்தி, செல்வகுமாரி, றோஸ்லெட், வக்கில் ஷாஜி குமார் மற்றும் நகர வர்த்தக சங்க துணைத் தலைவர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆணையாளர் ராமதில கம் நன்றி கூறினார்

    பொருட்காட்சி திடலில் உள்ள பக்க காட்சி ஸ்டால்கள் திறந்து வைக்கப்பட்டது பக்க காட்சியை இளைஞரணி மாவட்ட செயலாளர் ஜெகநாதன் திறந்து வைத்தார்.

    பொருட்காட்சி வரும் 21-ந் தேதி வரை 20 நாள்கள் நடைபெறுகிறது பொருட்காட்சி முக்கிய தினமான ஆடி அமாவாசை வரும் 16-ந் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது இன்று முதல் கபடி போட்டி ஆரம்பமாகிறது.

    • மதுரை, விருதுநகர், ராமநாதபுரம் ரெயில் நிலையங்களில் உள்ளூர் பொருட்கள் ஸ்டால்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.
    • மனு விண்ணப்பங்களை நாளைக்குள் அலுவலகத்தில் அளிக்கலாம்.

    மதுரை

    மதுரை கோட்ட ரெயில் நிலையங்களில் உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க "ஒரு நிலையம்- ஒரு பொருள்" திட்டத்தின் கீழ் இலவச இடம் தரப்பட்டு விற்பனை நடந்து வருகிறது.

    இதன்படி கடந்த மாதம் 23-ந் தேதி முதல் கோவில்பட்டி, தூத்துக்குடி, ராமநாதபுரம், திருச்செந்தூர், நெல்லை, திருமங்கலம், திண்டுக்கல், மதுரை ஆகிய ரெயில் நிலையங்களில் முறையே கடலை மிட்டாய், மக்ரூன், கருவாடு, பனை பொருட்கள், கைலி, சின்னாளபட்டி சேலைகள், சுங்குடி சேலைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இங்கு கடந்த 2-ந் தேதி வரை 10 நாட்களில் திருச்செந்தூர், நெல்லை ரெயில் நிலையங்களில் ரூ.2லட்சத்து 81 ஆயிரத்து 960 மதிப்பு உள்ள பனை பொருட்கள் விற்பனை ஆகி உள்ளன. மதுரையில் ரூ.1லட்சத்து 84ஆயிரத்து 660 மதிப்பு உள்ள சுங்குடி சேலைகள் விற்கப்பட்டுள்ளன.

    மீதம் உள்ள ரெயில் நிலையங்களில் கடந்த 10 நாட்களில் ரூ.6லட்சத்து 91ஆயிரத்து 473 மதிப்பு உள்ள பொருட்கள் விற்கப்பட்டு உள்ளன.

    ராமேசுவரம், விருதுநகர், தென்காசி, காரைக்குடி, பழனி, பரமக்குடி, சாத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சங்கரன்கோவில், செங்கோட்டை, மானாமதுரை, புதுக்கோட்டை, சிவகங்கை, ஸ்ரீவில்லிபுத்தூர், கொடை ரோடு, திருமங்கலம், ஒட்டன்சத்திரம், அம்பாசமுத்திரம், மணப்பாறை, புனலூர், கொட்டாரக்கரா, மதுரை, நெல்லை, திருச்செந்தூர், திண்டுக்கல், தூத்துக்குடி, கோவில்பட்டி, ராமநாதபுரம், திருமங்கலம் ஆகிய ரெயில் நிலையங்களில் முறையே கடல்பாசி, சேவு, பத்தமடை பாய், கைத்தறி சேலை, பஞ்சாமிர்தம், கைத்தறி சேலை, ஆயத்த ஆடை, பேப்பர் பொருட்கள், விவசாய விளை பொருட்கள், மூங்கில் இருக்கைகள், மண்பாண்ட பொருட்கள், பலாப்பழம், செட்டிநாடு கொட்டான், பால்கோவா, பன்னீர் திராட்சை, மல்லிகை மலர், வெண்ணை, மர விளையாட்டு பொருட்கள், முறுக்கு, மிளகு, முந்திரி, சுங்குடி சேலை, பனை பொருட்கள், சின்னாளபட்டி சேலை, மக்ரூன், கடலை மிட்டாய், கருவாடு, கைலி போன்ற பொருட்களை வருகிற 8-ந் தேதி முதல் 15 நாட்களுக்கு மீண்டும் விற்பனை செய்ய விருப்ப மனு கோரப்பட்டு உள்ளது.

    கைவினை மற்றும் கைத்தறி வளர்ச்சி ஆணையர் அல்லது மத்திய மாநில அரசு வழங்கிய அடையாள அட்டை வைத்திருப்போர், பதிவு பெற்ற சுய உதவி குழுக்கள், பதிவு பெற்ற சிறு தொழில் நிறுவனம், பழங்குடி கூட்டுறவு வர்த்தக வளர்ச்சி கூட்டமைப்பில் பதிவுபெற்ற நெசவாளர் ஆகியோர் விருப்ப மனு விண்ணப்பங்களை www.sr.indianrail.gov.in இணையதளத்தில் தரவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விருப்ப மனு விண்ணப்பங்களை நாளை (5-ந் தேதி) காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை மதுரை கோட்ட வர்த்தக பிரிவு அலுவலகத்தில் அளிக்கலாம்.

    அன்று மாலை 3.30 மணிக்கு தகுதி பெற்ற நபர் அல்லது நிறுவனம் தேர்வு செய்து அறிவிக்கப்படும். விவரங்களுக்கு 9003862967 அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

    மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ரெயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

    ×