search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழித்துறை 98-வது வாவுபலி பொருட்காட்சி தொடங்கியது
    X

    குழித்துறை 98-வது வாவுபலி பொருட்காட்சி தொடங்கியது

    • 98-வது வாவுபலி பொருட் காட்சி நேற்று மாலை தொடங்கியது.
    • பொருட்காட்சி திடலில் உள்ள பக்க காட்சி ஸ்டால்கள் திறந்து வைக்கப்பட்டது

    கன்னியாகுமரி :

    குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் வாவுபலி பொருட்காட்சி ஆடி அமாவாசையை ஒட்டி நடைபெற்று வருகிறது இவ்வாண்டு நடைபெறும் 98-வது வாவுபலி பொருட் காட்சி நேற்று மாலை தொடங்கியது.

    நகராட்சி சேர்மன் பொன். ஆசைத்தம்பி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார் தொடர்ந்து வி.எல்.சி. திருமண மண்ட பத்தில் தொடக்க விழா நடைபெற்றது.

    நகராட்சி சேர்மன் பொன், ஆசைதம்பி தலை மை தாங்கினார். துணை தலைவர் பிரபின் ராஜா முன்னிலை வகித்தார். பக்க காட்சி காண்டிராக்டர் பால்ராஜ், திருவட்டார் பஞ். யூனியன் தலைவர் ஜெகநாதன், முன்னாள் எம்.பி. தி.மு.க மகளிர் அணி மாநில அமைப்பாளர் ஹெலன் டேவிட்சன், மேல்புறம் முன்னாள் ஒன்றிய செயலாளர் சிற்றார் ரவிச்சந்திரன், வர்த்தக அணி நகர தலைவர் ஷாஜி லால், உண்ணாமலைக்கடை பஞ். தலைவர் பமலா, என்ஜினியர் பேரின்பம், கவுன்சிலர்கள் ஜெயந்தி, ஷாலின் சுஜாதா, ஜூலியட் மெர்லின் ரூத், மெர்லின் தீபா, லலிதா, லில்லி புஷ்பம், ஆட்லின் கெனில், ரீகன், விஜு, ரத்தின மணி, விஜயலட்சுமி, அருள்ராஜ், மினி குமாரி, ஜலீலா ராணி, ரவி, சர்தார் ஷா, ஜெயின் சாந்தி, செல்வகுமாரி, றோஸ்லெட், வக்கில் ஷாஜி குமார் மற்றும் நகர வர்த்தக சங்க துணைத் தலைவர் செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ஆணையாளர் ராமதில கம் நன்றி கூறினார்

    பொருட்காட்சி திடலில் உள்ள பக்க காட்சி ஸ்டால்கள் திறந்து வைக்கப்பட்டது பக்க காட்சியை இளைஞரணி மாவட்ட செயலாளர் ஜெகநாதன் திறந்து வைத்தார்.

    பொருட்காட்சி வரும் 21-ந் தேதி வரை 20 நாள்கள் நடைபெறுகிறது பொருட்காட்சி முக்கிய தினமான ஆடி அமாவாசை வரும் 16-ந் தேதி அனுஷ்டிக்கப்படுகிறது இன்று முதல் கபடி போட்டி ஆரம்பமாகிறது.

    Next Story
    ×