search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஷான்டோ"

    • வங்காளதேச அணி கேப்டன் ஷான்டோ ஆட்டமிழக்காமல் 122 ரன்கள் விளாசினார்.
    • முஷ்பிகுர் ரஹிம் ஆட்டமிழக்காமல் 73 ரன்கள் சேர்த்தார்.

    வங்காளதேசம்- இலங்கை அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி நேற்று வங்காளதேசம் சட்டோகிராமில் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 48.5 ஓவரில் 255 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. ஜனித் லியானகே அதிகபட்சமாக 66 பந்தில் 67 ரன்கள் சேர்த்தார்.

    விக்கெட் கீப்பரும் பேட்ஸ்மேனுமான குசால் மெண்டிஸ் 75 பந்தில் 59 ரன்கள் எடுத்தார். வங்காளதேச அணி சார்பில் ஷொரிபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது, தன்ஜிம் ஹசன் ஷாகிப் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    பின்னர் 256 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்காளதேசம் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர் லிட்டோன் தாஸ் ரன்ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். மற்றொரு தொடக்க வீரர் சவுமியா சர்கார் 3 ரன்னில் வெளியேறினார்.

    ஆனால் கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    சதம் விளாசிய ஷான்டோ

    தவ்ஹித் ஹ்ரிடோய் (3), மெஹ்முதுல்லா (37) ஆட்டமிழந்த நிலையில் ஷான்டோ உடன் முஷ்பிகுர் ரஹிம் ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அபாரமாக விளையாடி அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது.

    ஷான்டோ 122 ரன்கள் எடுத்தும், ரஹிம் 73 ரன்கள் எடுத்தும் ஆட்டமிழக்காமல் இருக்க வஙகாளதேசம் அணி 44.4 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 257 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஷான்டோ- முஷ்பிகுர் ரஹிம் ஜோடி 165 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

    இதன்மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என வங்காளதேச அணி முன்னிலைப் பெற்றுள்ளது. 2-வது டி20 போட்டி 15-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி 18-ந்தேதியும் நடைபெறுகிறது.

    • ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்த சாதனையைப் படைத்த முதல் பேட்டர் ஷான்டோ ஆவார்.
    • இது ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷான்டோவின் நான்காவது சதமாகும்.

    ஆப்கானிஸ்தான் - வங்காளதேசம் அணிகள் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி 14-ந் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி முதலில் பேட்டிங் செய்த வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 382 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணி 146 ரன்னில் ஆல் அவுட் ஆனது.

    இதனால் வங்காளதேசம் அணி 236 ரன்கள் முன்னிலையுடன் விளையாடியது. நேற்றைய 2-வது நாள் ஆட்ட நேர முடிவில் வங்காளதேசம் அணி 23 ஓவர்களில் 1 விக்கெட்டை இழந்து 134 ரன்கள் எடுத்தது.

    இதனையடுத்து 3-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. ஜாகிர் ஹசன்54 ரன்னிலும் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ 54 ரன்னிலும் ஆட்டத்தை தொடங்கினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஷான்டோ சதம் அடித்து அசத்தினார்.

    இதன் மூலம் இரு இன்னிங்சிலும் சதம் அடித்த 2-வது வங்காளதேச வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இரு இன்னிங்சிலும் சதம் அடித்த முன்னாள் வங்காளதேச கேப்டனான மோமினுலுடன் அவர் இந்த சாதனையை பகிர்ந்துள்ளார்.

    இலங்கைக்கு எதிரான 2018-ம் ஆண்டு சிட்டகாங்கில் நடந்த டெஸ்ட் போட்டியில் மோமினுல், முதல் இன்னிங்சில் 176 ரன்களும் 2-வது இன்னிங்சில் 105 ரன்களை எடுத்திருந்தார்.

    இதற்கிடையில், ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக இந்த சாதனையைப் படைத்த முதல் பேட்டர் ஷான்டோ ஆவார்.

    இது ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட்டில் ஷான்டோவின் நான்காவது சதமாகும்.

    ×