search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வேளாண் கல்லூரி மாணவிகள்"

    • அந்தியூர் வட்டாரத்தில் வேளாண்மை அறிவியல் கல்லூரியை சேர்ந்த மாணவிகள் விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து வருகின்றனர்.
    • பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தை தூய்மை செய்யும் பணியிலும் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டு சிறப்பான முறையில் செய்தனர்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரத்தில் ஜே.கே.கே. முனிராஜா வேளாண்மை அறிவியல் கல்லூரியை சேர்ந்த 4-ம் ஆண்டு மாணவிகள் தங்கள் திட்டத்தின் கீழ் 75 நாட்கள்அந்தியூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் செய்து வருகின்றனர்.

    விவசாயம் சார்ந்த தொழில்நுட்பங்களை கற்று கொடுத்தல், மண் மாதிரி எடுத்தல், ஜீவாமிர்தம் தயாரிப்பு முறை, வாழைக்கன்று நேர்த்தி பண்ணை, குட்டை அமைத்தல், சூரிய ஒளி உலர்த்தி, உயிர் உரம் ஆகியவற்றை பற்றி விவசாயிகளிடத்தில் எடுத்து கூறும் வகையில் பச்சாம்பாளையம், கீழ்வாணி, அந்தியூர் ஒழுங்குமுறை விற்பனை கூடம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று விவசாயிகளிடத்தில் செயல்முறை விளக்கம் செய்து காண்பித்தனர்.

    மேலும் அந்தியூரில் புகழ் பெற்ற பத்ரகாளியம்மன் கோவில் வளாகத்தை தூய்மை செய்யும் பணியிலும் கல்லூரி மாணவிகள் ஈடுபட்டு சிறப்பான முறையில் செய்தனர்.

    இதில் காவியா, கீர்த்தனா, கவுசல்யா, காவியாஸ்ரீ, மதிமிதா, கீர்த்தனா, மாளவிகா, கவுசல்யா, மரியா தெரஸ்மனோஜ், மேக்னா விஸ்வின், மோனிகா உள்ளிட்ட மாணவிகள் செய்திருந்தார்கள்.

    • பெரியகுளம் அருகே வேளாண் கல்லூரி மாணவிகளுக்கு விவசாய தோட்டத்தில் பயிற்சி அளிக்கப்பட்டது.
    • உதவி தோட்டக்கலை அலுவலர் ரெங்கராஜன் கலந்து கொண்டு விவசாய திட்டங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

    பெரியகுளம்:

    பெரியகுளம் அருகே வடுகபட்டியில் கிராம தங்கள் திட்டத்தின் கீழ் கலசலிங்கம் வேளாண் தொழில்நுட்ப கல்லூரி மாணவிகள் அபிதாஸ்ரீ, அருணா, தீபிகா, வினோதினி, சந்தனா, மதுப்ரியா, ஸ்ரீ வர்ஷா, ராஜாசரஸ்வதி, யோகேஸ்வரி, சுஜிமாலினி, அஞ்சலிகா ஆகியோர் நேரடியாக விவசாயிகளின் தோட்டத்திற்கு சென்று வயல்வெளி பயிற்சி மற்றும் செய்முறைகள் பயன்கள் பற்றி பயின்று வருகின்றனர்.

    மேலும் கொய்யா இலைகளில் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் அஸ்வினி பூச்சிகளை கட்டுப்படுத்துவதற்காக மஞ்சள் ஒட்டும் பொறி அட்டையை தயார் செய்யும் முறையினை காண்பித்தனர்.

    இதில் பெரியகுளம் தோட்டக்கலை உதவி இயக்குனர் ஜாஸ்மின், தோட்டக்கலை அலுவலர் சரவணன் ஆகியோர் அறிவுறுத்தலின் கீழ் உதவி தோட்டக்கலை அலுவலர் ரெங்கராஜன் கலந்து கொண்டு விவசாய திட்டங்கள் குறித்து கல்லூரி மாணவிகளுக்கு எடுத்துரைத்தார்.

    ×