search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெவ்வேறு விபத்துக்கள்"

    • திருமங்கலம் அருகே நடந்த வெவ்வேறு விபத்துக்களில் தொழிலாளி உள்பட 2 பேர் பலியானார்கள்.
    • டி. கல்லுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கள்ளிக்குடியைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 42). தொழிலாளியான இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

    சம்பவத்தன்று சரவணன் கள்ளிக்குடி 4 வழிச்சாலையை கடக்க முயன்றார் அப்போது அந்த வழியாக வேகமாக வந்த கார் அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட சரவணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து கள்ளிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து கார் டிரைவர் ஜீவன் ஆகாஷ் என்பவரிடம் விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள முதலிப்பட்டியை சேர்ந்தவர் காளி ரத்தினம். சம்பவத் தன்று இவர் தனது மனைவியுடன் மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள சாப்டூரில் நடந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார். பின்னர் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் ஊருக்கு புறப்பட்டனர்.

    எம். சுப்புலாபுரம் எரிச்சநத்தம் நேரக்கோவில் பகுதியில் வந்தபோது சாலையின் குறுக்கே நாய் சென்றது. இதனால் நிலைகுலைந்த மோட்டார் சைக்கிள் தடுமாறி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த காளிரத்தினம் பரிதாபமாக இறந்தார். டி. கல்லுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் டிரைவர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
    • கிருஷ்ணன் கோவில், ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள குன்னூரை சேர்ந்த வர் முனீஸ்வரன் (வயது29), ஆட்டோ டிரைவரான இவர், சம்பவத்தன்று பெண் பயணியை ஏற்றிக்கொண்டு சவாரி புறப்பட்டார். வத்திராயிருப்பு ரோட்டில் சென்றபோது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் படுகாய மடைந்த முனீஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

    ஆட்டோவில் பயணம் செய்த கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த பேராசிரியை சைலஜா காயமடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீ சார் விசாரித்து வருகின்றனர்.

    திருத்தங்கல் கங்கா குளத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(வயது23). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அங்குள்ள மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த கண்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் வெற்றி கணேஷ்(26). இவர் சம்ப வத்தன்று தூத்துக்குடி -மதுரை ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்குள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி கீழே விழுந்தது. இதில் படுகாய மடைந்த வெற்றி கணேஷ் பரிதாபமாக இறந்தார். ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×