என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Different accidents"

    • விருதுநகர் மாவட்டத்தில் வெவ்வேறு விபத்துகளில் டிரைவர் உள்பட 3 பேர் பலியானார்கள்.
    • கிருஷ்ணன் கோவில், ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    வத்திராயிருப்பு அருகே உள்ள குன்னூரை சேர்ந்த வர் முனீஸ்வரன் (வயது29), ஆட்டோ டிரைவரான இவர், சம்பவத்தன்று பெண் பயணியை ஏற்றிக்கொண்டு சவாரி புறப்பட்டார். வத்திராயிருப்பு ரோட்டில் சென்றபோது ஆட்டோ கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்தது. இதில் படுகாய மடைந்த முனீஸ்வரன் பரிதாபமாக இறந்தார்.

    ஆட்டோவில் பயணம் செய்த கிருஷ்ணன் கோவிலை சேர்ந்த பேராசிரியை சைலஜா காயமடைந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீ சார் விசாரித்து வருகின்றனர்.

    திருத்தங்கல் கங்கா குளத்தைச் சேர்ந்தவர் கண்ணன்(வயது23). இவர் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஒரு ஓட்டலில் பணியாற்றி வந்தார். சம்பவத்தன்று அங்குள்ள மாடிப்படியில் இருந்து தவறி விழுந்து படுகாயமடைந்த கண்ணன் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    காரியாபட்டி என்.ஜி.ஓ. நகரை சேர்ந்தவர் வெற்றி கணேஷ்(26). இவர் சம்ப வத்தன்று தூத்துக்குடி -மதுரை ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அங்குள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகே சென்ற போது மோட்டார் சைக்கிள் நிலைத்தடுமாறி கீழே விழுந்தது. இதில் படுகாய மடைந்த வெற்றி கணேஷ் பரிதாபமாக இறந்தார். ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • பைக், ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து நடைபெற்றது.
    • இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே போடியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (28). தேனி மெயின்ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தினேஷ்குமார் படுகாயம் அடைந்து போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்ப ட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப ட்டது. இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்ப திவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    போடியை சேர்ந்தவர் சிந்தாமணி (70). ராசிங்கா புரம்-மல்லிங்காபுரம் சாலையில் நின்று கொண்டி ருந்தார். அப்போது ஒரு ஜீப் பின்பக்கமாக எடுத்த போது எதிர்பாராத விதமாக சிந்தாமணி மீது மோதியது. இதில் அவர் காயமடைந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சடையாண்டி (39). இவர் தனது நண்பர் முத்துவேல் (42) என்பவருடன் பஸ்நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணன் என்பவர் எதிரே ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

    பெரியகுளத்தை சேர்ந்தவர் ராமன் (60). இவரது மனைவி சரஸ்வதி (52). இவர்கள் பழைய இரும்பு சாமான்கள் மற்றும் காலி பாட்டில்கள் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று வத்தலக்குண்டு-பெரிய குளம் சாலையில் பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே நின்று கொண்டி ருந்தபோது அவ்வழியாக வந்த பைக் மோதியதில் படுகாயம் அடைந்தார். பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டு பின்னர் மேல்சிகி ச்சைக்காக தேனி மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரியகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×