search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேனி அருகே வெவ்வேறு விபத்துகளில் 6 பேர் படுகாயம்
    X

    கோப்பு படம்.

    தேனி அருகே வெவ்வேறு விபத்துகளில் 6 பேர் படுகாயம்

    • பைக், ஜீப் மற்றும் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து நடைபெற்றது.
    • இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே போடியை சேர்ந்தவர் தினேஷ்குமார் (28). தேனி மெயின்ரோட்டில் பெட்ரோல் பங்க் அருகே சாலையை கடக்க முயன்ற போது அவ்வழியாக வந்த கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இதில் தினேஷ்குமார் படுகாயம் அடைந்து போடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்ப ட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ப ட்டது. இதுகுறித்து போடி நகர் போலீசார் வழக்குப்ப திவு செய்து விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவரை தேடி வருகின்றனர்.

    போடியை சேர்ந்தவர் சிந்தாமணி (70). ராசிங்கா புரம்-மல்லிங்காபுரம் சாலையில் நின்று கொண்டி ருந்தார். அப்போது ஒரு ஜீப் பின்பக்கமாக எடுத்த போது எதிர்பாராத விதமாக சிந்தாமணி மீது மோதியது. இதில் அவர் காயமடைந்தார். இதுகுறித்து போடி தாலுகா போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    உத்தமபாளையத்தை சேர்ந்தவர் சடையாண்டி (39). இவர் தனது நண்பர் முத்துவேல் (42) என்பவருடன் பஸ்நிலையம் அருகே உள்ள பெட்ரோல் பங்க் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணன் என்பவர் எதிரே ஓட்டிவந்த மோட்டார் சைக்கிள் அவர்கள் மீது மோதியது. இதில் 3 பேரும் காயம் அடைந்தனர். இதுகுறித்து உத்தமபாளையம் போலீசில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

    பெரியகுளத்தை சேர்ந்தவர் ராமன் (60). இவரது மனைவி சரஸ்வதி (52). இவர்கள் பழைய இரும்பு சாமான்கள் மற்றும் காலி பாட்டில்கள் சேகரித்து விற்பனை செய்து வருகின்றனர். சம்பவத்தன்று வத்தலக்குண்டு-பெரிய குளம் சாலையில் பழைய ஆர்.டி.ஓ. அலுவலகம் அருகே நின்று கொண்டி ருந்தபோது அவ்வழியாக வந்த பைக் மோதியதில் படுகாயம் அடைந்தார். பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்க ப்பட்டு பின்னர் மேல்சிகி ச்சைக்காக தேனி மற்றும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து பெரியகுளம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×