search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ளி தேர்"

    • மருதுபாண்டியர்கள் அளித்த வெள்ளி தேரில் திருஞான சம்பந்தர் வீதி உலா வந்தார்.
    • ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள மதுரை ஆதீனம் மடத்தை நிறுவியவர் திருஞான சம்பந்தர். இவரது குருபூஜை விழா வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் கொண்டா டப்படும்.

    அதன்படி இந்த ஆண்டு குருபூஜை விழா நடந்தது. இதை முன்னிட்டு சிவகங்கையை ஆண்ட மருதுபாண்டியர்கள் மதுரை ஆதீனத்திற்கு காணிக்கை யாக அளித்த வெள்ளி தேரில் திருஞான சம்பந்தர் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இந்த வெள்ளி தேர் கோ ரதம் என அழைக்கப்படுகிறது.

    இந்த தேர் முன்பு 2 மாடுகள் பூட்டப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின் தேரில் திருஞான சம்பந்தர் எழுந்தருளினார். மேளதாளம் முழங்க மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுர வாயில் மண்டபத்தில் இருந்து கீழ ஆவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீனம் மடம் தெற்கு நுழைவுவாயிலை அடைந்தது. தொடர்ந்து மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள், சேர்வைக்கார மண்டகப்படி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    ×