search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "silver chariot"

    • மருதுபாண்டியர்கள் அளித்த வெள்ளி தேரில் திருஞான சம்பந்தர் வீதி உலா வந்தார்.
    • ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார்.

    மதுரை

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள மதுரை ஆதீனம் மடத்தை நிறுவியவர் திருஞான சம்பந்தர். இவரது குருபூஜை விழா வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் கொண்டா டப்படும்.

    அதன்படி இந்த ஆண்டு குருபூஜை விழா நடந்தது. இதை முன்னிட்டு சிவகங்கையை ஆண்ட மருதுபாண்டியர்கள் மதுரை ஆதீனத்திற்கு காணிக்கை யாக அளித்த வெள்ளி தேரில் திருஞான சம்பந்தர் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இந்த வெள்ளி தேர் கோ ரதம் என அழைக்கப்படுகிறது.

    இந்த தேர் முன்பு 2 மாடுகள் பூட்டப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. அதன் பின் தேரில் திருஞான சம்பந்தர் எழுந்தருளினார். மேளதாளம் முழங்க மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுர வாயில் மண்டபத்தில் இருந்து கீழ ஆவணி மூல வீதியில் உள்ள மதுரை ஆதீனம் மடம் தெற்கு நுழைவுவாயிலை அடைந்தது. தொடர்ந்து மதுரை ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார்.

    இந்த நிகழ்ச்சியில் பக்தர்கள், சேர்வைக்கார மண்டகப்படி நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • கண்ணுடையநாயகி அம்மன் வெள்ளி ரதத்தில் எழுந்தருளினார்.
    • இன்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் தேரோட்டம் நடந்தது.

    காளையார்கோவில்

    சிவகங்கை மாவட்டம் நாட்டரசன் கோட்டையில் கண்ணுடையநாயகி அம்மன் கோவில் உள்ளது. தென் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில் முக்கியமான கோவிலாகும்.

    இங்கு கடந்த மே மாதம் 24-ந் தேதி வைகாசி திருவிழா கொடியேற்றத்து டன் விழா தொடங்கியது. 11 நாட்கள் நடைபெறும் விழாவில் முக்கிய விழாவான வெள்ளி ரத புறப்பாடு நேற்று இரவு நடைபெற்றது.

    வண்ண மலர்களாலும் வண்ணமின் விளக்கு களாலும் அலங்கரிக்கப் பட்டவெள்ளி தேரில் தேரோடும் வீதிகளில் கண்ணுடைய நாயகி அம்மன் பவனி வந்தார். விழாவில் தென் மாவட்டங்க ளில் இருந்தும் மலேசியா சிங்கப்பூர் மற்றும் வெளி நாடு நகரத்தார் பிரமுகர்கள் கலந்து கொண்டார்கள்.

    இன்றுவெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் தேரோட்டம் நடந்தது. விழா ஏற்பாடுகளை சிவகங்கை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணி மதுராந்தகிநாச்சியார் உத்திரவின் பேரில் தேவஸ்தான மேலாளர் பா. இளங்கோ, கண்காணிப் பாளர் ஜெயகணேசன், மற்றும் விழாக் குழுவினர் செய்திருந்தார்கள்.

    முன்னதாக பக்தர்கள் காவடி எடுத்தும் கரும்பு தொட்டில் கட்டியும், முடி இறக்கி தங்களது வேண்டு தலை நிறைவேற்றினார்கள்.

    ×