search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vethi Ula"

    • சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நாளை நடைபெறும்.
    • பச்சை சாத்தி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம்.

    திருச்செந்தூர்:

    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 4-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி-அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

    கோலாகலமாக நடந்து வரும் இந்த விழாவின் 8-ம் நாளான நேற்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 5 மணியளவில் சுவாமி சண்முகர் வெள்ளை நிற பட்டு அணிந்து, வெண்ணிற மலர்கள் சூடி பெரிய வெள்ளி சப்பரத்தில் வெள்ளை சாத்தி கோலத்தில் எழுந்தருளி, பிரம்மா அம்சமாக வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    பின்னர் மேலக்கோவில் சென்ற சுவாமிக்கு தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து பந்தல் மண்டபத்தில் பச்சை சாத்தி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி சண்முகருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி மகா தீபாராதனை நடந்தது. மதியம் 12.05 மணியளவில் சுவாமி சண்முகர்- வள்ளி, தெய்வானை அம்பாள்களுடன் பச்சை நிற கடைசல் சப்பரத்தில் பச்சை நிற பட்டாடை அணிந்து, பச்சை நிற மலர்கள் சூடி பச்சை சாத்தி கோலத்தில் பெருமாள் அம்சமாக எழுந்தருளினார்.

    பின்னர் ௮ வீதிகளிலும் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம், 10-ம் நாளான நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்கு நடக்கிறது. முதலில் விநாயகர் எழுந்தருளிய தேரும், பின்னர் சுவாமி குமரவிடங்க பெருமான், வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் எழுந்தருளிய தேரும் 4 ரத வீதிகளில் பவனி வருகிறது. தொடர்ந்து வள்ளி அம்பாள் எழுந்தருளிய தேரானது ரத வீதிகளில் பவனி வந்து நிலையை சேர்கிறது.

    விழா ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழு தலைவர் அருள்முருகன், அறங்காவலர்கள் அனிதா குமரன், கணேசன், ராமதாஸ், செந்தில் முருகன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்துள்ளனர்.

    • ஓம் சீற்றம் கொண்டாய் போற்றி ஓம் சுந்தரவல்லி போற்றி
    • ஓம் தாட்சாயணிதேவி போற்றி ஓம் திரிபுரசுந்தரி போற்றி

    1. ஓம் அங்காள அம்மையேபோற்றி

    2. ஓம் அருளின் உருவேபோற்றி

    3. ஓம் அம்பிகை தாயேபோற்றி

    4. ஓம் அன்பின் வடிவேபோற்றி

    5. ஓம் அனாத ரட்சகியேபோற்றி

    6. ஓம் அருட்பெருட்ஜோதியேபோற்றி

    7. ஓம் அன்னப்பூரணியேபோற்றி

    8. ஓம் அமுதச் சுவையேபோற்றி

    9. ஓம் அருவுரு ஆனவளேபோற்றி

    10. ஓம் ஆதி சக்தியேபோற்றி

    11. ஓம் ஆதிப்பரம் பொருளேபோற்றி

    12. ஓம் ஆதிபராசக்தியேபோற்றி

    13. ஓம் ஆனந்த வல்லியேபோற்றி

    14. ஓம் ஆன்ம சொரூபினியேபோற்றி

    15. ஓம் ஆங்காரி அங்காளியேபோற்றி

    16. ஓம் ஆறுமுகன் அன்னையேபோற்றி

    17. ஓம் ஆதியின் முதலேபோற்றி

    18. ஓம் ஆக்கு சக்தியேபோற்றி

    19. ஓம் இன்னல் களைவாளேபோற்றி

    20. ஓம் இடர்நீக்குவாளேபோற்றி

    21. ஓம் இமயத்து அரசியேபோற்றி

    22. ஓம் இச்சா சக்தியேபோற்றி

    23. ஓம் இணையிலா தெய்வமேபோற்றி

    24. ஓம் இரவு பகலாகி இருப்பவளேபோற்றி

    25. ஓம் இயக்க முதல்வியேபோற்றி

    26. ஓம் இறைவனின் இறைவியேபோற்றி

    27. ஓம் இகம்பர சுகமேபோற்றி

    28. ஓம் ஈசனின் தாயேபோற்றி

    29. ஓம் ஈஸ்வரி தாயேபோற்றி

    30. ஓம் ஈகைப் பயனேபோற்றி

    31. ஓம் ஈடில்லா தெய்வமேபோற்றி

    32. ஓம் ஈசனின் பாதியேபோற்றி

    33. ஓம் ஈஸ்வரி அங்காளியேபோற்றி

    34. ஓம் ஈசனின் இயக்கமேபோற்றி

    35. ஓம் ஈஸ்வரி ஆனவளேபோற்றி

    36. ஓம் ஈகை குணவதியேபோற்றி

    37. ஓம் உண்மை பொருளேபோற்றி

    38. ஓம் உலகை ஈன்றாய்போற்றி

    39. ஓம் உலகில் நிறைந்தாய்போற்றி

    40. ஓம் உருவம் ஆனாய்போற்றி

    41. ஓம் உமை அம்மையேபோற்றி

    42. ஓம் உயிரே வாழ்வேபோற்றி

    43. ஓம் உயிராய் இருப்பாய்போற்றி

    44. ஓம் உடலாய் அனந்தாய்போற்றி

    45. ஓம் உமாமகேஸ்வரியேபோற்றி

    46. ஓம் ஊனுயிர் ஆனாய்போற்றி

    47. ஓம் ஊக்கம் அருள்வாய்போற்றி

    48. ஓம் ஊழ்வினை அறுப்பாய்போற்றி

    49. ஓம் ஊரைக்காப்பாய்போற்றி

    50. ஓம் ஊழலை ஒழிப்பாய்போற்றி

    51. ஓம் ஊக்கமாய் நிறைவாய்போற்றி

    52. ஓம் ஊடல் நாயகியேபோற்றி

    53. ஓம் ஊழ்வினை களைவாய்போற்றி

    54. ஓம் ஊற்றும் கருணை மழையேபோற்றி

    55. ஓம் எங்கும் நிறைந்தாய்போற்றி

    56. ஓம் எங்களை காப்பாய்போற்றி

    57. ஓம் எண்குண வல்லிபோற்றி

    58. ஓம் எழில்மிகு தேவிபோற்றி

    59. ஓம் ஏழிசைப் பயனேபோற்றி

    60.ஓம் ஏகம்பன் துணைவிபோற்றி

    61. ஓம் ஏகாந்த ரூபிணியேபோற்றி

    62. ஓம் ஏழையை காப்பாய்போற்றி

    63. ஓம் ஐங்கரன் தாயேபோற்றி

    64. ஓம் ஐயனின் பாகமேபோற்றி

    65. ஓம் ஐயம் தெளிந்தாய்போற்றி

    66. ஓம் ஐம்பொறி செயலேபோற்றி

    67. ஓம் ஐம்புலன் சக்தியேபோற்றி

    68. ஓம் ஒருமாரி உருமாரிபோற்றி

    69. ஓம் ஒன்பான் சுவையேபோற்றி

    70. ஓம் ஒலி ஒளி ஆனாய்போற்றி

    71. ஓம் ஒப்பில்லா சக்திபோற்றி

    72. ஓம் ஒழுக்கம் அருள்வாய்போற்றி

    73. ஓம் ஒங்காரி ஆனாய்போற்றி

    74. ஓம் ஒங்காரி அங்காளிபோற்றி

    75. ஓம் ஓம்சக்தி தாயேபோற்றி

    76. ஓம் ஒருவாய் நின்றாய்போற்றி

    77. ஓம் ஒங்கார சக்தியேபோற்றி

    78. ஓம் கல்விக் கடலேபோற்றி

    79. ஓம் கற்பூர வல்லிபோற்றி

    80. ஓம் கந்தன் தாயேபோற்றி

    81. ஓம் கனகாம்பிகையேபோற்றி

    82. ஓம் கார்மேகன் தங்கையேபோற்றி

    83. ஓம் காளி சூலியேபோற்றி

    84. ஓம் காக்கும் அங்காளியேபோற்றி

    85. ஓம் சங்கரி சாம்பவீபோற்றி

    86. ஓம் சக்தியாய் நின்றாய்போற்றி

    87. ஓம் சாந்தவதியேபோற்றி

    88. ஓம் சிவகாம சுந்தரிபோற்றி

    89. ஓம் சினம் தணிப்பாய்போற்றி

    90. ஓம் சிங்க வாகனியேபோற்றி

    91. ஓம் சீற்றம் கொண்டாய்போற்றி

    92. ஓம் சுந்தரவல்லிபோற்றி

    93. ஓம் சூரசம்மாரிபோற்றி

    94. ஓம் தாண்டவ ஈஸ்வரிபோற்றி

    95. ஓம் தாட்சாயணிதேவிபோற்றி

    96. ஓம் திரிபுரசுந்தரிபோற்றி

    97. ஓம் தீபச் சுடரொளியேபோற்றி

    98. ஓம் நடன நாயகிபோற்றி

    99. ஓம் நான்மறைப் பொருளேபோற்றி

    100. ஓம் நீலாம்பிகையேபோற்றி

    101. ஓம் நீதிக்கு அரசிபோற்றி

    102. ஓம் பஞ்சாட்சரியேபோற்றி

    103. ஓம் பம்பை நாயகியே போற்றி

    104. ஓம் பார்வதா தேவி போற்றி

    105. ஓம் பாம்பின் உருவே போற்றி

    106. ஓம் பார்புகழும் தேவியேபோற்றி

    107. ஓம் பிணிக்கு மருந்தேபோற்றி

    108. ஓம் பிறவி அறுப்பாய்போற்றி

    • மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரிக்கு தாண்டேஸ்வரி என்ற பெயர் உண்டு.
    • அங்காளம்மனை உன்னிப்பாக கவனித்தால் அவள் மூதாட்டி வடிவத்தில் இருப்பது தெரியும்.

    1. கணவனை பிரிந்து வாழும் பெண்கள் மேல்மலையனூர் கோவிலில் வழிபட உரிய பலன் கிடைக்கும்.

    2. சில பெண்களை கணவன் அடிக்கடி துன்புறுத்துவது உண்டு. அப்படி பாதிக்கப்படும் பெண்கள் மலையனூர் வந்து அங்காளம்மனிடம் முறையிட பிரச்சினை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    3. மலையனூர் அங்காளம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான சிறப்பு வாய்ந்தது.

    4. ஆடி வெள்ளிக்கிழமை அங்காளம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை சாத்தி வழிபட்டால் அம்மன் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிப்பாள்.

    5. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரிக்கு தாண்டேஸ்வரி என்ற பெயரும் உண்டு.

    6. மலையனூர் புற்று மண்ணை 48 நாட்கள் நெற்றியில் பூசி வந்தால் சகல நன்மைகளும் தேடிவரும் என்பது ஐதீகம்.

    7. மலையனூர் மண்ணில் காலடி எடுத்து வைத்தாலே போதும், கிரக தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

    8. மலையனூரில் புற்றில் குடியேறிய அம்பிகையே ஆதிசக்தி என்று போற்றப்படுகிறார். அனைத்து யுகங்களுக்கும் முன்பே அவள் இத்தலத்துக்கு வந்து விட்டதாக ஆன்மீக பெரியோர்கள் கருதுகிறார்கள்.

    9. அங்காளம்மனை ஆடி மாதம் ஒரு தடவையாவது சென்று வழிபட்டால், பக்தர்களை பிடித்த பீடை, தோஷம், பில்லி, சூனியம், காட்டேரி சேட்டை, ஏவல் போன்றவை தானாக விலகும்.

    10.மேல்மலையனூருக்கு 3 அமாவாசை தொடர்ந்து வந்து அங்காளம்மனை வழிபட்டு ஊஞ்சல் ஊற்சவத்தை கண்டு வந்தால் குழந்தைப்பேறு, நோய் நிவர்த்தி, திருமண யோகம் ஆகியவை வந்து சேரும்.

    11.அங்காளம்மனை குல தெய்வமாக கொண்டவர்கள் ஆடி மாதத்தில் ஒருநாள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

    12. மலையனூரில் அங்காளம்மன் வடக்கு திசை நோக்கி இருந்து அருள்பாலித்து வருகிறார். இதனால் அம்மனின் அருள் பக்தர்களுக்கு அதிகமாக கிடைப்பதாக கூறப்படுகிறது.

    13.மேல்மலையனூரில் அகோர உருவத்தில் ஆவேசம் அடைந்த அங்காள பரமேஸ்வரி, திருவண்ணாமலை சென்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சாபம் நீங்க பெற்று, பிறகு மீண்டும் மலையனூர் வந்து அமர்ந்ததாகவும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மலையனூர் வந்து செல்வது நல்லது என்று கூறப்படுகிறது.

    14. மலையனூர் கருவறையில் வீற்றிருக்கும் அங்காளம்மனை நன்கு உன்னிப்பாக கவனித்தால் அவள் மூதாட்டி வடிவத்தில் இருப்பது தெரியவரும்.

    15. தட்சனின் யாகத்தை அழிக்க யாகத் தீயில் விழுந்து தன் உடலை அழித்துக் கொண்ட தாட்சாயணியின் அம்சமே அங்காளி என்பதால் மலையனூர் அங்காளம்மன் தலத்தில் சாம்பலைத்தான் பிரசாதமாக தருகிறார்கள்.

    16. அங்காளம்மனை தொடர்ந்து வழிபட்டால் ராகு,கேது தோஷ பாதிப்பு உங்களை நெருங்கவே நெருங்காது.

    17.சென்னையில் சூளை, ராயபுரம், சாத்தங்காடு, மைலாப்பூர், சிந்தாதிரிப்ேபட்டை, ஜார்ஜ்டவுன், நுங்கம்பாக்கம் என்று மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் அங்காளம்மன் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

    18. திருவள்ளூர் அருகே புட்லூர் அங்காளம்மன் கோவிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. அரக்கோணத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    19. விருதுநகர் மாவட்டம் மாந்தோப்பு என்னும் இடத்திலும் அங்காளம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

    20. திருச்சி மாவட்டம் துறையூர் அங்காளம்மன் சயன கோலத்தில் இருப்பதால் அந்த கோவில் மிகவும் விசேஷமானது.

    21.திருப்பூர் அருகே முத்தம்பாளை யம் என்னும் இடத்தில் வீற்றிருக்கும் அங்காளம்மன் சுயம்புவாகத் தோன்றியவர் என்று கூறப்படுகிறது.

    22. அங்காளம்மன் ஆலயங்களில் மயானக்கொள்ளை நடக்கும் தினத்தில் அம்மனுக்கு பொங்கலிட்டு பூஜைகள் செய்வது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.

    23. ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல்மலையனூர் வந்து அங்காளம்மனை தரிசித்து செல்கிறார்கள்.

    24.சமீப காலமாக மேல்மலையனூருக்கு ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

    25. சென்னையில் இருந்து ஒவ்வொரு அமாவாசைக்கும் மேல்மலையனூருக்கு சுமார் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

    26. மேல்மலையனூருக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் மற்றும் தங்கள் குடும்பத்தினர் மீதான தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளவே வருகிறார்கள்.

    27. காலை 7 மணி முதல் 12 மணி வரையிலும் பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும் இந்த சன்னதி அமாவாசையன்று இரவு முழுவதும் திறந்திருக்கும்.

    28. மேல்மலையனூர் கோவில் புற்று மண் சித்தர்கள், தேவர்கள், மகான்கள் பாதம் பட்டு மேலும் புனிதமான மண்ணாகும்.

    29.மேல்மலையனூர் பிள்ளையாருக்கு ஒரு கால் ஊனமாக இருந்ததாம். பித்து பிடித்த நிலையில் இருக்கும் தனது தகப்பனாரின் காவல் தெய்வமாக இருந்து அன்னையை வேண்டிய பின்பு நல்லகால்களை பெற்றதாக கூறுவதுண்டு.

    • அங்காளம்மன் கோவில் கொண்ட தலைமையிடமே, மேல்மலையனூர்.
    • அங்காளி மானிடங்களின் ஆன்ம பிணிகளை போக்கிடுவாள்

    ஆற்றல் மிகு சக்திகள் மூன்று, அவை இச்சா சக்தி, கிரியா சக்தி, ஞானசக்தி. இதையே ஆற்றலாக கருதும்போது, விழைவாற்றல், செயல் ஆற்றல், அறிவாற்றல். இதையே தெய்வமாக லட்சுமி, சரஸ்வதி, பார்வதி.

    வாழ்க்கையின் நிலைகளாக, கல்வி, செல்வம், வீரம் என்று ஏற்கொள்கிறோம். லட்சுமி, சரஸ்வதி, பார்வதி இவை இணைந்த ஒரே உருவான சிற்சக்தியே, அங்காளி என்ற உருவ மற்ற சக்தி ஆகும்.

    அங்காளம்மன் கோவில் கொண்ட தலைமையிடமே, மேல்மலையனூர். இதுவே தலைமையிடமாகவும், இந்த கோவிலில் உள்ள தேவதையே தலைமைத்தாய், மூலதாய், முதன்மைத்தாய், குலதெய்வம் என்றும் வழிபாடு செய்கிறோம். இதுவே வம்சாவளியாக செய்து கொண்டு இருக்கும் வழிபாட்டு முறைகள்.

    குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு தங்களின் வம்சாவளியினராக தங்களின் பிள்ளைகள் உற்றார் உறவினர்கள், நண்பர்கள் போன்றோருடன் ஒன்று சேர்ந்து வந்து மொட்டை அடிப்பது காதணி விழா செய்வது, அபிஷேகம் செய்வது, ஆராதனை செய்வது, அர்ச்சனை செய்வது, பொங்கல் வைப்பது போன்ற வழிபாடுகளை செய்யும் வழிபாட்டு தெய்வமாக அங்காளம்மன் விளங்குகின்றாள்.

    இந்த ஆற்றல் மிகு சக்தியின் துணைவர், கணவர், இறைவன் என்று போற்றப்படுபவர். முறையே சிவன், விஷ்ணு, பிரம்மா இவர்கள் மும்மூர்த்திகள் ஆவார்.

    இந்த மும்மூர்த்திகளில் முதல் மூர்த்தியான சிவபெருமானுக்கே பிரம்மஹத்தி தோசம் பிடித்து விட்டதாகவும், இந்த பிரம்மஹத்தி தோஷத்தை அங்காளியான இந்த அங்காளம்மன் மாசிமாதம் விலக்கியதாகவும் அறிந்த வண்ணம், சித்த பிரம்மை பிடித்த சிவபெருமானின் பிரம்ம ஹத்தியை விலக்கியதை போன்றே மானிடராகிய மக்களின் துன்பம், துயரம், பிணிகள், பீடைகள், சகடைகள், தோசம், பில்லி வைப்பு, சூன்யம், ஏவல், காட்டேரி சேட்டைகள், போன்றவற்றை விலக்கி நல்வாழ்வு தரும் தெய்வம், வழிபாட்டு தெய்வம் அங்காளம்மன் ஆகும்.

    பிரம்மஹத்தியில் இருந்து சிவபெருமானை விடுவித்த அங்காளி மானிடங்களின் இந்த ஆன்ம பிணிகளைப் போக்கிடுவாள் என்று கருதியே மேல்மலையனூரை தலைமையிடமாக ஏற்றுக் கொண்டு மேல்மலையனூருக்கு வந்து காணிக்கை, பிரார்த்தனைகளை செய்து நல்லருள் பெற்று செல்கின்றனர்.

    • விரதம் இருக்க எந்தவித வயது வித்தியாசமும் கிடையாது.
    • மனத்தூய்மையும், உடல் தூய்மையும் விரத நாட்களில் மிக அவசியமாகும்.

    மேல்மலையனூர் கோவிலில் தேர்த்திருவிழாவின் போது தீமிதித் திருவிழாவும் நடத்தப்படும். இவ்விழாவில் கலந்து கொண்டு தீ மிதிக்கும் பக்தர்கள் கடுமையான சுத்தத்துடன் ஒருவார காலம் விரதம் அனுஷ்டிக்கிறார்கள்.

    இந்த விரதமானது சபரிமலை அய்யப்பனுக்கு மாலை போட்டு விரதம் தொடங்குவது போன்று மாலை அணிந்து கொள்வதில் இருந்து தொடங்குகின்றது.

    தீமிதி விழாவில் கலந்து கொள்பவர்கள் அவர்கள் ஊரில் உள்ள அங்காளம்மன் கோவிலுக்கு சென்று வணங்கி துளசி மணிமாலை, ருத்திராட்ச மாலை சந்தனமாலை, பச்சைமணி மாலை இவைகளில் தங்களுக்கு பிடித்தமான மாலையை வாங்கி அதனை பாலில் நனைத்து பின் மஞ்சள் நீரில் நனைத்து தன் பெற்றோர் அல்லது கோயில் குருக்கள் அல்லது அங்காளம்மன் அருள்வாக்கு பெற்றவர்களிடம் கொடுத்து மணிமாலையை அணிந்து கொள்ள வேண்டும்.

    தினமும் காலை, மாலை இருவேளையும் குளித்த பின்பு 'ஓம் சக்தி அங்காளம்மா' என உச்சரித்து வணங்க வேண்டும். இந்த விரதத்தின் போது மஞ்சள் அல்லது காவி நிற உடைகளை அணிவது அவசியமாகும்.

    இந்த தீமிதி விழாவில் ஆண்கள் மட்டுமின்றி பெண்களும் பெருமளவில் பங்கு கொள்கின்றனர். ஆண்களுக்கு கூறப்பட்ட அனைத்து விரத முறைகளையும் பெண்களும் கடைப்பிடிப்பர். இந்த விரதம் இருக்க எந்தவித வயது வித்தியாசமும் கிடையாது.

    மாலை அணிந்த பின் ஆணாயினும், பெண்ணாயினும், சிறுவனாயினும், சிறுமியாயினும் அவர் 'அங்காளம்மா' என்றே அழைக்கப்படுவர்.மனத்தூய்மையும், உடல் தூய்மையும் இந்த விரத நாட்களில் மிக அவசியமாகும்.

    பெண்கள் இந்த விரதம் இருந்து வரும்போது மாதவிலக்கு பிரச்சினை ஏற்பட்டால் அன்று மாலையை கழற்றிவிட்டு 3 நாட்கள் கழித்து தலைக்கு 3 எண்ணை சேர்த்து குளிப்பதுடன் மஞ்சள் நீரிலும் நீராடி அதன்பின் மாலையை பாலிலும் அதன்பின் மஞ்சள் நீரிலும் கழுவி சாம்பிராணி புகை காட்டி வீட்டிலேயே சுவாமி படத்தின் முன் மறுபடியும் மாலையை அணிந்து கொள்ள வேண்டும்.

    இந்த பக்தர்கள் தீ மிதித் திருவிழாவன்று தீக்குண்டத்தில் இறங்கி வெளிவருவார்கள். ஆடி மாதம் முழுக்க இதே மாதிரி பய பக்தியுடன் மேல்மலையனூரில் அங்காளம்மனை பக்தர்கள் வேண்டிக் கொள்வதை காண முடிகிறது.

    • அமாவாசை நாளில் ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது.
    • ஆடி அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தை தரிசனம் செய்வது இரட்டிப்பு பலனை தரும்.

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயத்தில் நடைபெறும் ஊஞ்சல் உற்சவம் நிகழ்ச்சி மகிமைகள் பல கொண்டது. அந்த மகிமையை உணர வேண்டுமானால் அந்த ஊஞ்சல் உற்சவத்தை நேரில் சென்று தரிசனம் செய்தால்தான் உணர முடியும்.

    மலையனூர் தலத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசை நாளில் இந்த ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது. நள்ளிரவு 11 மணி முதல் 12.30 மணி வரை அங்காளம்மனை ஊஞ்சலில் வைத்து தாலாட்டுவார்கள்.

    அந்த சமயத்தில் அங்காளம்மனை நாம் வழிபட்டால், ஏற்கனவே மனம் குளிர்ந்துள்ள அம்மன் நாம் கேட்கும் வரத்தை எல்லாம் வாரி, வாரி வழங்குவாள் என்பது ஐதீகம். அதிலும் ஆடி அமாவாசை நடைபெறும் ஊஞ்சல் உற்ச வத்தை தரிசனம் செய்வது இரட்டிப்பு பலன்களைத் தரக் கூடியதாகும்.

    சரி... இந்த ஊஞ்சல் உற்சவத்தை ஏன் நடத்துகிறார்கள் தெரியுமா?

    பிரம்மனின் தலையை வெட்டியதால் சிவன் கையில் அந்த கபாலம் ஒட்டிக் கொண்டது. இதனால் சிவனுக்கு பிரம்மஹத்தி தோஷம் ஏற்பட்டது.

    மலையனூரில் புற்றில் வீற்றிருந்த அங்காளம்மன், விஸ்வருபம் எடுத்து, தனது காலால் பிரம்ம கபாலத்தை மிதித்து பூமிக்குள் அமுக்கி, சிவனுக்கு ஏற்பட்டிருந்த பிரம்மஹத்தி தோஷத்தை நீக்கினார். அதன் பிறகே சிவபெருமானுக்கு பாவவிமோசனம் கிடைத்தது.

    ஆனால் விசுவரூபம் எடுத்த அங்காளம்மனின் சீற்றமும், ஆக்ரோஷமும் குறையவில்லை. அது மட்டுமின்றி தன்னை நாடி தேடி வரும் ஒவ்வொரு பக்தனையும் பிடித்துள்ள தீய சக்திகளையும் அங்காளம்மன் வீறு கொண்டு அழிக்கிறாள் என்பதை பக்தர்கள் முழுமையாக நம்புகிறார்கள்.

    இப்படி தினம், தினம் தீய சக்திகளை விரட்ட ஆங்காரம் கொள்ளும் அம்மனை அமைதிப்படுத்தி, சாந்தம் செய்யவே, அமாவாசை நள்ளிரவு அவளை ஊஞ்சலில் வைத்து தாலாட்டுகிறார்கள். இதைத்தான் ஊஞ்சல் உற்சவம் என்று அழைக்கிறார்கள்.

    தூக்கத்துக்கு அழும் குழந்தைகளை தொட்டிலில் போட்டு தாலாட்டியதும், அடுத்த வினாடியே அமைதி கொண்டு குழந்தைகள் தூங்கி விடுவார்கள். அது போலதான் அங்காளம்மனை தொட்டிலில் வைத்து தாலாட்ட, தாலாட்ட அவள் மனம் அமைதி பெற்று குளிர்ந்து போகும்.

    இந்த தாலாட்டு நடக்கும் போது, அங்காளம்மனை புகழ்ந்து பாடுவார்கள். இது அம்மனை மேலும் மகிழ்ச்சி கொள்ள செய்யும்.

    இத்தகைய சமயத்தில் நாம் அங்காளம்மனை வழிபட வேண்டும் என்பதுதான் முக்கியம். இந்த அருளை பெறவே அமாவாசை தோறும் மேல்மலையனூர் தலம் நோக்கி லட்சக்கணக்கான பக்தர்கள் படை யெடுத்தபடி உள்ளனர்.

    திருவண்ணாமலைக்கு பவுர்ணமி கிரி வலத்துக்கு வரும் பக்தர்களுக்கு இணையாக இத்தலத்துக்கும் மக்கள் லட்சக்கணக்கில் வரத் தொடங்கி உள்ளனர்.

    அம்மனின் அருளை அறிந்து, அவள் பொற்பாதம் பணிந்து வரம் பெற ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் பெருமளவில் வரத் தொடங்கியுள்ளனர்.

    இப்படி அலை, அலையாக வரும் பக்தர்கள் எல்லோரும் அங்காளம்மனை ஊஞ்சலில் தாலாட்டுவதை எளிதில் காண்பதற்கு வசதியாக, கோவில் முன்பு உயரத்தில் ஊஞ்சல் மண்டப மேடை அமைத்துள்ளனர். அந்த மேடையில்தான் அங்காளம்மனுக்கு ஊஞ்சல் உற்சவம் நடத்தப்படுகிறது.

    அம்மனின் ஊஞ்சல் உற்சவத்தை கண்டு பலன் அடைந்த ஒரு பக்தர், அந்த ஊஞ்சல் மண்டப படிக்கட்டுக்களில் தங்கமுலாம் பூசி கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    அங்கு தாலாட்டப்படும் அம்மனை பக்தர்கள் வந்து தரிசித்து விட்டு உடனே திரும்பி விடலாம். ஆனால் போக்குவரத்து நெரிசல் ஒன்றுதான் பக்தர்களுக்கு மிகுந்த சிரமத்தை கொடுத்து விடுகிறது.

    அதுவும் திட்டமிட்டு நிவர்த்தி செய்யப்பட்டு விட்டால், அங்காளம்மனின் ஊஞ்சல் உற்சவத்தை காண நெடுந்தொலைவில் இருந்து வந்து செல்லும் பக்தர்கள் மனம் மகிழ்ந்து, அமைதி பெற்று செல்வார்கள்.

    அங்காளம்மன் ஒவ்வொரு அமாவாசை தினத்தன்று, தன்னை நாடி வரும் பக்தர்கள் அனைவருக்கும் அந்த அமைதியை கொடுத்துக் கொண்டிருக்கிறாள் என்பது நிதர்சனமான உண்மையாகும்.

    • ஆடிமாதம் 3-வது செவ்வாய்கிழமை கூழ்வார்ப்பார்கள்.
    • கூழ்வார்க்கும் கொப்பறை வழிந்து ஓடினால் மழை பெய்து நாடு செழிப்பாக இருக்கும்.

    மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலின் தென்மேற்கு மூலையில் கங்கை அம்மன் கோவில் உள்ளது. அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் பூஜை செய்யும் ஏழு வம்சாவழி பூசாரிகள் ஆடிமாதம் 3-வது செவ்வாய்கிழமையில் இந்த கோவிலில் கூழ்வார்ப்பார்கள்.

    அப்போது கூழ்வார்க்கும் கொப்பறை வழிந்து ஓடினால் அந்த ஆண்டு மழை பெய்து நாடு செழிப்பாக இருக்கும் என்பது இன்றளவும் நம்பிக்கையாக உள்ளது.

    இந்த கூழ்வார்த்தத் திருவிழா 5 நாட்கள் நடைபெறும். அதாவது மூன்றாம் வெள்ளிக்கிழமை அன்று துர்கை அம்மன், புரடை அம்மன், கங்கை அம்மன் ஆகிய கோவில்களில் இருந்து பூங்கரகம் எடுத்து வந்து (திருமணம் ஆகாத ஆண்கள் கரகம் எடுப்பர்) இரவில் காப்பு கட்டுவார்கள்.

    ஞாயிற்றுக்கிழமை பருவதராஜ மீனவ சமூகத்தை சேர்ந்தவர்கள் ஊர்வலமாக சென்று தாயனூர் முத்தாலம்மன் கோவிலில் பொங்கல் வைத்து படைப்பார்கள். சனி மற்றும் திங்கட்கிழமைகளில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்வார்கள்.

    செவ்வாய்க்கிழமை அன்று பம்பை, மேளம் முழங்க தீச்சட்டி ஏந்தியும், கூழ்குடங்களை சுமந்தும் ஊர்வலமாக சென்று கங்கையம்மன் கோவிலில் சாகை வார்ப்பார்கள். இது ஆண்டுதோறும் ஆடிமாதம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

    • பருவதராஜ குல மீனவ இனத்தாரே முக்காலியர் எனப்படுவர்.
    • நடப்பது, நடந்தது, நடக்க இருப்பதைக் கூறி அருளும் விதத்தையே அருள்வாக்கு என்பர்.

    தலைமைத் தாய் அங்காளம்மன் திருக்கோவிலில் பூஜை முறையை ஏற்று செய்யும் சிவன்படையார் என்ற பருவதராஜ குல மீனவ இனத்தாரே முக்காலியர் எனப்படுவர். இவர்களால் செய்யப்படும் பூஜைகளே அம்மனுக்கு ஏற்புடையவை.

    முக்காலியர் என்ற மீனவர்களே உடுக்கை, பம்பை, மணி, சிலம்பு ஆகிய ஓசைகளுடன் தங்கள் வாய்க்கு வந்த எந்த பாடலை உருவகப்படுத்திப் பாடினாலும், பாடல்பாடி அழைத்தாலும் அம்மன் விரும்பிய மாந்தரின் பூத உடலில் அங்காளியான அம்மனே உந்தப்பட்டு மருள் என்ற நிலையாகி தன்னைத்தானே மறந்து ஆடி! மருள் ஆடி வந்த நிலையிலேயே கேட்பவர்களின் கேள்வி களுக்கு தகுந்த விதங்களில் நடப்பது, நடந்தது, நடக்க இருப்பதைக் கூறி அருளும் விதத்தையே அருள்வாக்கு என்றே அழைப்பர்.

    இவ்வழக்கம் தொன்று தொட்ட வழிமுறையாக உள்ளது. இவை போக தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகம், கேரளா போன்ற இடங்களில் உள்ள அருளாளர்களுக்கு எல்லாம் அருள்தரும் தேவதை அங்காளம்மன் ஆகும். இத்தேவதையின் தலைமையிடம் மலையனூர் ஆகும்.

    அருளாளர்கள் அனைவரும் ஒவ்வொரு அமாவாசை தோறும் தலைமையிட அங்காளம்மன் கோவிலுக்கு வந்து முக்காலியர் என்ற செம்படவர் ஆகிய பூஜை முறை பூசாரிகளிடம் புற்றுமண், சாம்பல், விபூதி, குங்குமம், பூ, பழம் போன்றவற்றை அங்காளம்மன் ஆன்மீக அன்பர்கள் பெற்றும் அருள்வாக்கு சரியாக வராத அன்பர்களின் நாவினில் அலகு போடுவது இன்றும் வழக்கத்தில் உள்ளது.

    பலதரப்பட்ட மாநிலத்தில் தீர்க்க முடியாத எந்த பிணி, பீடை, நோய் பிடித்த வர்களை அருளாளர்களே அழைத்து வந்து தலைமையிட கோவிலில் உள்ள பூசாரிகளால் விலக்கிச் செல்வது தொன்று தொட்டு இன்று வரை இருந்து வரும் வழக்கம் உண்மையாக விளங்குகிறது.

    மேலும் தலைமை பூசாரிகளால் செய்யப்படும் அபிஷேகம், அர்ச்சனைகள், ஆராதனைகளுக்கு கட்டுப்பட்டே சேர்வார்த்திகளின் கஷ்டங்களையும், பிணிகளையும், பீடைகளையுமே விலக்குவதாக கருதப்படுகிறது.

    இதைத்தவிர அருளாளர்களுக்கு அருள்வாக்கு எந்த தவறும், பிசகும் இன்றி நன்முறையில் அமையவே இத்திருக்கோவில் பூசாரிகளால் அருளாளர்களுக்கு அருள் வரவழைத்து நாவில் அலகு போடுதல் போன்றவையும் இந்த அருளாளர்களே பலதரப்பட்ட இடங்களில் அங்காளம்மன் குறிமேடை என்று வைத்துக் கொண்டு அங்காளம்மன் குறி சொல்வதாகவும் இவர்களின் மூலமாகவே மாதந்தோறும் வரும் அமாவாசை தினங்களிலும் மற்ற தினங்களிலும் எண்ணற்ற ஆன்மீக அன்பர்கள் கூட்டம் மலையனூர் வந்து செல்வதாகவும் கருதப்படுகிறது.

    குறிமேடை வைத்துக் கொண்டு குறி சொல்லும் அருளாளர்கள் அங்காளம்மனை மனதில் நிறுத்தி உருவகப்படுத்தி ஒரே நினைவாகி குண்டலி சக்தியை பயன்டுத்தி நிற்கும் வேலையில் குறிகேட்கும் அன்பர்களுக்கு அவர்களின் கஷ்டங்களை போக்கும் உபாயங்களை அருளாளர்களே கூறி அருள்வதாகவும் தொன்று தொட்டு இருந்து வந்துள்ளது. இதையே அங்காளம்மன் அருள்வாக்கு என்று கூறப்படுகிறது.

    அங்காளம்மன் அருளாளர்கள் அம்மனை வேண்டி குண்டலி சக்தியாக்கி நிலைநிறுத்திக் கொள்ளும்போது தன் நிலையை மறந்து அம்மனிடமே அவரவர்கள் ஐக்கியமாகி விடுவதாகவும், அந்த நேரங்களில் அம்மன் அருளால் பக்தர்கள் கேட்கும் கேள்விகளுக்கு அருளாளர்கள் கூறும் அருள் வார்த்தைகளே அருள்வாக்கு என்றே கருதி அதன்படியே நடப்பது இன்றும் தொடர்ந்த வண்ணம் உள்ளது. இதுவே அருள்வாக்கின் சிறப்பம்சமாகும்.

    • ஸ்ரீ அங்காளம்மனாக புற்றில் உறைந்து அமர்ந்ததாக தல வரலாறு சொல்கிறது.
    • சிவபெருமான் சிதம்பரம் தாண்டி படிகலிங்கமானார்.

    மேல்மலையனூரின் தேவதையான பூங்காவனத்தாய் ஒரே சிற்சக்தியாகி அங்காளியாகி சிவனாரை மயானம் அழைத்து சென்று சூறையை இறைக்கும்போது சிவனாரை பற்றி இருந்த பிரம்ம கபாலம் சிவனாரை விட்டு கீழே இறங்கி சூறையை சாப்பிட்டது.

    அப்போது சிவபெருமான் தாண்டி ஓடி "தாண்டவ ஈஸ்வரனாகவும்" தாண்டிய இடமான மேல்மலையனூரில் "தாண்டேஸ்வரராகவும்" அமர்ந்தார். தாண்டவ ஈஸ்வரரான சிவபெருமான் சிதம்பரம் தாண்டி படிகலிங்கமானார்.

    சிவபெருமானை விட்டு கீழே இறங்கி சூறையை சாப்பிட்ட பிரம்ம கபாலம் மீண்டும் சிவபெருமானை பற்றிக் கொள்ள, விஸ்வரூபம் எடுத்து பறக்க ஆயத்தமானது. இதைக்கண்ட அங்காளி தானும் விஸ்வரூபம் எடுத்து, பிரம்மன் தலையை மிதித்த ஆங்காரி அங்காளியாக விளங்கினாள்.

    இந்த நிலையில் காக்கும் கடவுள் மகாவிஷ்ணு விஸ்வரூபத்தில் இருந்த அங்காளியை பிரம்மனின் தலையை மிதித்த வண்ணமே பூமியை பிளந்து உள்ளே தள்ளி மூடி மறைந்துவிட்டார்.

    சற்று நேரத்தில் பூமிக்கு மேல் மண்புற்று தோன்றியது. அது சிவ சுயம்பு உருவமானது. அப்புற்றுக்குள் கோயில் கொண்ட நாகம் படம் எடுத்து ஆடும் நிலையில், சீறி பாயும் நிலையில் வெளியில் வந்து நின்றது.

    இந்த நிகழ்வுகளை கண்ட பூலோகத்தில் இருந்த பெண் பூதகணங்கள், ஆண் பூதகணங்கள், காட்டில் இருக்கும் மிருக கணங்கள், வனத்தில் இருந்த பட்சி கணங்கள், அனைத்தும் ஒன்றுசேர வந்து தனித்தனியான முறையில் அந்த புற்றை சுற்றி கைகூப்பி தொழுது நின்றன.

    அதற்கும் அந்த நாகத்தின் படம் சுருங்கி புற்றுக்குள் செல்லவில்லை. இதனால் விண்ணுலக தேவர்கள் தங்களின் வாகனமான ஐராவதம் என்ற வெள்ளை யானையில் பூலோகம் வந்து இப்புற்றை சுற்றி நின்று தொழுதனர்.

    அதற்கும் படம் சுருங்கி உள்ளே செல்லவில்லை.

    இந்த காரணத்தால் தேவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்தவகையில் தேவர்களின் உருவமான திருத்தேராக உருவமாகி நின்று புற்றை சுற்றி வந்தனர். அப்போது கலியுகம் பிறந்தது.கலியுகத்தில் நாகப்படம் சுருங்கி புற்றுக்குள் சென்று மறைந்து போனது.

    அந்த புற்றுதான் நாம் இப்போது கோவிலில் காணும் புற்றாகும். நம் எல்லோருக்கும் அருளும் அம்பிகை ஸ்ரீ அங்காளம்மனாக அந்த புற்றில் உறைந்து அமர்ந்ததாக தல வரலாறு சொல்கிறது.

    • பிரம்மாவின் சிரசு சிவனின் கையிலே கபாலமாக மாறியது.
    • பித்து பிடித்தவராக அலைந்து திரிந்தார் சிவபெருமான்.

    சிவபெருமானுக்கும் பிரம்மாவிற்கும் ஏற்பட்ட சண்டையிலே பிரம்மாவின் சிரசு சிவனின் கையிலே கபாலமாக மாறியது. அதை ஏந்திய நிலையில் பித்து பிடித்தவராக கிளம்பி அகிலமெல்லாம் அலைந்து திரிந்தார் சிவபெருமான்.

    கபாலம் நீங்காத நிலையிலுள்ள சிவபெருமான் தண்டகாருண்யம் வழியாக செஞ்சி மாநகர் வந்து சேர்ந்தார்.

    செஞ்சியில் உள்ள மக்கள் கபாலம் நீங்க சங்கரனுக்கு 32 வித அபிஷேகங்களெல்லாம் செய்தார்கள். அப்போதும் அது நீங்கவில்லை. அந்த அபிஷேக நீர் சென்றதை தான் சங்கராபரணி ஆறு என்று சொல்லுகின்றார்கள்.

    செஞ்சியில் உள்ள மக்கள் பலரும் தாங்கள் மலையனூர் சென்றால் கையில் உள்ள கபாலம் நீங்கி விடும் என்று சொல்ல, அதை கேட்ட சிவபெருமான் அப்போதே மலையனூர் செல்ல வேண்டும் என்ற ஆர்வ மிகுதியால் உடனே மலையனூருக்கு வந்து சேர்ந்தார்.

    சிவபெருமான் அக்னி குளத்திலே குளித்தார். சிலநாட்கள் இங்கே தங்கியிருந்தால் தமது உடல்நிலை நன்றாகும் என்று நினைத்தார். மேலும் இங்கே நடப்பதை பார்க்கும் போது பல வகையில் நம்பிக்கை ஏற்பட்டது. பிறகு பிச்சை எடுத்தார். அதை கபாலம் சாப்பிட்டது. சுடலைக்கு சென்று சாம்பலை உண்டார். அவருடைய பசியும் தீர்ந்தது.

    சிவனாரின் கண்ணுக்கு மட்டும் தெரியும்படி மாயவன் மாயமாளிகை ஒன்றை ஏற்படுத்தினார். மாளிகையை கண்ட சிவபெருமான் அங்கே போய் உறங்கலாமே என்று எண்ணி, மாளிகையின் வாசலிலே போய் நின்று, ''அம்மணி! பிச்சை! பர்வதா! பிச்சை! அன்னதாய்! அம்மணி!'' என்று பலமுறை குரல் கொடுத்தார்.

    அந்த குரல் கேட்டவுடன் பார்வதி தேவியார் துடித்து போனார். வந்திருப்பது தன் கணவர் என்று தெரிந்து கொண்டார். பிறகு வெளியே வந்து பார்த்தார். ''சுவாமி! சற்று பொறுங்கள் நான் கொடுக்கன் குப்பம் சென்று இப்போது தான் வந்தேன். உடனே சமையல் செய்து போடுகிறேன். சற்று அமருங்கள்!'' என்று சொல்லி வடக்கு வாயிற்படியில் திண்ணையிலே அமரச் செய்தார். அவரும் திண்ணையிலே போய் அமர்ந்தார்.

    உள்ளே சென்ற பார்வதி தேவியார் பிறகு விநாயகரை அழைத்து, ''மகனே! நீ இவரை கவனமாக நின்று பார்த்துக் கொள்ள வேண்டும். இவர் மனநிலை சரியில்லாத நிலையில் இருக்கிறார். நீ உட்கார்ந்திருந்தால் உறங்கிவிடுவாய்.

    அதனால் உனக்கு நிற்க சக்தி கொடுக்கிறேன். நீ நின்று காவல் செய்!'' என்றாள். விநாயகரும் காவல்காத்து நின்றார். அவர் தான் வடக்கு வாயிற்படி மேற்புறம் நிற்கும் சக்தி விநாயகர்.

    திண்ணையிலே அமர்ந்திருக்கும் சிவனாருக்கு உறக்கம் வந்தது. அமர்ந்திருந்த திண்ணையிலே படுத்துறங்கிவிட்டார்.

    சிவனார் இங்கு வந்து தங்கிய இரவு தான் மகாசிவராத்திரி என்று எல்லோராலும் கொண்டாடப்படுகிறது.

    சிவபெருமான் சிறிது நேரம் உறங்கிவிட்டு தாகம் எடுக்க நீர் வேண்டி மயானத்திற்கு சென்றார். உள்ளே சென்ற பார்வதி தேவியார் ஆபத்சகாயரான விஷ்ணுவையும் லட்சுமியையும் இப்பொழுது வரவேண்டும் என்று வேண்டினாள்.

    எப்போதும் கோவிந்தா கோவிந்தா என்று கூப்பிடுவதால் கோபாலனையே, இங்கே விநாயகர் பெருமானாக அமர்த்தியுள்ளார். அவர்தான் மேற்கு வாயிற்படியில் வடபுறம் அமர்ந்திருக்கும் கோபால விநாயகராவார்.

    பார்வதி தேவியார் அழைப்பை ஏற்று விஷ்ணுவும், லட்சுமியும் உடனே வந்தார்கள். அவர்களிடம் அன்னையார், ''என் கணவன் கையில் இருக்கும் கபாலம் நீங்க சீக்கிரம் ஒருவழி சொல்லுங்கள்'' என்றார்.

    இதற்கு பகவான் விஷ்ணு, ''பார்வதி, மகாலட்சுமி இடத்திலே உள்ள அட்சய பாத்திரத்தின் உதவியால் அறுசுவை உணவுகளை தயார் செய்து அந்த பிரம்ம கபாலத்திற்கு போடவேண்டும்.

    அப்படி போடும் போது, உணவுகளை மூன்று உருண்டைகளாக செய்து, முதல் இரண்டு உருண்டைகளை கபாலத்திலே போட வேண்டும். மூன்றாவது உருண்டையை இறைக்க வேண்டும். மற்றவைகளை நான் சொல்வது போல நீ செய்ய வேண்டும் என்றார்.

    உடனே அட்சய பாத்திரத்தின் உதவியால் அறுசுவை உணவுகள் தயார் செய்யப்பட்டது. அவற்றை எடுத்துக் கொண்டு கிழக்குவாசல் வழியாக காவல் தெய்வமான பாவாடைராயன் வீரபத்திரனுடன் பார்வதி அமாவாசை இரவு நடுநிசியிலே சென்றாள். அவர்களை பாதுகாக்க விஷ்ணுவும் உடன் சென்றார்.

    சிவனார் மயானத்திலே எலும்புகளை கடித்து நீர் உறிஞ்சிக் கொண்டிருந்தார். அந்த இடத்திற்கு பார்வதி தேவியார் வந்து சேர்ந்தார். சிவனாரின் கையிலே உள்ள கபாலத்திற்கு முதல் உணவு உருண்டையை போட்டார். கபாலம் பசிமிகுதியால் சாப்பிட்டது. இரண்டாவது உணவு உருண்டையை போட்டார்.

    அதையும் ருசிமிகுதியால் சாப்பிட்டது. விஷ்ணுவின் ஆலோசனைப்படி 3-வது உருண்டையை போடுவது போல பாவனை செய்தாள். பிரம்ம கபாலம் அதை சாப்பிட ஏங்கி நின்றது. அது ஏங்கி நிற்பதை பார்வதி பார்த்து விட்டாள். போடுவது போல பாவனை செய்து தூக்கி இறைத்தாள்.

    ருசி மிகுதியாக இருக்கவே கபாலம் பிரம்மன் கொடுத்த சாபத்தையும் மறந்து சிவபெருமானை விட்டுவிட்டு உணவுகளை பொறுக்கித் தின்றது. இந்த நிகழ்ச்சியை தான் அகிலமெங்கும் மயான சூறை என்று கொண்டாடுகிறார்கள்.

    • அங்காளம்மனுக்கு உகந்தது எலுமிச்சை பழம் ஆகும்.
    • பழத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் தீய சக்திகள் வீட்டுக்குள் அண்டாது.

    மேல்மலையனூரில் அங்காளம்மனுக்கு உகந்தது எலுமிச்சை பழம் ஆகும். இதனால் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் அனைவரும் தங்களது கையில் எலுமிச்சையை பழங்களாகவும் மாலையாகவும் கொண்டு வருகிறார்கள். இதற்காக கோவிலின் முன்பு எலுமிச்சை பழம் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது.

    எலுமிச்சை பழத்தில்தான் அதிக சக்தி இருப்பதாக கூறப்படுகிறது. எலுமிச்சை பழத்தை அம்மனின் காலில் வைத்து வழிபட்டு செல்லும் பக்தர்கள் அதனை வீட்டுக்கு கொண்டு செல்கிறார்கள். இந்த பழத்தை வீட்டின் பூஜை அறையில் வைத்து வழிபட்டால் எந்தவித தீய சக்திகளும் வீட்டுக்குள் அண்டாது.

    மேலும் பலர் எலுமிச்சை பழத்தை வீட்டின் தலைவாசலில் கட்டி தொங்க விடுகிறார்கள். இதன் மூலம் கண்திருஷ்டி விலகும் என்பது ஐதீகமாக உள்ளது.

    அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின் போது அங்காளம்மன் கோவிலை சுற்றி ஆயிரக்கணக்கான பக்தர்கள் எலுமிச்சை பழம் மற்றும் மாலைகளை வாங்கிக் கொண்டு தரிசனம் செய்து வருகிறார்கள். ஒவ்வொரு அமாவாசை அன்றும் கோவிலில் எங்கு பார்த்தாலும் எலுமிச்சை பழங்களாக காட்சி அளிக்கும்.

    பேய், பிசாசு, பில்லி, சூனியம் மற்றும் கண்திருஷ்டி போன்றவற்றால் பாதிக்கப்படுபவர்களுக்கு எலுமிச்சை பழம் பயன்படுகிறது. இவர்கள் அம்மனின் பாதத்தில் வைத்து பூஜிக்கப்பட்ட எலுமிச்சை பழத்தை கோவிலின் முன்பு கொண்டு செல்கிறார்கள்.

    அங்கு நிற்கும் பூசாரியிடம் வழங்குகிறார்கள். அவர் அந்த எலுமிச்சை பழத்தை கையில் வாங்கிக் கொண்டு பூஜித்து அதனை கொடுத்த பக்தர்களின் தலையை 3 முறை சுற்றி காலால் மிதிக்கும் படி கூறுகிறார். அதன்படி பக்தர்கள் அந்த எலுமிச்சை பழத்தை காலால் மிதித்து செல்கிறார்கள்.

    இதனால் அவர்கள் உடலில் புகுந்திருந்த கெட்ட ஆவிகள் பறந்து விடுகிறது. பில்லி, சூனியமும் விரட்டப்படுகிறது. இதனால் அங்காளம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் பெரும்பாலானோர் எலுமிச்சை பழம் வழிபாட்டை நடத்தி வருகிறார்கள்.

    • தூய எண்ணம், தூய சிந்தனையுடன் செல்லவே படைக்கப்பட்ட இடம் பலிபீடம்.
    • சித்திரை , மார்ச் மாதத்தில் சக்தி கரகம் மேல்மலையனூரை சுற்றி வருகிறது.

    ஆதி சக்தி அம்மன் தன் அம்சமான தாட்சாயணி தேவியாக தட்சனுக்கு மகளாக பிறந்தாள் என்றும் ஆணவத்தின் அகங்காரத்தின் தலைக்கணத்தின், இறுமாப்பின், திமிரின் உச்சக்கட்டமாக தக்கனை ஒப்பிடுகையில் அத்தக்கனின் முழு உருவத்தை ஆடாக உருவப்படுத்தியும், அதே முறையில் ஆணவம், அகங்காரம், தலைக்கனம், திமிர் இறுமாப்பின் அனைத்து நிலை உருவமாக சூரபது மனை உருவகப் படுத்தும்போது சூரபதுமன் ஒரு பாதி மயிலாகவும், ஒரு பாதி சேவலாகவும் நின்றது அறிந்ததே!

    இவ்வகையில் அகந்தை, அகங்காரம், திமிர், தலைக்கணம், ஆணவத்தின் தோற்ற உருவாக கோழியையுமே பலியிட்டு வணங்கி இருக்கின்றனர்.

    ஆடு, கோழியின் உருவமான தட்சன், சூரபதுமன் போன்ற அரக்க செயல் கொண்ட ஆணவம், அகந்தை, திமிர், தலைக்கணம், இறுமாப்பு போன்ற தீய குணங்களை திருக்கோவிலின் பலிபீடத்தில் பலியிட்டு வழிபாட்டை தொடங்க கோவிலுக்கு உள்ளே தூய எண்ணம், தூய சிந்தனையுடன் செல்லவே படைக்கப்பட்ட இடமே பலிபீடம் ஆகும்.

    ஆனால் வழிபாட்டில் தவறான கருத்தாக ஆடு, கோழியைப் பலியிடும் இடமாகவே கருதப்படுவதாகவே ஆதி முதல் பலிபீடம் இருந்ததாகவே! தவறான கருத்தாக கொள்ளப்பட்டு இருந்தது.

    பலிபீடம் என்பது, தக்கன், சூரபதுமன் என்ற மகா அரக்கர்களின் குணநலன்கள் எந்த ஒரு குடும்பத்தாரையும் அடையாமல் இருக்கவும் குடும்ப நபரை அடைந்த அந்த குணநலன்களையும், வழிபாட்டுக்கு முன்பாகவே பலி பீடத்தில் பலியிட்ட பின்னரே வழிபட செல்வதாகவே படைக்கப்பட்ட இடமே திருக்கோவில் பலிபீடம் என்பது தெளிவாக உள்ளது.

    ஊரை சுற்றி வரும் சக்தி கரகத்தின் சிறப்பு

    அங்காளபரமேஸ்வரி கோவிலில் சித்திரை மற்றும் மார்ச் மாத திருவிழாவில் சக்தி கரகம் மேல்மலையனூரை சுற்றி வருகிறது. மேலும் அன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெறாது.

    அங்காளபரமேஸ்வரி சக்தி கரகம் எடுக்க ஒரு வாரம் முன் பருவதராஜ குல மீனவர் இனத்தில் பிறந்த ஒரு பூசாரியை தேர்ந்தெடுத்து ஸ்ரீ அங்காளம்மனுடைய அருளை அவர் மேல் வர வைத்து மேல்மலையனூர் அக்னி குளக்கரையில் சக்தி கரகம் அன்று நடு இரவே செய்யப்பட்டு சக்தி கரகத்தை தேர்ந்தெடுத்த பூசாரியின் தலையின் மீது சக்தி கரகம் அமரவைக்கப்பட்டு அன்று இரவு முழுவதும் ஊரை சுற்றி அருளாட்டம் ஆடி வருவார்.

    பிறகு அவர் மயானத்திற்க்கு சென்று அங்குள்ள சுண்டல் கொழுக்கட்டை தானியம் ஆகியவை அம்மனுக்கு பூஜை செய்து வாரி இறைப்பார். இவரே அங்காளபரமேஸ்வரி சக்தி என்று பாவிப்பார்கள்.

    ஏன் என்றால் அங்காளம்மன் பித்து பிடித்த தனது கணவரை காப்பாற்ற மூன்று பிடி சாதம் செய்து முதல் இரண்டு உருண்டையை கபாலத்தில் போட்டு மூன்றாவது உருண்டையை எடுத்து கீழே இறைத்தாள். இதுவே மயானக்கொள்ளை என்ற திருவிழாவாக உருவானது.

    சக்தி கரகத்தை சாதாரணமாக ஒருவர் எடுத்து விட முடியாது. சக்தி கரகத்தை எடுக்கும் நபர் கடும் விரதம் இருக்க வேண்டியிருக்கும். மேலும் விரதம் இருக்கும் சமயத்தில் கூட அவர் அவரது வீட்டுக்கு செல்ல மாட்டார்.

    ×