search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெள்ள மேலாண்மை திட்டம்"

    • கனமழை பெய்யும் போதெல்லாம் அந்த பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதாக பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் சுட்டி காட்டியுள்ளனர்.
    • சென்னையில் வெள்ள மேலாண்மைக்கான கூடுதல் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகின்றன.

    சென்னை:

    சென்னை வெள்ள மேலாண்மை திட்டத்தை இறுதி செய்ய மத்திய உள்துறை அமைச்சகத்தின் துணைக்குழு அடுத்தவாரம் கூடுகிறது.

    எண்ணூர், கூவம், அடையாறு மற்றும் முட்டுக்காடு சிறிய ஓடைகளுடன் பக்கிங்காம் கால்வாயில் இருந்து கடலில் கூடுதல் நீரை வெளியேற்ற இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

    மணிமங்கலத்தில் இருந்து அடையாறுக்கு தண்ணீர் கொண்டு செல்ல உபரி வாய்க்கால் இல்லாததால் கனமழை பெய்யும் போதெல்லாம் அந்த பகுதியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருவதாக பேரிடர் மேலாண்மை நிபுணர்கள் சுட்டி காட்டியுள்ளனர்.

    சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையரின் தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமைக்காக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. ஒரு ஆலோசகர் சென்னைக்கு 34 வெள்ளத்தடுப்பு தீர்வு களை வழங்கி உள்ளார்.

    மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை பிரிவு, சென்னையின் வெள்ளப் பாதிப்பு மண்டலங்களுக்கு நகர்ப்புற வெள்ள மேலாண்மை திட்டத்திற்கான நடவடிக்கைகளை தொடங்கி உள்ளது.

    இந்த முன்மொழிவை பரிசீலிக்க மத்திய உள்துறை செயலாளர் தலைமையில் தேசிய செயற்குழுவின் துணைக் குழு அடுத்த வாரம் டெல்லியில் கூடுகிறது.

    பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் 15-வது நிதிக் குழுவின் பரிந்துரையின்படி தேசிய பேரிடர் தடுப்பு நிதியில் இருந்து ஒதுக்கீடு பெற பரிந்துரைத்துள்ளது. நகரில் வெள்ளத்தை தடுக்க பல்வேறு நிறுவனங்கள் திட்டங்களை செயல்படுத்தி உள்ளன. இந்த முன்மொழிவு மத்திய உள்துறை அமைச்ச கத்தால் பரிசீலிக்கப்பட்டவுடன் சென்னையில் வெள்ள மேலாண்மைக்கான கூடுதல் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர் பார்க்கப்படுகின்றன.

    வெள்ள முன்அறிவிப்பு போன்ற கட்டமைப்பு சாராத அம்சங்களுக்கு கூடுதலாக, வல்லுனர்கள் நகரத்தில் உள்ள கால்வாய்களில் இருந்து நன்கு வடிவமைக்கப்பட்ட உபரி சேனல்களை உருவாக்குவது போன்ற அம்சங்களை பரிந்துரைத்து உள்ளனர். அனைத்து உபரி வாய்க்கால்களும் ஆக்கிரமிப்பை தடுக்க சுவர் எல்லையை பெற வேண்டும்.

    ×