search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளிநாடு வேலை"

    • தகவல்களை உறுதிசெய்யாமல் பணம், பாஸ்போர்ட் சான்றிதழ் உள்ளிட்ட எதையும் வழங்கக் கூடாது.
    • போலி முகவர்கள் மீது புகார் அளிக்க மின்னஞ்சல் முகவரியும், அலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது.

    புதுடெல்லி:

    வெளிநாடுகளில் வேலைகளுக்குச் செல்ல விரும்புவோர் அங்கு கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் உள்ள விவரங்கள் வருமாறு:

    பதிவு செய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர் அல்லது நிறுவனங்கள் மூலமாகவோ அல்லது சம்பந்தப்பட்ட வெளிநாட்டு நிறுவனத்தின் நேரடி நியமன முறையில் மட்டுமே செல்லவேண்டும்.

    புலம்பெயர்வு சட்டம் 1983-ன் கீழ் பதிவுசெய்யப்பட்ட ஆட்சேர்ப்பு முகவர் அல்லது நிறுவனத்திற்கான பதிவு சான்றிதழை கட்டாயம் பரிசோதிக்க வேண்டும்.

    வெளிநாட்டு நேரடி வேலைவாய்ப்பு அழைப்பு வருகிறது எனில் அந்நிறுவனத்தின் முகவரி, தொடர்பு எண்கள், என்ன வேலை, எவ்வளவு ஊதியம் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் சரிபார்க்க வேண்டும். தேவை என்றால் புலம்பெயர்வு அதிகாரியிடம் சரிபார்த்துக் கொள்ளலாம்.

    www.meaindia.nic.in, www.india.gov.in ஆகிய மின்னஞ்சல் முகவரிக்கு தொடர்பு கொண்டு ஆட்சேர்ப்பு முகவர் குறித்த தகவல்களை சரிபார்த்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    தகவல்களை உறுதிசெய்யாமல் ஒருபோதும் பணம், பாஸ்போர்ட் சான்றிதழ்கள் உள்ளிட்ட எதையும் கட்டாயம் வழங்கக்கூடாது.

    முகவருக்கான கட்டணமாக ஒன்றரை மாத ஊதியம் அல்லது அதிகபட்சமாக 20,000 ரூபாய்க்கு மேல் உரிய ரசீதுகள் இல்லாமல் கொடுக்க வேண்டாம்.

    விசா எந்த நோக்கத்திற்காக எடுக்கப்படுகிறதோ, அதற்காக மட்டுமே வெளிநாட்டில் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லை என்றால் சிறைத்தண்டனை வரை கிடைப்பதற்கான வாய்ப்பு இருக்கிறது.

    வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவதற்கான உரிய வங்கிக்கணக்கை வைத்திருப்பது போன்றவை கட்டாயம் பின்பற்றப்பட வேண்டும்.

    பாஸ்போர்ட்டை தொலையாமல் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் எந்த ஒரு ஒப்பந்தத்திலோ, வெற்று காகிதத்திலோ கையொப்பமிட்டு தரக்கூடாது. வெளிநாட்டில் நடைபெறும் போராட்டங்களில் பங்கெடுக்கக் கூடாது.

    சம்பந்தப்பட்ட நாட்டில் இந்திய தூதரகம் எங்கே உள்ளது, அதன் தொலைபேசி எண் உள்ளிட்டவற்றை நினைவில் வைத்திருக்க வேண்டும்.

    போலி முகவர்கள் மீது புகார் அளிக்க மின்னஞ்சல் முகவரியும், அலைபேசி எண்ணும் கொடுக்கப்பட்டுள்ளது. இவைதவிர டெல்லியில் உள்ள புலம்பெயர்வு அலுவலகத்திலும் புகார் அளிக்கவும் வழிவகை உள்ளது உள்பட்ட பல்வேறு அறிவுரைகளை வழங்கியுள்ளது.

    • ஆன்லைன் மூலமாக சட்டவிரோதமான செயல்களை ஐ.டி.துறையில் திறமைமிக்கவர்களை குறிவைத்து ஏமாற்றுகின்றனர்.
    • வெளிநாட்டுக்கு இளைஞர்களை அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் எச்சரித்துள்ளார்.

    தேனி:

    வெளிநாடு வேலைக்கு செல்பவர்கள் மத்தியஅரசின் பதிவு பெற்ற முகவர்களை அணுகி வேலைக்கான விசா, பணிவிபரம், பணி ஒப்பந்தம் ஆகியவற்றை சரிபார்த்து கொள்ள வேண்டும். போலி முகவர்கள் ஆன்லைன் மூலமாக சட்டவிரோதமான செயல்களை ஐ.டி.துறையில் திறமைமிக்கவர்களை குறிவைத்து ஏமாற்றுகின்றனர்.

    சமூகவலைதளங்களில் வரும் போலியான விளம்பரங்களை கண்டு ஏமாற வேண்டாம். டூரிஸ்ட் விசாவில் வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும். பணிகள் குறித்த விபரங்கள் தெரியாவிடில் தமிழக அரசு அல்லது சம்பந்தப்பட்ட நாட்டில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்ந்து கொண்டு உண்மை தன்மையினை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

    மேலும் சட்டவிேராதமாக வெளிநாட்டுக்கு இளைஞர்களை அனுப்பி வைக்கும் முகவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேனி மாவட்ட கலெக்டர் முரளிதரன் எச்சரித்துள்ளார்.

    ×