என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வெற்றி வாய்ப்பு"
- அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என்று கே.டி.ராேஜந்திரபாலாஜி கூறினார்.
- கட்சியை வலுப்படுத்தி சிறப்பாக செயல்படவேண்டும்.
ராஜபாளையம்
ராஜபாளையம் தென் காசி ரோட்டில் உள்ள ஓட்ட லில் ராஜபாளையம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட அ.தி.மு.க. நகர, ஒன்றிய, கிளைக்கழக செயலாளர்கள் மற்றும் பொறுப்பாளர்க ளான பூத் கமிட்டி நிர்வா கிகளுடன் ஆலோசனை நடைபெற்றது. கூட்டத்திற்கு விருதுநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி தலைமை தாங்கினார்.
பூத் கமிட்டி பொறுப்பா ளரும், சிறுபான்மை நலப் பிரிவு பொருளாள ருமான மகேந்திரன் முன்னிலை வகித்தார். மாவட்ட ஜெயல லிதா பேரவை செயலாளர் என்.எம்.கிருஷ்ணராஜ் வர வேற்றார். கூட்டத்தில் கே.டி.ராஜேந்திர பாலாஜி பேசியதாவது:-
தமிழகத்தில் தற்போது நடைபெறுகின்ற தி.மு.க. ஆட்சி மீது பொதுமக்கள் அதிருப்தியில் உள்ளனர். எதிர்வரும் பாராளுமன்ற, சட்டமன்ற, உள்ளாட்சி தேர் தல்களில் நமக்கு வெற்றி வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளது. இந்த நேரத்தில் நாம் கிளைக் கழகங்களில் கட்சியை வலுப்படுத்தி சிறப்பாக செயல்படவேண் டும்.
பூத் கமிட்டி நிர்வாகிகள் அர்ப்பணிப்போடு செயல் பட்டால் நாம் வெற்றிக்க னியை எளிதாக பறித்து நமது பொதுச் செயலாளர் எடப்பாடியாரை முதல மைச்சராக்கி தமிழகத்தை மீண்டும் வளம்பெற செய்ய முடியும். அ.தி.மு.க. கட்சியில் சிறப்பாக செயல்படுபவர்க ளுக்கு செயல்பாட்டுக்கு ஏற்ப தக்க மதிப்பு அளிக்கப் படும். இன்றே களத்தில் இறங்கி வேலைபாருங்கள் என்றார்.
கூட்டத்தில் நகர செய லாளர்கள் வக்கீல் துரை முருகேசன் பரமசிவம், ஓன்றிய செயலாளர்கள் ஆர்.எம்.குருசாமி, நவரத்தி னம், பேரூர் செயலாளர்கள், மகளிரணி நகர செயலாளர் ராணி, மாவட்ட இணை செயலாளர் அழகுராணி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் வன ராஜ், ஸ்ரீவில்லிபுத்தார் ஒன்றிய செயலாளர் மயில் சாமி, மாவட்ட அரசு போக் குவரத்து சங்க கவுரவ தலை வர் குருசாமி,
மாவட்ட மாணவரணி செயலாளர் ராஜ்குமார், பொதுக்குழு உறுப்பினர் ஜான்சன், செட்டியார்பட்டி அங்குதுரை பாண்டியன் மகளிரணி ராணி கவிதா, விமலா, ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் அழகாபுரி யான், மாவட்ட பேரவை துணை தலைவர் திருப்பதி, துணை செயலாளர் ராசா, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர்கள் சோலைமலை, யோகசேக ரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்