search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்கேடச பெருமாள் கோவில்"

    • நேற்று காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளும் ரத தரிசனம் நடைபெற்றது.
    • விழாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை சேஷ வாகனத்தில் திருவீதி உலாவும், இரவு தெப்பத்தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது.

    அவினாசி:

    கோவை திருப்பூர் மாவட்டங்களில் பிரசித்தி பெற்றதும் "மேலத்திருப்பதி" எனப் போற்றப்படுவதுமான சேவூர் அருகே உள்ள மொண்டிபாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள் கோவில் தை தேர்த்திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினசரி சிறப்பு பூஜைகள், திருவீதி உலா நடைபெற்றது. 

    முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத வெங்கடேசப்பெருமாள் திருத்தேருக்கு எழுந்தருளும் ரத தரிசனம் நடைபெற்றது. மதியம் 12 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு "கோவிந்தா...கோவிந்தா..." என்ற பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பகல் 2 மணிக்கு தேர் நிலையை அடைந்தது. இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. சேவூர் போலீசார் பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர்.விழாவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை சேஷ வாகனத்தில் திருவீதி உலாவும், இரவு தெப்பத்தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது.   

    ×