search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீர மரணம்"

    • திருவாரூரில் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தீ தொண்டு நாள் நிகழ்வு நடைபெற்றது.
    • ஒரு வாரம் முழுவதும் தீ தடுப்பு மற்றும் தற்காப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும்.

    திருவாரூர்:

    தீயணைப்பு பணி மற்றும் மீட்பு பணிகளின் போது வீர மரணம் அடைந்த தீயணைப்பு துறை வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ம் தேதி தீ தொண்டு நாள் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.

    அந்த வகையில் திருவாரூர் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்தில் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் தீ தொண்டு நாள் நிகழ்வு நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் மாவட்ட அலுவலர் வடிவேலு மற்றும் உதவி மாவட்ட அலுவலர் இளஞ்செழியன் ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் வீர மரணம் அடைந்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

    மேலும் தீ தொண்டு நாளை முன்னிட்டு ஒரு வாரம் முழுவதும் தீ தடுப்பு மற்றும் தற்காப்பு வழிமுறைகள் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்தப் பிரச்சாரம் மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் மக்கள் கூடும் இடங்களில் நடத்தப்படும் எனவும் அலுவலர்கள் தெரிவித்தனர்.

    ×