என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வீடு எரிந்து நாசம்"
- வீட்டில் யாரும் இல்லை. இந்நிலை யில் அவர்களது குடிசை வீட்டில் நேற்று மாலை திடீரென புகை வந்துள்ளது.
- சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி குடிசை எரிந்துள்ளது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அடுத்த நேரிட மானப்பள்ளியை சேர்ந்தவர் லட்சுமணன் (வயது70). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவரது மனைவி பெரியக்கா (65).
நேற்று காலை வழக்கம் போல லட்சமணன் ஆடுகளை மேய்க்க வனப்பகுதிக்கு சென்றுள்ளார். பெரியக்காவும் ஊரக வேலை வாய்ப்பு திட்ட வேலைக்கு சென்றுள்ளார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லை. இந்நிலையில் அவர்களது குடிசை வீட்டில் நேற்று மாலை திடீரென புகை வந்துள்ளது.
சிறிது நேரத்தில் தீ மளமளவென பரவி குடிசை எரிந்துள்ளது. அருகிலிருந்தவர்கள் விரைந்து வந்து குடிசையில் தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த பர்கூர் தீயணைப்பு படை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி தீயை அணைப்பதற்குள் குடிசை முற்றிலும் எரிந்து நாசமானது.
வீட்டில் இருந்த, 5 மூட்டை நெல், அரை மூட்டை அரிசி, ஒன்றரை மூட்டை கம்பு, 1 மூட்டை கேழ்வரகு உள்ளிட்ட உணவுப்பொருட்களுடன் ரேஷன், ஆதார், வங்கி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்ககளும் தீயில் கருகின. விபத்து குறித்து பர்கூர் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆதார் கார்டு, பணம் எரிந்தது
- தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
வேலூர்:
வேலூர் அருகே உள்ள பிள்ளையார் குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம். கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஜெயந்தி. தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர்.
சுந்தரம் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். இன்று காலை சுந்தரத்தின் மனைவி சமையல் செய்வதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைத்தார். அப்போது திடீரென அடுப்பில் எரிந்த தீ குடிசை வீட்டில் பற்றியது.
தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. அதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயந்தி வீட்டிலிருந்த கணவன் மற்றும் பிள்ளைகளை வெளியே அழைத்துக் கொண்டு ஓடி வந்தார். அக்கம் பக்கத்தினர் சேர்ந்து வீட்டில் எரிந்த தீயை அணைக்க முயன்றனர்.
அந்த நேரத்தில் வீட்டில் இருந்த சமையல் கியாஸ் சிலிண்டர் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது.
இதனால் வீடு முழுவதும் பரவி எரிந்தது. தகவல் அறிந்த வேலூர் தீணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீயை அணைத்தனர். வீட்டிலிருந்த பிரிட்ஜ், டி.வி., குழந்தைகளின் பள்ளி சான்றிதழ்கள் ஆதார் கார்டு மற்றும் பணம் ஆகியவை எரிந்து நாசமானது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்தனர்
- அதிகாரிகள் நிவாரண பொருட்கள் வழங்கினர்
ஆற்காடு:
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சக்கரமல்லூரை சேர்ந்தவர் ரவி. இவரது மனைவி ஜானகி. இவருக்கு கணவர் இல்லாததால் ஜானகி மட்டும் குடிசை வீட்டில் வசித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று தீபாவளியையொட்டி அப்பகுதி மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அப்போது பட்டாசு வெடித்து ஜானகியின் குடிசை வீட்டின் மீது விழுந்தது. சிறிது நேரத்தில் குடிசை வீடு மளமளவென தீப்பற்றி எரிந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தங்கள் வீடுகளில் இருந்த தண்ணீரை குடிசை வீட்டின் மீது ஊற்றி தீயை அணைத்தனர். அதற்குள் வீட்டிலிருந்த துணிமணிகள் எரிந்து நாசமானது.
இதுகுறித்து தகவல் அறிந்த தாசில்தார் கோபாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் வருவாய் அலுவலர் வினோத் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று குடிசை வீட்டில் இருந்த ஜானகிக்கு நிவாரண பொருட்களை வழங்கினர்.
- குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது 63). இவர் ஓட்டு வீட்டில் தனது மகளுடன் வசித்து வருகிறார்.
- காலை 11 மணியளவில் சண்முகத்தின் வீடு திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது.
பெரம்பலூர்
பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பாளையம் நடுத்தெருவை சேர்ந்தவர் சண்முகம்(வயது 63). இவர் ஓட்டு வீட்டில் தனது மகளுடன் வசித்து வருகிறார்.
நேற்று காலை இவர்கள் 2 பேரும் வீட்டை பூட்டிவிட்டு அருகே உள்ள குரும்பலூர் மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு சென்று விட்டனர். காலை 11 மணியளவில் சண்முகத்தின் வீடு திடீரென்று தீப்பற்றி எரிய தொடங்கியது.
இதனை கண்ட அக்கம், பக்கத்தினர் உடனடியாக பெரம்பலூர் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து வீட்டின் மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் வீட்டில் இருந்த குளிர்சாதன பெட்டி, 2 கதவுகள், ஒரு மேஜை, மின் விசிறி, கட்டில் ஆகியவை தீக்கு இரையாயின. குளிர்சாதன பெட்டியில் ஏற்பட்ட மின்கசிவு காரணமாக தீப்பற்றி இருக்கலாம் என்று தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.
மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்