search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விஷநாராயணீ செடி"

    • டயாலிசிஸ் எண்ணிக்கையை குறைக்க உதவுகிறது.
    • இதை `பூனை மீசை துளசி’ என்றும் அழைக்கிறார்கள்.

    பூனை மீசை மூலிகையானது பல நன்மைகளை உடலுக்கு அளிக்கிறது. இவை ஆரம்பக்கட்ட சிறுநீரகப் புற்று நோயையும் குணமாக்குகிறது. இதன் பூக்கள், பூனை மீசை போன்றும் இலைகள் துளசி இலை போன்றும் இருப்பதால், இதைப் `பூனை மீசை துளசி' என்னும் அழைக்கிறார்கள்.

     பல நூற்றாண்டுகளாக சிறுநீரகத்தின் செயல்திறனை, சுகாதாரத்தை , மேம்படுத்த பூனை மீசை என்றும் அறியப்படுகிற இந்த மூலிகை பாரம்பரிய மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

    பூனை மீசை மூலிகை வாத நோய், நீரிழிவு, ரத்த அழுத்தம், அடிநா அழற்சி, காக்காய் வலிப்பு, மாதவிடாய் கோளாறுகள், மேகவெட்டை நோய், சிபிலிஸ், சிறுநீரக கற்கள், பித்தப்பைக் கற்கள், கல்லீரல் அழற்சி, வீக்கம், காய்ச்சல் போன்ற பிரச்சனைகளுக்கு ஒரு பரவலான தென்கிழக்கு ஆசியாவில் பயன்படுத்தப்படும் ஒரு பிரபலமான பாரம்பரிய தாவரம் இந்த விஷநாராயணீ செடி.

    விஷநாராயணீ இலைகளை ஒரு நெல்லிக்காய் அளவு எடுத்து காலை, இரவு உணவுக்கு ஒரு மணி நேரம் கழித்து எடுக்கலாம். அல்லது பூனைமீசை இலை 15 மற்றும் விஷ நாராயணி இலை 15 எடுத்து 250 மில்லி நீரில் கலந்து 150 மில்லி ஆக காய்ச்சி வடிகட்டி காலை, மாலை வெறும் வயிற்றில் அருந்தலாம். இவ்வாறு எடுத்துவர உடலில் உள்ள அதிகப்படியான யூரியா, கிரியாட்டினைன் யூரிக் ஆசிட் அளவு குறைந்து இயல்பு நிலைக்கு திரும்பும்.

    சிறுநீரக செயல் திறன் குறைவு மற்றும் சிறுநீர் வெளியேறும் பாதையில் உள்ள தொற்று ஆகியவற்றை சரிசெய்யும், டயாலிசிஸ் எண்ணிக்கையை குறைக்க உதவுகிறது.

    ×