search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விவசாயிகள் குற்றச்சாட்டு"

    • ஏரி வேலை பணியாளர்களை விவசாய பணிகளுக்கு அனுப்பி தேவையை பூர்த்தி செய்ய வேண்டும்.
    • பவர் கிரீட் நிறுவன மூலம் நிலத்தினை எடுத்துக்கொண்டு அதற்குண்டான இழப்பீடுகளை வழங்கவில்லை.

    தருமபுரி,

    தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்ட அரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-

    தனிப்பட்டா வழங்க 15 நாட்களில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கூட்டு பட்டாவை தனி பட்டாவாக மாற்ற வருட கணக்கில் ஆகிறது என குற்றம் சாட்டினர். மேலும், விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளை பேச அனுமதிப்பதில்லை கூட்டம் அதிக நேரம் நடப்பதில்லை. 50 கிலோமீட்டர் கடந்து வந்தாலும் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளின் குறைகள் தீர்க்கப்படுவதில்லை என்றனர்.

    இதேபோன்று கடத்தூர் அடுத்த வெங்கடதாரஅள்ளியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, கரும்பு வெட்டும் எந்திரம் முன்பணமாக பெற்றுக்கொண்டு கரும்பு பாதியை அறுவடை செய்துவிட்டு மீதியை அறுவடை செய்யாமல் விட்டுவிட்டனர். கூலி போக மீத பணத்தை திருப்பியும் தரவில்லை மேற்கொண்டு ஆட்களை வைத்து 3 மடங்கு அதிகம் செலவு செய்து கரும்பை வெட்டி ஆலைக்கு அனுப்பியதாக தெரிவித்தார். மேலும் நில அளவைத் துறையில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை அளவிடு தொடர்பாக விளக்கம் விவசாயிக்கு தெரிவிப்பதில்லை தனியார் ஆட்களை வைத்துக் கொண்டு அளவீடு செய்கின்றனர் என குற்றம் சாட்டினார். விவசாயிகள் சங்க மாநில தலைவர் சின்னசாமி பேசுகையில், பவர் கிரீட் நிறுவன மூலம் நிலத்தினை எடுத்துக்கொண்டு அதற்குண்டான இழப்பீடுகளை வழங்கவில்லை அதனை உடனே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்

    தருமபுரி மாவட்டத்தில் ஐந்து டிராக்டர்கள் மட்டுமே உள்ளன அதனை கொண்டு தருமபுரி மாவட்டம் முழுவதும் உழவு பணிகளை மேற்கொள்ள இயலவில்லை முன்பு உள்ளது போல தனியார் டாக்டர்களை வாடகைக்கு எடுத்து விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். பாப்பிரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் கூறும்விபோது, விவசாய பணிகளுக்கு ஆள் பற்றாக்குறை நிலவுகிறது ஏரி வேலை பணியாளர்களை விவசாய பணிகளுக்கு அனுப்பி விவசாயிகளின் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மாங்காய் விலை நிர்ணயம் செய்தது போல தருமபுரி மாவட்டத்தில் மாங்காய் விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

    • விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது.
    • உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை கடையை அரசு சார்பில் தொடங்கிட வேண்டும்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் ஜெயசந்திர பானு ரெட்டி தலைமையில் நடந்தது.

    மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கூடுதல் கலெக்டரும், திட்ட இயக்குநருமான வந்தனா கார்க் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசியதாவது:-

    மாமரங்களில் பராமரிப்பு பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், மருந்துகள் விற்பனை செய்யும் பெரும்பாலான கடைகளில் விலைப்பட்டியல் பார்வைக்கு வைக்கப்படவில்லை. மேலும், போலி மருந்துகளை விற்பனை செய்கின்றனர். ஏற்கனவே, 2 ஆண்டுகளாக மா விவசாயிகள் இழப்பினை சந்தித்து வருகிறோம். எனவே, தோட்டக்கலை அல்லது வேளாண்மைத்துறை சார்பில் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் விற்பனை கடையை அரசு சார்பில் தொடங்கிட வேண்டும்.

    மேலும், மாவட்டத்தில் அம்மை மற்றும் வைரஸ் நோய்களால் கால்நடைகள் பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளுக்கான தடுப்பூசிகள் தட்டுப்பாடுகள் அதிகளவில் உள்ளன. போதிய அளவில் தடுப்பூசிகள் கொள்முதல் செய்து, கால்நடைகளுக்கு செலுத்தி, கால்நடை விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்.

    கிருஷ்ணகிரி ஆவின் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய தொகை வழங்கப்படுவதில்லை. ஏற்கனவே தீவன விலை உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, பால் கொள்முதல் விலையை அரசு உடனடியாக உயர்த்தி அரசாணை வெளியிட வேண்டும். தொப்படிகுப்பத்தில் இருந்து சந்தூர் ஏரிக்கு தண்ணீர் செல்லும் கால்வாய் உடனடியாக தூர்வார வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் பேசினார்கள்.

    அதற்கு பதில் அளித்து கலெக்டர் பேசியதாவது:-

    அரசு சார்பில் உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்து விற்பனை தொடங்க வழிவகை இல்லை. இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். மேலும், உழவர் உற்பத்தியாளர்கள் குழு மூலம் தொடங்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

    கால்நடைகளுக்கு தடுப்பூசிகள் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. நெல் வயலில் சாலை அமைக்கும் பணியை உடனடியாக நிறுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு யானைகளை விரட்டிட 400 தேனீ வளர்ப்பு பெட்டிகள் வழங்கி, தேனீக்கள் வளர்க்க விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. தற்போது 10 சதவீத பேர் கூட தேனீக்கள் வளர்க்கவில்லை. மீண்டும் விவசாயிகளுக்கு தேனீக்கள் வளர்ப்பு குறித்து தொடர் பயிற்சியும், விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதில் விவசாய சங்க பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    • கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதாக விவசாயிகள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.
    • ரசீது இல்லாமல் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது

    அரியலூர்

    அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் தற்போது மக்காச்சோளம் பயிரிட்டு உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழையால் மக்காசோளத்திற்கு யூரியா தேவை அதிகரித்துள்ளது. இதனால் உரங்களை வாங்க விவசாயிகள் கடைக்கு சென்று வருகின்றனர். ஆனால் போதுமான உரங்கள் கிடைப்பதில்லை. இதனால் விடியற்காலையில் இருந்து பூட்டியிருக்கும் கடைக்கு முன்பு காத்திருந்து ரூ.400-க்கு யூரியா உரங்களை வாங்கி செல்கின்றனர். கூடுதல் விலை என்றாலும் யூரியா கிடைக்கிறதே என்று விவசாயிகள் பல மணி நேரம் காத்திருந்து வாங்கி செல்கின்றனர். அதுவும் உரிய ரசீது இல்லாமல் விற்பனை செய்யப்படுவதும் தெரியவந்துள்ளது. ஒரு துண்டு சீட்டில் விவசாயியின் பெயரை எழுதி 2 என்று எழுதி கொடுத்து அதன் பிறகு யூரியாவை விற்பனை செய்கின்றனர். இது குறித்து வேளாண்மைதுறையிடம் புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை இல்லை என அவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். ஏற்கனவே அரியலூர் மாவட்டத்தில் யூரியா தட்டுப்பாடு என செய்தி வெளியிட்டும் வேளாண்மை துறை அதிகாரிகளின் போதிய அக்கறை இன்மையாலும் முறையாக திட்டமிடல் இல்லாததாலும் இதுபோன்று நடப்பதாகவும் விவசாயிகள் குற்றம்சாட்டி வருகிறார்கள். எனவே கூடுதல் விலைக்கு உரங்களை விற்கும் கடைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×