search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழாக்கள்"

    கேரள மாநிலத்தில் மிகப்பெரிய சேதத்தை ஏற்படுத்திய வெள்ளத்தின் எதிரொலியாக, மாநிலத்தின் அனைத்து கொண்டாட்டங்களையும் அடுத்த ஓராண்டுக்கு ஒத்திவைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத அளவு கொட்டி தீர்த்த கனமழையால் பல்வேறு பகுதிகள் உருக்குலைந்தன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணியிலும், அதற்காக நிதி திரட்டும் பணியிலும் மாநில அரசு ஈடுபட்டுள்ளது.



    இந்நிலையில், கேரள மாநிலத்தில் வழக்கமாக நடைபெறும் சர்வதேச திரைப்பட கண்காட்சி உள்ளிட்ட அனைத்து கொண்டாட்டங்களையும் அடுத்த ஓராண்டுக்கு ஒத்திவைக்க கேரள அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம், நிதி சேமிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மரியாதை செலுத்தவும் கேரள அரசு முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. #KeralaFloods
    ×