search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விழா மேடை"

    • முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு வருகிற 25, 26-ந் தேதி வருகிறார்.
    • இதற்காக சரளையில் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    ஈரோடு:

    முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்று பயணமாக ஈரோடு மாவட்டத்திற்கு வருகிற 25, 26-ந் தேதி வருகிறார். அவர் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

    வருகிற 25-ந் தேதி திருப்பூரில் நடைபெறும் விழாவில் கலந்து கொள்ளும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள கள்ளிப்பட்டிக்கு வருகிறார்.

    அங்கு மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் முழு உருவ சிலையை திறந்து வைத்து பேசுகிறார். பின்னர் அங்கிருந்து ஈரோடு காலிங்கராயன் இல்லத்துக்கு வந்து இரவு ஓய்வு எடுக்கிறார்.

    மறுநாள் 26-ந் தேதி ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலை சரளை அருகே நடக்கும் அரசு விழாவில் பங்கேற்கிறார்.

    இந்த நிகழ்ச்சியில் சோலார் புதிய பஸ் நிலையம் கட்டும் பணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து கட்டி முடிக்கப்பட்ட கனிமார்க்கெட் ஜவுளி சந்தை வளாகம், காளை மாட்டு சிலை அருகே மாநகராட்சியின் வணிக வளாகம் உள்ளிட்ட முடிவடைந்த திட்டங்களை திறந்து வைக்கிறார்.

    விழாவில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

    இதற்காக சரளையில் மேடை அமைக்கும் பணி நடந்து வருகிறது. இங்கு விழா மேடை பயனாளிகள் அமரும் இடம் பொதுமக்கள் கட்சியினர் பங்கேற்கும் வளாகம், வாகன நிறுத்தம், முக்கிய பிரமுகர்கள் வாகன நிறுத்தம், சுகாதார வளாகங்கள் போன்றவை அமைக்கும் பணி நடந்து வருகிறது.

    இந்த பணிகளை அமைச்சர்கள் முத்துசாமி, சாமிநாதன், கலெக்டர் கிருஷ்ணனுண்ணி, குறிஞ்சி. சிவக்குமார் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    ×