search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விலை ஏற்றம்"

    • மதுரையில் கிலோ தக்காளி 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
    • வரத்து குறைவதால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளது.

    மதுரை

    மதுரையில் கடந்த ஒரு மாதமாக தக்காளி விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. தற்போது கிலோ 150 ரூபாய் வரை விற்கப்ப டுவதால் தக்காளியை வாங்க முடியாமல் பொது மக்கள் கடும் தவிப்பில் உள்ளனர்.

    ஏழைகளின் ஆப்பிள் என்று வர்ணிக்கப்படும் தக்காளி பயன்படுத்தப்படாத உணவு பதார்த்தங்களே இல்லை என்று சொல்லலாம். பிரியாணி முதல் சட்னி வரை தக்காளியை பயன்படுத்தினால் தான் ருசியாக சாப்பிட முடியும் என்பது தமிழர்களின் உணவு பழக்க வழக்கங்களில் முக்கியமானதாகும்.

    அந்த வகையில் தக்காளியின் மகத்துவம் அன்றாட உணவு பண்டங்களில் முழுமையாக தன்னை ஆக்கிரமிப்பதால் தக்காளியின் தேவையும் அதிகமாக உள்ளது. தற்போது மதுரை மார்க்கெட்டுகளுக்கு மதுரை, விருதுநகர், தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினசரி தக்காளி கொண்டு வரப்படுவது வழக்கம் .

    மேலும் அண்டை மாநிலமான ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் லாரிகளில் தக்காளி மதுரைக்கு விற்ப னைக்காக எடுத்து வரப்படும். ஆனால் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெய்த மழை மற்றும் மகசூல் குறைவு காரணமாக தக்காளி உற்பத்தி அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.மேலும் உள்ளூர் தேவையும் இருப்பதால் மதுரை மார்க்கெட்டுக்கு கொண்டுவரப்படும் தக்காளியின் அளவும் குறைவாக உள்ளது.

    தேவை அதிகமாக இருப்பதாலும் வரத்து குறைவு காரணமாகவும் கடந்த ஒரு மாதமாக தக்காளியின் விலை ஏற்றம் தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது.

    விலை ஏற்றத்தை குறைக்க மதுரை மாவட்டத்தில் உள்ள 23 நியாய விலை கடைகளில் தக்காளியை விற்க கூட்டுறவு துறை நடவடிக்கை மேற் கொண்டது. ஆனாலும் தக்காளியின் விலை ஏற்றத்தை தடுக்க முடிய வில்லை.

    அந்த வகையில் தொடர்ந்து தக்காளி விலை ஏறு முகத்தில் உள்ளது. மதுரையில் உள்ள உழவர் சந்தைகளில் தக்காளி கிலோ 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது வெளி மார்கெட்டுகளில் ரூ.140 முதல் 150 வரை தக்காளி விற்பனை செய்யப்பட்டது. தக்காளியின் இந்த விலை ஏற்றம் பொதுமக்களை வெகுவாக பாதித்துள்ளது. எனவே வீடுகள் மற்றும் ஓட்டல்களில் தக்காளியின் பயன்பாடு குறைக்கப் பட்டுள்ளது.

    மேலும் தக்காளியின் வரத்து தொடர்ந்து குறைந்து வருவதால் மேலும் விலை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக வியா பாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே தக்காளி பயன் பாட்டை குறைத்துக் கொள்வதை தவிர வேறு வழியில்லை என்ற எண்ணத் தில் பொதுமக்களும் தக்காளியை பார்த்துவிட்டு வாங்கும் எண்ணத்தை குறைத்துக் கொள்வதாகவே தெரிவித்துள்ளனர்.

    தக்காளியின் வரத்து மற்றும் விலை ஏற்றத்தை கண்காணிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். தக்காளி சேமிப்பு கிடங்குகளில் பதுக்கப்படுவதை தடுத்து நிறுத்தி பொது மக்களுக்கு நியாயமான விலையில் தக்காளியை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்களும் இல்லத்தரசிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×