என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வியாபாரி மர்ம சாவு"
- மல்லூர் வேங்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (39). இவர் அங்கு காய்கறி கடை நடத்தி வந்தார்.
- இதனிடையே பனமரத்துப்பட்டி பிரிவில் அவரது வண்டி தனியாக நின்றது. அருகில் சாலையோரம் கார்த்தி மயங்கிய நிலையில் கிடந்தார்.
சேலம்:
சேலம் மாவட்டம் மல்லூர் வேங்காம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கார்த்தி (39). இவர் அங்கு காய்கறி கடை நடத்தி வந்தார். நேற்று பனமரத்துப்பட்டி சந்தைக்கு காய்கறி வாங்க சென்றார். அதன்பின்னர் வெகுநேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இதனிடையே பனமரத்துப்பட்டி பிரிவில் அவரது வண்டி தனியாக நின்றது. அருகில் சாலையோரம் கார்த்தி மயங்கிய நிலையில் கிடந்தார்.
இதையடுத்து உறவினர்கள் அவரை மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்த போது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்து மல்லூர் போலீசார் கார்த்தியின் உடலை பிரேத பரிசோதனைக்கு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தினர்.
இதில் கார்த்தி சபரிமலை அய்யப்பனுக்கு மாலை அணிவித்து கோவிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பிறகு அதிக மது குடித்து உள்ளார். இதனால் வலிப்பு நோய் ஏற்பட்டு இறந்தது தெரியவந்தது.
இதுகுறித்து உறவினர் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மனைவி போலீசில் புகார்
- போலீஸ் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 69). அரிசி வியாபாரி. இவர் இன்று காலை இவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
அரிசி வியாபாரி சாவு
அவரது மனைவி சரஸ்வதி இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து மோகனின் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணை
இதுகுறித்து போலீசார் மோகன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதாவது காரணமா என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்