என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆம்பூரில் அரிசி வியாபாரி மர்ம சாவு
- மனைவி போலீசில் புகார்
- போலீஸ் விசாரணை
ஆம்பூர்:
ஆம்பூர் அடுத்த கிருஷ்ணாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் மோகன் (வயது 69). அரிசி வியாபாரி. இவர் இன்று காலை இவரது வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார்.
அரிசி வியாபாரி சாவு
அவரது மனைவி சரஸ்வதி இது குறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து மோகனின் உடலை கைப்பற்றி ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
விசாரணை
இதுகுறித்து போலீசார் மோகன் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு எதாவது காரணமா என வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






