search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விபத்தில் படுகாயம் அடைந்த"

    • சிகிச்சை பெற்று வந்த மாதேஸ் சிகிச்சை பலனின்றி இறந்தார்.
    • பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    அந்தியூர்:

    சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் அடுத்த மாக்கம்பாளையம் பகுதியை சுரேஷ் (18). இவர் மற்றும் மாக்கம்பாளையம் பகுதியை சேர்ந்த மகேஷ் (19) ஆகிய இருவரும் மாக்கம் பாளை யத்தில் இருந்து உறவினரை பார்ப்பதற்காக மோட்டார் சைக்கிளில் அந்தியூர் அடுத்த பர்கூர் பகுதிக்கு சென்றனர்.

    அவர்கள் அந்தியூர் அருகே வரட்டு பள்ளம் அணை செக்போஸ்ட் மலை அடி வார பகுதியில் இருந்து பர்கூர், மைசூருக்கு ரோட்டில் மலைப்பாதை வழியாக சென்று கொண்டி ருந்தனர்.

    அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரி யாத ஒரு வாகனம் அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

    இதில் சம்பவ இடத்திலேயே சுரேஷ் இறந்தார். இதில் மாதேஷ் படுகாயம் அடைந்த மாதேஷ் மீட்க ப்பட்டு அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு மேல் சிகி ச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த மாதேஸ் நேற்று மாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து பர்கூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

    ×