search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விநாயகர் சதுர்த்தி விழாவில்"

    • வழிகாட்டி நெறி முறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
    • சென்ற ஆண்டு சிலை வைத்தவர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படும்.

    பவானி:

    பவானி வர்ணபுரம் முதல் வீதியில் உள்ள ஒரு தனியார் திருமண மண்ட பத்தில் வரும் 18-ந் தேதி கொண்டாடப்பட உள்ள விநாயகர் சதுர்த்தி விழாவின் போது கடைபிடிக்க வேண்டிய வழிகாட்டி நெறி முறைகள் குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

    பவானி டி.எஸ்.பி. அமிர்தவர்ஷினி தலைமை வகித்தார். சித்தோடு இன்ஸ்பெக்டர் முருகையா, அந்தியூர் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், பவானி அனைத்து மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் பொன்னம்மாள் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கலந்து கொண்ட இந்து அமைப்பினர் இடை யே போலீசார் பேசுகையில்,

    சிலை ஒன்பது அடிக்கும் மேல் உயரம் இருக்கக் கூடாது. சென்ற ஆண்டு சிலை வைத்தவர்களுக்கு மட்டுமே இந்த ஆண்டு அனுமதி வழங்கப்படும். சென்ற ஆண்டு ஊர்வலம் நடத்தி யவர்களுக்கு மட்டும் இந்த ஆண்டு ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்ப டும். சிலை வைக்கப்படும் நபர்கள் சிலையை பாது கா ப்பாகவும், அரசு வழிகாட்டு நெறிமுறை பின்பற்றப்பட வேண்டும் என்பது உட்பட ஆலோசனைகள் வழங்கப்பட்டது.

    இந்த ஆலோசனை கூட்டத்தில் பவானி, ஆப்பக்கூடல், அம்மா பேட்டை, வெள்ளித்திருப்பூர் போன்ற பகுதி சப்- இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.

    ×