search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விடுதலை சிறுத்தை பிரமுகர் கொலை"

    • கொலை நடந்த மறுநாளே சுகாஷ், சுனில் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேர் அம்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
    • அதிஷ் கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாக அவரது அண்ணன் குமரேசனை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

    குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அதீஸ் (வயது29). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி துணை அமைப்பாளராக இருந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவருக்கும் அவரது அண்ணன் குமரேசனின் மகன்களான சுகாஷ் (25), சுனில் (21) ஆகியோருக்கும் இடையே குடும்பதகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சுகாஷ், சுனில் ஆகிய இருவரும் சேர்ந்து அதீசை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கொலை நடந்த மறுநாளே சுகாஷ், சுனில் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேர் அம்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் அதிஷ் கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாக அவரது அண்ணன் குமரேசனை இன்று காலை போலீசார் கைது செய்தனர். தம்பி கொலையில் அண்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • கலவை அடுத்த மழையூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன்.
    • ராணிபேட்டை டி.எஸ்.பி. பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மழையூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 36). விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகரான இவர் ராணிப்பேட்டை நகராட்சி துணைத் தலைவர் ரமேஷ் கர்ணாவின் கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து செய்யாத்து வன்னான் சுடுகாடு அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் பார்த்திபனை கை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கலவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ராணிபேட்டை டி.எஸ்.பி. பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

    விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர். கொலை செய்யப்பட்டதால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

    ×