search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குன்றத்தூர் விடுதலை சிறுத்தை பிரமுகர் கொலையில் அண்ணன் கைது
    X

    குன்றத்தூர் விடுதலை சிறுத்தை பிரமுகர் கொலையில் அண்ணன் கைது

    • கொலை நடந்த மறுநாளே சுகாஷ், சுனில் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேர் அம்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
    • அதிஷ் கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாக அவரது அண்ணன் குமரேசனை இன்று காலை போலீசார் கைது செய்தனர்.

    குன்றத்தூரை அடுத்த தரப்பாக்கம் பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் அதீஸ் (வயது29). விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலந்தூர் சட்டமன்ற தொகுதி துணை அமைப்பாளராக இருந்தார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவருக்கும் அவரது அண்ணன் குமரேசனின் மகன்களான சுகாஷ் (25), சுனில் (21) ஆகியோருக்கும் இடையே குடும்பதகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரம் அடைந்த சுகாஷ், சுனில் ஆகிய இருவரும் சேர்ந்து அதீசை ஓட ஓட விரட்டி சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இது குறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கொலை நடந்த மறுநாளே சுகாஷ், சுனில் மற்றும் அவரது நண்பர்கள் உள்ளிட்ட 4 பேர் அம்பத்தூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    இந்த நிலையில் அதிஷ் கொலை வழக்கில் உடந்தையாக இருந்ததாக அவரது அண்ணன் குமரேசனை இன்று காலை போலீசார் கைது செய்தனர். தம்பி கொலையில் அண்ணன் கைது செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×