search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆற்காடு அருகே விடுதலை சிறுத்தை பிரமுகர் வெட்டி கொலை
    X

    கொலை செய்யப்பட்ட இடத்தில் பிணத்தை பார்வையிட்டு போலீசார் விசாரணை நடத்திய காட்சி


    ஆற்காடு அருகே விடுதலை சிறுத்தை பிரமுகர் வெட்டி கொலை

    • கலவை அடுத்த மழையூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன்.
    • ராணிபேட்டை டி.எஸ்.பி. பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆற்காடு:

    ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த மழையூர், பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 36). விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகரான இவர் ராணிப்பேட்டை நகராட்சி துணைத் தலைவர் ரமேஷ் கர்ணாவின் கார் டிரைவராக வேலை செய்து வந்தார்.

    இந்த நிலையில் இன்று காலை 7 மணிக்கு வீட்டில் இருந்து செய்யாத்து வன்னான் சுடுகாடு அருகே இயற்கை உபாதை கழிக்க சென்றார்.

    அப்போது அங்கு மறைந்திருந்த மர்ம நபர்கள் பார்த்திபனை கை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு தப்பி சென்றனர். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து கலவை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    ராணிபேட்டை டி.எஸ்.பி. பிரபு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். முன் விரோதம் காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன.

    விடுதலை சிறுத்தை கட்சி பிரமுகர். கொலை செய்யப்பட்டதால் அங்கு பதட்டம் நிலவி வருகிறது. ஏராளமான போலீசார் அப்பகுதியில் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

    Next Story
    ×