search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் தாக்கிய கும்பல்"

    தேனி அருகே சொத்து பிரச்சனையில் வாலிபரை தாக்கிய கும்பல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    தேனி:

    தேனி அருகே அமச்சியாபுரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேஸ்வரன் (வயது34). இவரது உறவினர் அதே பகுதியை சேர்ந்த பூவலிங்கம். இவர்களுக்கு இடையே சொத்து பிரச்சனை தொடர்பாக குடும்ப தகராறு இருந்து வந்தது.

    இதனால் கடந்த 11 வருடங்களாக 2 குடும்பத்தினரும் தனித்தனியாக கோவில் திருவிழாவை நடத்தி வந்தனர். சம்பவத்தன்று கோவில் திருவிழா நடந்தபோது அங்கு வந்த ராஜேஸ்வரனிடம், பூவலிங்கம் அவரது மகன்கள் விஸ்வநாதன், தண்டாயுதபாணி ஆகியோர் மீண்டும் சொத்து தொடர்பாக வாக்குவாதம் செய்து இரும்பு கம்பியால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.

    இது குறித்து ராஜேஸ்வரன் க.விலக்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×