search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாரச் சந்தை"

    • பக்ரீத் பண்டிகையையொட்டி தியாகதுருகம் வாரச் சந்தையில் ரூ.40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டது.
    • இஸ்லாமியர்கள் பலரும் போட்டி போட்டு க்கொண்டு வாங்கி சென்றனர்.

    கள்ளக்குறிச்சி:

    தியாகதுருகத்தில் ஒவ்வொருவாரமும் சனிக்கிழமை தோறும் வாரச்சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு தியாகதுருகம், ரிஷிவந்தியம், சங்கராபுரம், உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் சுமார் 500 க்கும் மேற்பட்ட ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனையொட்டி ஆடுகளை வாங்குவதற்கு உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த வியாபாரிகள் மற்றும் இஸ்லாமியர்கள் பலரும் போட்டி போட்டு க்கொண்டு வாங்கி சென்றனர்.இது குறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில் பக்ரீத் பண்டிகையையொட்டி கூடுதல் விலைக்கு விற்கலாம் என விவசாயிகள் பலரும் தங்கள் ஆடுகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர். இதனால் வியாபாரிகளும் ஆடுகளை போட்டிபோட்டு ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். சந்தையில் ஆடு குறைந்த விலையாக ரூ.6000 ரூபாயும் அதிகபட்சமாக ரூ.23,000 வரை விற்பனை ஆனது. ஆட்டுக்குட்டி ரூ. 2000 முதல் ரூ.6000 வரை விற்பனை செய்யப்பட்டது. பக்ரீத் பண்டிகையை யொட்டிவழக்கமாக சந்தைக்கு வரும் ஆடுகளை விட கூடுதலான ஆடுகள் சந்தைக்கு வந்தன. இதனால் சுமார் 40 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை நடைபெற்று இருக்கலாம் என கூறினார்.

    ×