search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர் பெயர்"

    • சுறா சுமன் பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
    • போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை:

    சென்னை திருவல்லிக்கேணி சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 116-வது வார்டு அயோத்திக் குப்பம் பகுதியில் பா.ஜனதாவை சேர்ந்த சுறா சுமன் மற்றும் நிர்வாகிகள் வாக்காளர் பெயர் சரிபார்ப்பு முகாம் நடத்தினார்கள்.

    மேஜை அமைத்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தி.மு.க. வட்ட செயலாளர் தலைமையிலான கும்பல் திடீரென்று வந்து அங்கு இருந்த பா.ஜனதாவினர் மீது தாக்கு தல் நடத்தினார்கள்.

    அவர்களை சுற்றி வளைத்து சரமாரியாக தாக்கினார்கள்.

    இதில் சுறா சுமன் பலத்த காயங்களுடன் ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்ற நிர்வாகிகளுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    இதையடுத்து மெரினா போலீசார் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்களை கைது செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    • புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யவும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.
    • தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

    சிவகிரி:

    சிவகிரி பேரூராட்சி பகுதியில் 24 மையங்களில் வாக்காளர் பெயர் பட்டியலில் விடுபட்டவர்கள், புதிதாக பெயர் சேர்க்கவும், பெயர் மற்றும் முகவரி திருத்தம் செய்யவும் நடைபெறும் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற்றது.

    முகாம்களில் நடக்கும் பணிகளையும், வாக்குசாவடி முகவர்கள் மேற்கொண்டு வரும் பணிகளையும் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில், மாவட்ட மருத்துவர் அணி அமைப்பாளரும் சிவகிரி பேரூர் செயலாளருமான செண்பகவிநாயகம் முன்னிலையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. இதில் இறப்பு, இரட்டை பதிவுகள், இடம் மாறியவர்கள் விபரம் முக்கியமாக அறிவுறுத்தப்பட்டது.

    முகாமில் அவைத்தலைவர் துரைராஜ், வாக்கு சாவடி முகவர்கள் வீரமணி, ரூபன் குமார், கணேசன், பிச்சை மணி, மாரித்துரை, ராமசந்திரன், இளையராஜா, மதுரை வீரன், வீரபாண்டியன், திருமலைக்குமாரசாமி, அனந்தபிள்ளை, கவுன்சிலர்கள் கிருஷ்ணலீலா, முத்துலெட்சுமி தங்கராஜ், ஒன்றிய விவசாய அணி அமைப்பாளர் கார்த்திக், வார்டு செயலாளர்கள், நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    ×