search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம்"

    • றப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
    • 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

    ஊட்டி,

    நீலகிரி மாவட்டம், ஊட்டி நகராட்சிக்குட்பட்ட பகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தங்கள் ஆகிய பணிகள் மேற்கொள்ளும் சிறப்பு முகாமினை மாவட்ட கலெக்டர் அம்ரித் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    பின்னர் கலெக்டர் அம்ரித் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைப்படி, 01.01.2023-2ஐ தகுதிநாளாகக் கொண்டு 09.11.2022 முதல் 08.12.2022 வரை வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறைத் திருத்தம் நடைபெறுகிறது. மேலும் 01.01.2023 அன்று 18 வயது பூர்த்தியடைந்த நபர்கள் தங்களது பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.

    மேலும், வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்குதல், பிழைதிருத்தங்கள், முகவரி மாற்றங்கள் மற்றும் வாக்காளர் அடையான அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்றவற்றிற்கும் விண்ணப்பிக்கலாம். மேலும், வருவாய் கோட்டாட்சியர் அலுவலகங்கள், வட்டாட்சியர் அலுவலகங்கள் மற்றும் நகராட்சி அலுவலகங்கள் ஆகியவற்றில் 09.11.2022 அன்று முதல் அனைத்து வேலை நாட்களிலும் காலை 10.00 மணி முதல் மாலை 5.00 மணிவரை பொதுமக்கள் உரிய படிவத்தில் ஆதாரங்களுடன் பூர்த்தி செய்து விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

    ஏற்கனவே 12:11.2022 மற்றும் 13.11.2022 ஆகிய இரு நாட்கள் சிறப்பு முகாம்கள் நடைப்பெற்றது. அதை போல் இன்று 26.11.2022 மற்றும் நாளை 27.11.2022 காலை 10.00 மணி முதல் அனைத்து வாக்குசாவடிகளிலும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகிறது. இதில் பெயர் சேர்த்தல், நீக்குதல் மற்றும் திருத்தம் செய்தல் மற்றும் முகவரி மாற்றங்கள் மேற்கொள்ளுதல், வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் போன்றவற்றிக்கு விண்ணப்பங்களை வாக்குசாவடி நிலை அலுவலர்களிடமே பெற்று ஆதாரங்களுடன் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

    மேலும் பொதுமக்கள் நடைபெறும் சிறப்பு முகாமினை பயன்படுத்தி சம்மந்தப்பட்ட வாக்குச்சா வடிகளை அணுகி வரைவு வாக்காளர் பட்டியலை பார்வையிட்டும், திருத்தங்க ள் இருப்பின், அதனை சரி செய்வதற்குரிய படிவத்தை பெற்று உரிய ஆதாரங்க ளுடன் பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.

    வாக்குசாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்களின் வீட்டுக்கு மூன்று அல்லது நான்கு முறை சென்று ஆய்வு செய்யும்போது, வாக்காளர்கள் இறந்துவிட்டதாக வீட்டின் அருகில் உள்ளவர்கள் தெரிவிக்கும் பட்சத்தில், அந்த விவரத்தினை சம்மந்தப்பட்ட வாக்குசாவடி நிலை முகவர்கள் மூலம் உறுதி செய்து, சம்மந்தப்பட்ட வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், செம்மையான வாக்காளர் பட்டியல் வெளியிடும் வகையில் அனைவரும் சிறப்பாக பணியாற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தொடர்ந்து இன்று 2-வது நாளாக நீலகிரி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு முகாம் நடந்தது. 

    ×