search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழிகாட்டி நிகழ்ச்சி"

    • செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்கள் எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது? என்பது குறித்த வழிகாட்டிக் கருத்தரங்கம் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமையில் நடந்தது. முதல்வர் பெரியசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அமெரிக்காவில் உள்ள வீ செர்வ் பவுண்டேசன் நிறுவனர் டாக்டர். எம்.எஸ்.விஜி கலந்து கொண்டு பேசுகையில், அப்துல்கலாம் போன்று வாழ்வில் முன்னேற நீங்கள் ஒவ்வொருவரும் கனவு காண வேண்டும்.

    இன்று அறிவியல் சார்ந்த ஆராய்ச்சித் துறையில் மாணவ, மாணவிகளின் பங்களிப்பும், ஆர்வமும் அதிகரித்து வருவது மகிழ்சியாக உள்ளது. அதுமட்டுமின்றி சமூக நலனிலும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். கல்விப்பணியோ அல்லது மற்ற துறைகளிலோ முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்தால் மட்டுமே சிறப்பானதொரு இடத்தை அடைய முடியும். எழுதப்படிக்க தெரியாத ஒரு 10 பேருக்காவது நம்மால் முடிந்த அளவு கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார். செயற்கை நுண்ணறிவுத்துறை பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    • சிவகங்கையில் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் விடுதி மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
    • மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய வாய்ப்புக்கள் என்னென்ன உள்ளது என்பது குறித்து எடுத்துரைக்கப்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மருது பாண்டியர் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல கல்வி விடுதிகளில் தங்கிபடிக்கும் மாணவ- மாணவிகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது. இதில் கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கி பேசியதாவது:-

    கடந்தாண்டும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல கல்வி விடுதிகளில் தங்கி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதன் வாயிலாக 10-ம் வகுப்பு, 12-ம் வகுப்பு மற்றும் உயர்கல்வியில் 3-ம் ஆண்டு படித்து வரும் மாணவர்களுக்கு பயனுள்ள வகையில், பல்வேறு கருத்துக்கள் எடுத்துரைக்கப்பட்டு வருகின்றன.

    மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கக்கூடிய வாய்ப்புக்கள் என்னென்ன உள்ளது என்பது குறித்து எடுத்துரைக்கப்படுகிறது. மாணவர்கள் மேல்நிலை கல்வி படிப்பது தொடர்பாகவும், பின்னர் உயர்நிலைக்கல்விக்கு பயனுள்ள வகையிலும், அதனைத்தொடர்ந்து, வேலைவாய்ப்புகள் குறித்தும், மானியத்துடன் கூடிய கடனுதவிகள் பெற்று சுய தொழில்கள் தொடங்கி பயன்பெறும் வகையிலும், திறன்மிக்க கருத்தாளர்களைக் கொண்டு இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

    இந்த நிகழ்ச்சியின் வாயிலாக எடுத்து ரைக்க ப்படும் கருத்துக்களை மாணவர்கள் உள்வாங்கி தங்களுக்கான வாழ்க்கை வழிமுறைகளை தேர்ந்தெடுப்பதற்கு இதனை அடிப்படையாக பயன்படுத்திக் கொண்டு பயன்பெற வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் மணிகணேஷ், உதவி இயக்குநர் (மாவட்ட திறன் பயிற்சி) கர்ணன், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் ராஜேசுவரி, கடற்சார் பொறியியல் அதிகாரி மற்றும் உயர்கல்வி வழிகாட்டி கலைமணி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) சண்முகநாதன், மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

    ×