search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி
    X

    மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி

    • செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்களுக்கான வழிகாட்டி நிகழ்ச்சி நடந்தது.
    • விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் செய்யது அம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் மாணவர்கள் எதிர்காலத்தை எப்படி எதிர்கொள்வது? என்பது குறித்த வழிகாட்டிக் கருத்தரங்கம் தாளாளர் டாக்டர் சின்னத்துரை அப்துல்லா தலைமையில் நடந்தது. முதல்வர் பெரியசாமி வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அமெரிக்காவில் உள்ள வீ செர்வ் பவுண்டேசன் நிறுவனர் டாக்டர். எம்.எஸ்.விஜி கலந்து கொண்டு பேசுகையில், அப்துல்கலாம் போன்று வாழ்வில் முன்னேற நீங்கள் ஒவ்வொருவரும் கனவு காண வேண்டும்.

    இன்று அறிவியல் சார்ந்த ஆராய்ச்சித் துறையில் மாணவ, மாணவிகளின் பங்களிப்பும், ஆர்வமும் அதிகரித்து வருவது மகிழ்சியாக உள்ளது. அதுமட்டுமின்றி சமூக நலனிலும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். கல்விப்பணியோ அல்லது மற்ற துறைகளிலோ முழு அர்ப்பணிப்பு உணர்வோடு செய்தால் மட்டுமே சிறப்பானதொரு இடத்தை அடைய முடியும். எழுதப்படிக்க தெரியாத ஒரு 10 பேருக்காவது நம்மால் முடிந்த அளவு கல்வியை கற்றுக்கொடுக்க வேண்டும் என்றார். செயற்கை நுண்ணறிவுத்துறை பேராசிரியர் கார்த்திகேயன் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடுகளை துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×