search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழங்கல்"

    • கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு தலா 3 தென்னங்கன்றுகள் வீதம் 800 பண்ணைக் குடும்பங்களுக்கு 2400 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
    • அட்மா தலைவர் பி.பி.தனராசு முன்னிலையில் விவசாயிகளுக்கு தென்னங்–கன்றுகள் வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள கோதூர், இராமதேவம், நடந்தை, மேல்சாத்தம்பூர் ஆகிய கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு தலா 3 தென்னங்கன்றுகள் வீதம் 800 பண்ணைக் குடும்பங்களுக்கு 2400 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

    ராமதேவம் கிராமத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி அவர்கள் தலைமையில் அட்மா தலைவர் பி.பி.தனராசு முன்னிலையில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் பாபு, துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜன், வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    • குமாரபாளையம் அருகே உள்ள வீரப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
    • 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு விழா நடைபெற்றது.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் அருகே உள்ள வீரப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு குமாரபாளையம் நேதாஜி சமூக சேவை மையம் சார்பில் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.

    இவ்விழாவில் நிறுவனர் மற்றும் கராத்தே பயிற்சியாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசினார்.

    தட்டான்குட்டை ஊராட்சித் தலைவி புஷ்பா பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இதேபோல, புத்தர் தெரு உயர்நிலைப்பள்ளி, மேற்கு காலனி நடுநிலைப்பள்ளி, சின்னப்பநாயக்கன்பாளையம் மேல்நிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பங்கேற்ற கராத்தே பயிற்சியாளர் பன்னீர்செல்வத்தின் தந்தை பழனி சுதந்திர போராட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×