search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் விநியோகம்
    X

    விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் விநியோகம் செய்யப்பட்ட போது எடுத்த படம்.

    விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் விநியோகம்

    • கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு தலா 3 தென்னங்கன்றுகள் வீதம் 800 பண்ணைக் குடும்பங்களுக்கு 2400 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
    • அட்மா தலைவர் பி.பி.தனராசு முன்னிலையில் விவசாயிகளுக்கு தென்னங்–கன்றுகள் வழங்கப்பட்டது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்டுள்ள கோதூர், இராமதேவம், நடந்தை, மேல்சாத்தம்பூர் ஆகிய கிராம ஊராட்சிகளை சேர்ந்த விவசாயிகளுக்கு தலா 3 தென்னங்கன்றுகள் வீதம் 800 பண்ணைக் குடும்பங்களுக்கு 2400 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

    ராமதேவம் கிராமத்தில் நடைபெற்ற இந்த விழாவில் பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி அவர்கள் தலைமையில் அட்மா தலைவர் பி.பி.தனராசு முன்னிலையில் விவசாயிகளுக்கு தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேளாண்மை அலுவலர் பாபு, துணை வேளாண்மை அலுவலர் குழந்தைவேல், உதவி வேளாண்மை அலுவலர் நாகராஜன், வட்டார தொழில் நுட்ப மேலாளர் ரமேஷ் ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×