என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
X
அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கல்
Byமாலை மலர்6 July 2022 9:28 AM GMT
- குமாரபாளையம் அருகே உள்ள வீரப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது.
- 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு விழா நடைபெற்றது.
குமாரபாளையம்:
குமாரபாளையம் அருகே உள்ள வீரப்பம்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு 100 சதவீதம் வருகை புரிந்த மாணவர்களுக்கு குமாரபாளையம் நேதாஜி சமூக சேவை மையம் சார்பில் பரிசு வழங்கும் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் நிறுவனர் மற்றும் கராத்தே பயிற்சியாளர் பன்னீர்செல்வம் தலைமை வகித்து பேசினார்.
தட்டான்குட்டை ஊராட்சித் தலைவி புஷ்பா பங்கேற்று மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இதேபோல, புத்தர் தெரு உயர்நிலைப்பள்ளி, மேற்கு காலனி நடுநிலைப்பள்ளி, சின்னப்பநாயக்கன்பாளையம் மேல்நிலைப்பள்ளி, ஆரம்பப்பள்ளி ஆகிய பள்ளிகளிலும் பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த விழாவில் பங்கேற்ற கராத்தே பயிற்சியாளர் பன்னீர்செல்வத்தின் தந்தை பழனி சுதந்திர போராட்ட வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X