search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வழக்குகளில் தொடர்பு"

    • வீட்டில் பணம்,நகை திருடி சென்றது தெரியவந்தது.
    • போலீசார் 2 பேரை கைது செய்து நகையை மீட்டனர்.

    பெருந்துறை:

    ஈரோடு மாவட்டம் பெரு ந்துறை பெத்தாம்பாளையம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கவுரிசங்கர் (42). இவர் குன்னத்தூர் ரோட்டில் சொந்தமாக எலக்ட்ரிக் கடை வைத்து நடத்தி வருகிறார்.

    இவரது மனைவி ரேணுகா தேவி. இவர் தினமும் காலை 10 மணியளவில் தனது கணவருக்கு உதவியாக கடைக்கு செல்வார். மீண்டும் அவர்கள் 2 பேரும் மதியம் வீட்டிற்கு வந்து சாப்பிட்டு செல்வார்கள்.

    இதே போல் கடந்த மாதம் 7-ந் தேதி ரேணுகாதேவி வழக்கம் போல் காலையில் வீட்டை பூட்டி விட்டு கடைக்கு சென்றார். பின்னர்மீண்டும் அவர் தனது கணவருடன் மதியம் வீட்டிற்கு சாப்பிட வந்தார்.

    அப்போது அவர் சாவி வைத்திருந்த இடத்தில் சாவியை காணவில்லை. ஆனால் வீடு திறந்து கிடந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது பீரோ லாக்கரில் இருந்த 7. 25 பவுன் நகை, ரூ. 3 லட்சம் ரொக்க ப்பணம் ஆகியவை திருட்டு போய் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    பின்னர் இது குறித்து அவர்கள் பெருந்து றை போலீசில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் மசூதா பேகம் தலைமையில் போலீசார் தனிப்படை அமைத்து தேடிவந்தனர்.

    இந்த நிலையில் சம்பவத்தன்று தனிப்படை போலீசார் விஜயமங்கலம் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

    அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதனால் அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டு போலீசார், போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

    அப்போது அவர்கள் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அம்பாரம்பாளையம் பகுதியை சேர்ந்த சையதர் அலி (37), அவரது மனைவி கற்பகம் (33) என்பது தெரியவந்தது.

    மேலும் இவர்கள் தான் எலக்ட்ரிக் கடை அதிபர் கவுரிசங்கர் வீட்டில் பணம்,நகை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.

    அப்போது பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விபரம் வருமாறு:

    சையதர் அலி மற்றும் அவரது மனைவி கற்பகம் ஆகியோர் தனியாக இருக்கும் வீடு மற்றும் கடைகளை நோட்டமிட்டு பல்வேறு இடங்களில் திருட்டில் ஈடுபட்டு உள்ளனர்.

    மேலும் இவர்கள் மீது 15-க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் இருப்பதும் தெரியவந்தது.

    சம்பவத்தன்று பெருந்துறை பகுதிக்கு வந்த இவர்கள் கவுரிசங்கர் வீட்டை நோட்டமிட்டு அவரது மனைவி சாவி வைத்து செல்வதை கண்காணித்து உள்ளனர்.

    பின்னர் யாரும் இல்லாத நேரத்தில் சாவியை திறந்து வீட்டிற்குள் சென்று நகை, மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்தது.

    மேலும் திருடிய பணத்தில் வீட்டிற்கு தேவையான டி.வி.,பிரிட்ஜ், இருசக்கர வாகனங்கள் வாங்கி சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது.

    இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்து அவர்களிடம்இருந்து 4அரை பவுன் நகையை மீட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    ×