search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வரதட்சணை கொடுமை"

    • கணவர் மற்றும் அவரது தாய் ரகமது நிஷா, அவரது சகோதரி சப்ரீம் மற்றும் அவரது கணவர் உமர் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி வந்தனர்.
    • மனைவி அளித்த புகாரின் பேரில் கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் போலீஸ்காரர் ஷாருக்கான் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கோவை:

    செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் மார்க்கெட் வீதியைச் சேர்ந்தவர் சுல்தான். இவரது மகள் ரேஷ்மா (வயது 19). இவர் கோவை கிழக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும், போத்தனூரை சேர்ந்த கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போலீஸ்காரராக வேலை செய்து வரும் ஷாருக்கான் (24) என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் போத்தனூரில் வைத்து திருமணம் நடந்தது. இந்த நிலையில் எனது கணவர் மற்றும் அவரது தாய் ரகமது நிஷா, அவரது சகோதரி சப்ரீம் மற்றும் அவரது கணவர் உமர் ஆகியோர் வரதட்சணை கேட்டு என்னை கொடுமைப்படுத்தி வந்தனர். இதனால் நான் தற்கொலைக்கு முயற்சி செய்தேன். தொடர்ந்து அவர்கள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் கொடுமைப்படுத்தி வருகின்றனர் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறப்பட்டிருந்தது.

    புகாரின் பேரில் கிழக்கு அனைத்து மகளிர் போலீசார் போலீஸ்காரர் ஷாருக்கான் உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கடந்த 3-ம் தேதி டோக்கியோவில் உள்ள பாலத்தில் இருந்து மனைவி குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சூசைராஜ், மனைவியின் பெற்றோருக்கு தெரிவித்தார்.
    • இதையடுத்து அவரது உடல் சென்னைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே மரியாவின் தாய் அனுசியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார்.

    சேலம்:

    சேலம் இரும்பாலை அருகே உள்ள ஓம் சக்தி நகரை சேர்ந்தவர் லூசியா. இவரது மகள் மரியா. சாப்ட்வேர் என்ஜினீயர். இவருக்கும், புதுச்சேரியை சேர்ந்த சூசைராஜ் என்பவருக்கும் திருமணம் நடந்தது. இருவரும் ஜப்பானில் வசித்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3-ம் தேதி டோக்கியோவில் உள்ள பாலத்தில் இருந்து மனைவி குதித்து தற்கொலை செய்து கொண்டதாக சூசைராஜ், மனைவியின் பெற்றோருக்கு தெரிவித்தார்.

    இதையடுத்து அவரது உடல் சென்னைக்கு விமானத்தில் கொண்டுவரப்பட்டது. இதற்கிடையே மரியாவின் தாய் அனுசியா, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அதில், எனது மகளை வரதட்சனை கேட்டு சூசைராஜ் கொடுமைப்படுத்தினார். கடந்த மார்ச் மாதம் ஜப்பானில் சூசைராஜிக்கு வேலை கிடைத்தது.

    அங்கு செல்லும் முன் எனது மகள் பெயரில் 2 கோடி ரூபாய்க்கு காப்பீட்டு பாலிசி எடுத்துள்ளார். என் மகள் இறந்து விட்டதாக இம்மாதம் 3-ம் தேதி தெரிவித்தார் இயற்கையான முறையில் அவர் இறக்கவில்லை. ஆகவே எனது மகள் சாவில் மர்மம் உள்ளதால் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை நடத்தி என்னிடம் ஒப்படைக்க வேண்டும் என சேலம் மாவட்ட கலெக்டர் மற்றும் போலீஸ் சூப்பிரண்டுக்கு உத்தரவிட வேண்டும் என கோரி இருந்தார்.

    இந்த மனு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தது. மரியாவின் கணவர் சூசைராஜ் நேரில் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார். அதன்படி அவர் நேற்று ஆஜராகி மீண்டும் பிரேத பரிசோதனை நடத்த தனக்கு ஆட்சேபனை இல்லை என தெரிவித்தார்.

    இருதரப்பு வாதங்களுக்கு பின் நீதிபதி அப்துல் குத்தூஸ் சேலம் அரசு மருத்துவமனையில் மரியா உடல் மறு பிரேத பரிசோதனை நடத்தப்பட வேண்டும். டாக்டர்கள் குழுவை சேலம் அரசு மருத்துவமனை முதல்வர் நியமித்து பிரேத பரிசோதனை மேற்கொண்டு போலீசாருக்கு அறிக்கை அளிக்க வேண்டும். அதன் நகலை மனுதாரருக்கும், சூசைராஜுக்கும் வழங்க வேண்டும், கணவர் முன்னிலையில் இறுதி சடங்கிற்காக உடலை மனுதாரரிடம் ஒப்படைக்க வேண்டும். இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளும் கணவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

    இதையடுத்து சென்னையிலிருந்து மரியா உடல் இன்று காலை சேலத்திற்கு கொண்டுவரப்பட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரி பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது. ஆர்.டி.ஓ. விசாரணை நடத்தி, அதன் அறிக்கையின் அடிப்படையில் இன்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்ய போலீசார் மற்றும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

    • பக்ரூதின் அலி போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிந்தது.
    • பக்ரூதின் அலியை வெளியே செல்ல விடமால் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

    ஆலந்தூர்:

    தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பக்ரூதின் அலி. இவர் மீது அவரது மனைவி வரதட்சணை கொடுமை செய்ததாக போலீசில் புகார் அளித்து இருந்தார்.

    ஆனால் பக்ரூதின் அலி போலீசில் சிக்காமல் வெளிநாடு சென்று விட்டார். இது குறித்து நன்னிலம் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இந்தநிலையில் கத்தாா் நாட்டு தலைநகர் தோகாவில் இருந்து சென்னைக்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    அப்போது அதில் வந்த பக்ரூதின் அலியின் பாஸ்போர்ட்டை சோதனை செய்யும்போது அவர் வரதட்சணை கொடுமை வழக்கில் போலீசாரால் தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரிந்தது.

    இதை அடுத்து பக்ரூதின் அலியை வெளியே செல்ல விடமால் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். இதுபற்றி நன்னிலம் மகளிர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் பக்ரூதின் அலியை கைது செய்து அழைத்து செல்வதற்காக சென்னைக்கு வந்து கொண்டு இருக்கிறார்கள்.

    • வினீத் பாலாஜி ஒரு போலீஸ்காரராக இருந்தும் மோட்டார்சைக்கிள் வாங்கி தரும்படி கேட்டு தினம், தினம் கொடுமைப்படுத்தி உள்ளார்.
    • இதனால் வேதனையுடன் இருந்த முத்துபாண்டீஸ்வரி இந்த துயர முடிவை தேடிக்கொண்டுள்ளார்

    ஊட்டி:

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்தவர் வினீத் பாலாஜி (வயது 29). இவர் நீலகிரி மாவட்டம் ஊட்டி நகர் மேற்கு போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார்.

    இவருக்கும் திண்டுக்கல் சீலப்பாடி, என்.ஜி.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த முத்துபாண்டீஸ்வரி (25) என்பவருக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பிறகு தம்பதியினர் ஊட்டியில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தனர்.

    இந்தநிலையில் கடந்த 7-ந் தேதி முத்துபாண்டீஸ்வரி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர் தற்கொலை செய்ததாக கூறப்பட்டது. ஊட்டி மேற்கு போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    முத்துபாண்டீஸ்வரி தற்கொலை செய்தது பற்றி அறிந்த அவரது பெற்றோர் ஊட்டிக்கு வந்தனர். தங்கள் மகள் முத்துபாண்டீஸ்வரியை கூடுதல் வரதட்சணை கேட்டு அவரது கணவர் வினீத் பாலாஜி மற்றும் பெற்றோர் ராதாகிருஷ்ணன், கவிதா ஆகியோர் சித்ரவதை செய்து வந்தனர். வினீத் பாலாஜி ஒரு போலீஸ்காரராக இருந்தும் மோட்டார்சைக்கிள் வாங்கி தரும்படி கேட்டு தினம், தினம் கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் வேதனையுடன் இருந்த முத்துபாண்டீஸ்வரி இந்த துயர முடிவை தேடிக்கொண்டுள்ளார். எனவே வினீத் பாலாஜி மற்றும் அவரது பெற்றோர் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி இருந்தார்.

    அதன்பேரில் வினீத் பாலாஜி, பெற்றோர் ராதாகிருஷ்ணன், கவிதா ஆகிய 3 பேர் மீது கூடுதல் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்துதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.

    3 பேரையும் போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தி குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர். இதற்கிடையே முத்துபாண்டீஸ்வரி திருமணமாகி ஒரு வருடத்துக்குள் தற்கொலை செய்ததால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடக்கிறது.

    ×