search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வயதான தம்பதி தற்கொலை"

    • கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் சோமசுந்தரத்துக்கு வாய் பகுதியில் சிறிய கட்டி ஏற்பட்டது.
    • தஞ்சாவூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சோமசுந்தரம் சிகிச்சைக்காக சென்றார்.

    மன்னார்குடி:

    தஞ்சாவூர் அஞ்சுகம் நகரை சேர்ந்தவர் சோமசுந்தரம் (வயது 78). இவரது மனைவி தாயம்மாள் (77). இவர்களது மகன் மதுரையில் வசித்து வருகிறார். சோமசுந்தரம் தஞ்சாவூர் வீட்டில் தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் தம்பதி இருவருக்கும் சமீப நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தது.

    இந்நிலையில் கடந்த ஓரிரு நாட்களுக்கு முன்னர் சோமசுந்தரத்துக்கு வாய் பகுதியில் சிறிய கட்டி ஏற்பட்டது. இதற்காக தஞ்சாவூரில் உள்ள ஆஸ்பத்திரியில் சோமசுந்தரம் சிகிச்சைக்காக சென்றார். அங்கு அவருக்கு வாய்ப்பகுதியில் இருந்த கட்டியை அகற்றிய டாக்டர்கள் அதனை புற்றுநோய் தொடர்பான பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர் .

    இதனால் மனம் உடைந்த சோமசுந்தரம், தனது மனைவி தாயம்மாளை அழைத்துக் கொண்டு, வாடகை காரில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள ஈசனகுடி கிராமத்தில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்றனர்.

    வரும் வழியில் பெட்டிக்கடை ஒன்றில் நிறுத்தி குளிர்பானம் வாங்கி அதில் விஷத்தை கலந்து இருவரும் குடித்துள்ளனர். பின்னர் அந்த காரில் ஈசனகுடி உறவினர் வீட்டுக்கு வந்த சோமசுந்தரம், வாடகை காரை திருப்பி அனுப்பினார்.

    பின்னர் உறவினர்களிடம் தானும், தனது மனைவியும் விஷம் குடித்திருக்கும் விபரத்தை தெரிவித்துள்ளார்.

    இதைத் தொடர்ந்து உறவினர்கள் அவர்களை சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் சோமசுந்தரத்தை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்நிலையில் சோமசுந்தரமும், தாயம்மாளும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இது குறித்து விக்கிரபாண்டியம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • தம்பதி சுப்புராம்- காமாட்சி ஆகியோரின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை.
    • வீட்டில் இருந்த போது ஏற்பட்ட பிரச்சினையில் விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    கூடுவாஞ்சேரி:

    கூடுவாஞ்சேரி அடுத்த மாடம்பாக்கம் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் சுப்புராம் (வயது87). இவரது மனைவி காமாட்சி(84). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.

    வயதான தம்பதியான சுப்புராமும், காமாட்சியும், மகள் பாரதி வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுக்கு தேவையான வசதிகளை மகள் செய்து கொடுத்து இருந்தார்.

    இந்தநிலையில் பாரதி, தனது குடும்பத்தினருடன் ஜமீன் பல்லாவரத்தில் உள்ள தேவாலயத்துக்கு சென்றார். வீட்டில் அவரது பெற்றோர் சுப்புராம்- காமாட்சி மட்டும் இருந்தனர்.

    இரவு அவர்கள் வீடு திரும்பியபோது, சுப்புராமும், காமாட்சியும் வீட்டில் உள்ள அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதனை கண்டு பாரதி கதறி துடித்தார். தகவல் அறிந்ததும் மணிமங்கலம் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தம்பதியின் உடல்களை மீட்டு பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    தம்பதி சுப்புராம்- காமாட்சி ஆகியோரின் தற்கொலைக்கான காரணம் என்ன? என்று தெரியவில்லை. அவர்கள் வீட்டில் இருந்த போது ஏற்பட்ட பிரச்சினையில் இந்த விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    மேலும் தம்பதியினர் இருவரும் நோய்வாய்ப்பட்டு இருந்ததாகவும், இதனால் மன உளைச்சல் அடைந்து தற்கொலை முடிவை எடுத்தனரா? என்ற கோணத்திலும் விசாரணை நடந்து வருகிறது.

    இது தொடர்பாக மணிமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து தம்பதியின் குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வயதான தம்பதி தூக்குப்போட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ×