search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வன்னியர்கள் இட ஒதுக்கீடு"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • ஜி.கே.மணி கூட நேரில் என்னை சந்தித்து தி.மு.க. அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்து இருப்பதாக பாராட்டினார்.
    • எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.

    சென்னை:

    வன்னியர்களுக்கான 10.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் அது தொடர்பான ஆணையத்தின் காலக்கெடு 6 மாதம் நீட்டிக்கப்பட்டதற்கு பா.ம.க. தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    இந்த பிரச்சினை சட்டசபையில் இன்று விவாதமாக பேசப்பட்டது. பா.ம.க. சட்டமன்ற தலைவா் ஜி.கே.மணி இன்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்து பேசினார்.

    வன்னியர் சமுதாயத்துக்கு 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு தொடர்பாக அரசு அறிவித்துள்ள ஆணையத்தின் பதவி காலத்தை 6 மாதம் நீட்டிக்க தேவையில்லை. ஒரு மாதம் நீட்டித்தால் போதும். இந்த காலக்கெடு நீட்டிக்கப்பட்டது அதிர்ச்சி அளிக்கிறது. வேதனை அளிக்கிறது. தமிழகத்தில் மிகவும் பின்தங்கிய சமூகமாக வன்னியர் சமூகம் உள்ளது. கல்வி, பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியவர்களாக இருக்கிறார்கள்.

    பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமலாக்கப்பட்ட 3 மாத காலத்தில் பதிலளித்து இருக்க வேண்டும். ஆனால் அந்த ஆணையத்தை மேலும் 6 மாதத்துக்கு நீட்டித்தி ருப்பதை ஏற்க முடியாது. இது வேண்டுமென்றே காலம் தாழ்த்துகிற செயலாகவே நாங்கள் பார்க்கிறோம்.

    கால நீட்டிப்பு 6 மாதம் என்பதை ஒரு மாத காலமாக குறைக்கலாம் என்றார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டு பேசியதாவது:-

    நேற்று இதே பிரச்சினை குறித்து ஜி.கே.மணி பேசினார். இது தொடர்பான துறையின் மானிய கோரிக்கை இன்று வருகிறது. அதில் பேசுங்கள் என்றோம். ஆனாலும் இந்த பிரச்சினையை இப்போது எழுப்பி உள்ளார். கலைஞர் இருந்தபோது 69 சதவீத இட ஒதுக்கீடு தந்தார் என்று பெருமையாக கூறினார்.

    இப்போது 10.5 சதவீத இட ஒதுக்கீடு எந்த சூழ்நிலையில் கொண்டு வரப்பட்டது என்பதை பார்க்க வேண்டும். இது முறையான அமல்படுத்தப்படுமா? என்று பல சந்தேகங்கள் எழுந்தன. தேர்தல் தேதி அறிவிக்கப்படும் சமயத்தில் இந்த இட ஒதுக்கீடு கொண்டு வரப்பட்டது.

    அதனால்தான் கோர்ட்டில் தடை வந்து விட்டது. அதையும் மீறி இட ஒதுக்கீட்டை அமல்படுத்த நாங்கள் முயற்சி மேற்கொள்வோம்.

    நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தோம். அந்த ஆட்சி, இந்த ஆட்சி என்று பாராமல் உடனடியாக அமல்படுத்த தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. உச்சநீதிமன்றம் வரை சென்றோம். அதற்கான ஜி.கே.மணி கூட நேரில் என்னை சந்தித்து தி.மு.க. அரசு சிறப்பான நடவடிக்கை எடுத்து இருப்பதாக பாராட்டினார்.

    உச்சநீதிமன்றம் தடை செய்தபோது சில வழிமுறைகளை தெரிவித்து உள்ளனர். அதற்காக ஆணையம் அமைக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. ஆணையத்தின் விருப்பத்தின்படிதான் இப்போது கால நீட்டிப்பு வழங்கப்பட்டு உள்ளது என்றார்.

    இதை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல் முருகன் பேசினார். அவர் வன்னியர்களுக்கு தி.மு.க. செய்த இட ஒதுக்கீடு நன்மைகளை பட்டியலிட்டார்.

    சமூக நீதி அரசை தி.மு.க. வழி நடத்துவதாக கூறினார். அப்போது வன்னியர் சமூகமே தி.மு.க.வில் உள்ளது போன்ற கருத்தை தெரிவித்தார்.

    இதற்கு அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

    வேல்முருகன் பேசிய சில கருத்துக்களை அவை குறிப்பில் இருந்து நீக்க கோரினார்.

    அப்போது அவருக்கு ஆதரவாக அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் குரல் எழுப்பினார்கள். இதனால் வாக்குவாதம் கடுமையானது.

    அப்போது அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் எழுந்து, இதற்கு முன்பு அ.தி.மு.க. ஆட்சியில் வன்னியர்களுக்கு நிகழ்ந்த துயரம் பற்றி குறிப்பிட்டார். அதற்கு அ.தி.மு.க.வினர் கடுமையான எதிர்ப்பு தெரிவித்து கூச்சல் போட்டனர்.

    உடனே எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசியதை அவைக்குறிப்பில் இருந்து நீக்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். அதன் பிறகு அமைதி ஏற்பட்டது. பின்னர் இட ஒதுக்கீடு தொடர்பாக உறுப்பினர்கள் பலர் பேசினார்கள். இதனால் சட்டசபையில் பரபரப்பான சூழல் நிலவியது.

    வன்னியர்களுக்கான 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து செய்யப்பட்ட நிலையில், மேல்முறையீடு செய்ய பரிந்துரைக்கப்படும் என அரசு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
    உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் வன்னியர்களுக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது, முறையான கணக்கெடுப்பு விவரங்கள் இல்லாமல் இட ஒதுக்கீடு எப்படி தர முடியும்? சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்க முடியுமா? என பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    இதனால் வன்னியர்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத இடஒதுக்கீட்டை பெற முடியாது. இந்த வருடம் கல்வியில் 10.5 சதவீத இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அவர்களின் நிலை என்னவாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    இந்த தீர்ப்பு ஏமாற்றம் அளிப்பதாக கூறிய பா.ம.க. கட்சியின் வழக்கறிஞர்கள் பாலு, தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

    மேல்முறையீடு குறித்து தமிழக அரசு வழக்கறிஞரிடம் பத்திரிகையாளர்கள் கேட்டபோது, மேல்முறையீடு செய்ய தமிழக அரசுக்கு பரிந்துரைக்கப்படும் என்றார்.

    இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதுகுறித்து உயர்க்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி மற்றும் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு ரத்து தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு சார்பில் மேல்முறையீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கி தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை ரத்து செய்யப்படுவதாக உயர்நீதிமன்றம் மதுரை கிளை தீர்ப்பு வழங்கியுள்ளது.
    மதுரை:

    தமிழ்நாட்டில் கல்வி வேலைவாய்ப்பில் 69 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது.

    முதலில் இதில் பிற்படுத்தப்பட்டோருக்கு 50 சதவீதம், தாழ்த்தப்பட்டோருக்கு 18 சதவீதம், பழங்குடியின மக்களுக்கு 1 சதவீதம் என இட ஒதுக்கீடு இருந்தது.

    பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களும் இருந்தனர். ஆனால் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று போராட்டங்கள் நடைபெற்றன.

    குறிப்பாக டாக்டர் ராமதாஸ் தலைமையில் தீவிர போராட்டங்கள் நடந்தன. இதைத் தொடர்ந்து 1989-ம் ஆண்டு அப்போது இருந்த தி.மு.க. அரசு பிற்படுத்தப்பட்டோர் பிரிவில், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் என்ற தனிப் பிரிவை உருவாக்கியது.

    அதன்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 20 சதவீதம் தனி இட ஒதுக்கீடு வழங்கப்பட்டது. இதன் மூலம் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு 30 சதவீதம் ஆனது.

    மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்கள், சீர்மரப்பினர் என பல்வேறு சாதியினரும் இடம் பெற்று இருந்தனர்.

    இதன் காரணமாக வன்னியர் சமூகத்தினருக்கு உரிய இடங்கள் கிடைக்கவில்லை. எனவே வன்னியர்களுக்கு என்று தனியாக இட ஒதுக்கீடு வேண்டும் என்று மீண்டும் கோரிக்கை எழுந்தது.

    கடந்த சட்டமன்ற தேர்தல் நெருங்கிய நேரத்தில் அ.தி.மு.க. அரசு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் வன்னியர்களுக்கு என்று 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்தது.

    இதற்காக கடந்த பிப்ரவரி மாதம் 26-ந்தேதி சட்டசபையில் அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

    இதன் மூலம் வன்னியர்களுக்கு தனியாக 10.5 சதவீதம் இட ஒதுக்கீடு அமலுக்கு வந்தது.

    தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு இந்த இட ஒதுக்கீடு தொடர்பான அரசாணை ஜூலை 26-ந்தேதி வெளியிடப்பட்டது.

    ஆனால் வன்னியர்களுக்கான இந்த இட ஒதுக்கீடு மற்ற சமூகத்தினரை பாதிப்பதாக பல்வேறு சமூகங்கள் தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.

    சட்டசபை தேர்தலின் நேரத்தின்போதும் இது எதிரொலித்தது. அப்போது அ.தி.மு.க. தலைவர்கள் இது தற்காலிக இட ஒதுக்கீடுதான் சாதி வாரி கணக்கெடுப்புக்கு பிறகு உரிய முறையில் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று கூறினார்கள்.

    இந்த நிலையில் இட ஒதுக்கீடுக்கு எதிர்ப்பு தெரிவித்து சந்தீப்குமார், முத்துக்குமார் ஆகியோர் சுப்ரீம்கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரணை செய்தது.

    அப்போது இந்த பிரச்சினை தொடர்பாக மாநில ஐகோர்ட்டை அணுகி தீர்வு காணுமாறு நீதிபதிகள் கூறினார்கள்.

    இந்த நிலையில் மதுரை ஐகோர்ட்டில் பாப்பாரப் பட்டியைச் சேர்ந்த அபிஸ் குமார் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டை எதிர்த்து மனுதாக்கல் செய்திருந்தார்.

    அந்த வழக்கோடு இதையும் சேர்த்து விசாரிக்கலாம் என்று கூறி சந்தீப்குமார், முத்துக்குமார் இருவரும் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

    இட ஒதுக்கீடு தொடர்பாக மேலும் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்த பாலமுரளி மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து இருந்தார். மேலும் பல வழக்குகளும் தொடரப்பட்டு இருந்தன. அனைத்து வழக்குகளும் மதுரை ஐகோர்ட்டில் ஒன்றாக சேர்க்கப்பட்டு விசாரணை நடந்தது.

    பரமக்குடி பாலமுரளி மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த பொது நல மனுவில் கூறி இருந்தாவது:-

    தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த மக்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். இவர்களுக்கு மொத்தமாக 20 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இதில் 10.5 சதவீதத்தை வன்னியர் சமுதாயத்தினருக்கு உள் ஒதுக்கீடாக வழங்கி கடந்த பிப்ரவரி மாதம் தமிழக அரசு சட்டமசோதாவை நிறைவேற்றியது.

    இதனால் மிகவும் பிற்பட்ட வகுப்பினர் பிரிவில் உள்ள பிற சமுதாயத்தை சேர்ந்த மக்களின் கல்வி, வேலை, எதிர்காலம் அனைத்தும் கேள்விக்குறியாகிவிட்டது. முறையாக சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்னரே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்.

    எனவே வன்னிய சமுதாயத்தினருக்கு 10.5 சதவீதம் உள் இட ஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்து, அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இடைக்கால தடைவிதித்து உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

    இதே கோரிக்கையுடன் 20-க்கும் மேற்பட்டோர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியின் பரிந்துரையின் பேரில் நீதிபதிகள் துரைசாமி, முரளி சங்கர் ஆகியோர் கடந்த சில வாரங்களாக மதுரை ஐகோர்ட்டில் நாள்தோறும் விசாரித்தனர்.

    விசாரணையின் போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட் டில் 10.5 சதவீதத்தை வன்னியர்களுக்கு வழங்கி இருப்பது, சட்டத்துக்கு முரணான இட ஒதுக்கீடாக உள்ளது.

    சாதி ரீதியான கணக்கெடுப்புகள் முறையாக நடத்தப்படவில்லை. தேர்தல் ஆதாயத்திற்காக ஒரு சமுதாயத்தினரை முன்னிறுத்தி சட்டமன்றத்தில் இந்த தீர்மானம் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது.

    இந்த தீர்மானத்தால் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் உள்ள மற்ற சாதி மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வாதாடினர்.

    பின்னர் இந்த வழக்கின் தீர்ப்பை கடந்த வாரம் நீதிபதிகள் ஒத்திவைத்து இருந்தனர்.

    இந்தநிலையில் இன்று காலையில் அதே நீதிபதிகள் இந்த வழக்கின் தீர்ப்பை வழங்கினர். அதில் கூறிஇருந்ததாவது:-

    மிகவும் பிற்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடாக வன்னியர்களுக்கு 10.5 சதவீதத்தை ஒதுக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளதா?

    சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படாத சூழ்நிலையில் இதுபோன்ற அரசாணை பிறப்பிக்கலாமா? சாதி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க முடியுமா? முறையான அளவுசார் தரவுகள் இல்லாமல் இடஒதுக்கீடு வழங்க இயலுமா? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுகிறது.

    இந்த கேள்விகளுக்கு தமிழக அரசு அளித்த பதில்கள் ஏற்றுக்கொள்பவையாக இல்லை. இந்த அரசாணை அரசியலமைப்பு சட்டங்களுக்கு எதிரானதாக உள்ளது.

    எனவே வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள்இடஒதுக்கீடு வழங்கும் வகையில் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை மற்றும் நடவடிக்கைகள் ரத்து செய்யப்படுகின்றன.

    இந்த அரசாணையின் அடிப்படையில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசுப்பணிகளில் உள் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு இருக்குமாயின் அவை நிறுத்தி வைக்கப்படுகின்றன. இந்த உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதிக்கப்படுகிறது.

    இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
    ×