search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வண்ணாரப்பபேட்டை"

    புதுவண்ணாரப்பேட்டையில் கட்டிட காண்டிராக்டர் வீட்டில் ரூ.2½ லட்சம்-நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருவொற்றியூர்:

    புதுவண்ணாரப் பேட்டை, ஜீவா நகர் 2-வது தெருவில் வசித்து வருபவர் முருகானந்தம். கட்டிட காண்டிராக்டர்.

    இவர் கடந்த 18-ந்தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்சியில் உள்ள கோவிலுக்கு சுற்றுலா சென்றார். இன்று காலை திரும்பி வந்தபோது வீட்டின் ஜன்னல் கம்பி உடைந்து கிடந்தது.

    உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த ரூ.2½ லட்சம் ரொக்கம், 6 பவுன் நகை கொள்ளை போய் இருந்தன.

    வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம நபர்கள் நகை-பணத்தை சுருட்டி சென்று இருப்பது தெரிந்தது.

    இதுகுறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    பழைய வண்ணாரப்பேட்டையில் அரசு ஆஸ்பத்திரி பெண் ஊழியர் வீட்டில் 20 பவுன் நகை கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ராயபுரம்:

    பழைய வண்ணாரப்பேட்டை சண்முகராயன் தெருவைச் சேர்ந்தவர் நிர்மலா (40). இவர் அதே பகுதியில் உள்ள மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனை அலுவலகத்தில் ஊழியராக பணிபுரிகிறார்.

    நேற்று காலை தனது வீட்டை பூட்டிவிட்டு இவர் அலுவலக பணிக்கு சென்று விட்டார். பணி முடிந்து மாலை 4 மணி அளவில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த நிர்மலா உள்ளே சென்று பார்த்தார்.

    பீரோ உடைக்கப்பட்டு இருந்தது. அதில் வைத்திருந்த 20 பவுன் தங்க நகைகளை காணவில்லை. அவற்றை யாரோ கொள்ளையடித்து சென்றுவிட்டனர். அதன் மதிப்பு ரூ.5 லட்சம். இதுகுறித்து கொருக்குப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் உள்ள 2 கண்காணிப்பு கேமிராவில் பதிவாகியுள்ளது. அதை வைத்து கொள்ளையனை போலீசார் தேடிவருகின்றனர்.

    ×