search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடமாநில தொழிலாளிக்கு"

    • தொழிலாளி விகாஷ் மார்க்கி எதிர்பா ராத விதமாக கீழே விழுந்த போது அவர் மீது மண் சரிந்து விழுந்து முற்றிலும் அவரை மூடியுள்ளது
    • முகத்தாடை, வலது மார்பு உள்ளிட்ட மூன்று இடங்களில் வடமாநில கட்டிட தொழிலாளி விகாஷ் மார்க்கிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது

    டி.என்.பாளையம்

    டி.என்.பாளையம் அடுத்த டி.ஜி.புதூர் நால்ரோடு அருகேயுள்ள காளியூர் காலனி பகுதியில் தரைப்பாலம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.இதில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை பாலம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

    அப்போது பாலத்தின் பக்கவாடுகளில் இரும்பு தகரம் பொருத்தும் பணி நடைபெற்று போது ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த கட்டுமான தொழி லாளி விகாஷ் மார்க்கி (19) பணியில் ஈடுபட்டு இருந்தார்.அப்பொழுது எதிர்பா ராத விதமாக விகாஷ் மார்க்கி தவறி கீழே விழுந்த போது அவர் மீது மண் சரிந்து விழுந்து முற்றிலும் அவரை மூடியுள்ளது.

    தகவல் கிடைத்து விரைந்து வந்த சத்திய மங்கலம் தீயணைப்பு வீரர்கள் 45 நிமிடம் போரா ட்டத்திற்கு பிறகு விகாஷ் மார்க்கியை பத்திரமாக உயிருடன் மீட்டனர். சிறு காயங்களுடன் மீட்க ப்பட்ட விகாஷ் மார்க்கியை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சை க்காக அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து மேல்சிகிச்சைக்காக விகாஷ் மார்க்கியை கோபியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு சிகிச்சைக்காக சேர்த்து உள்ளனர்.

    முகத்தாடை, வலது மார்பு உள்ளிட்ட மூன்று இடங்களில் வடமாநில கட்டிட தொழிலாளி விகாஷ் மார்க்கிக்கு எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை தரப்பில் கூறப்படுகிறது.இச்சம்பவத்தில் துரித மாக செயல்பட்டு வடமாநில கட்டிட தொழி லாளியை உயிருடன் மீட்டு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்த சத்தியமங்கலம் தீயணைப்பு துறை வீரர்க ளை மக்கள் வெகு வாக பாராட்டினர்.

    ×