search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடகிழக்கு பருவழை"

    • கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு ஒப்பந்ததாரருக்கு பல பணிகள் ஒதுக்கி இருக்கிறார்கள்.
    • குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் முடியவில்லை.

    சென்னை:

    பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் சைதாப்பேட்டை பனகல் மாளிகை, பஜார் ரோடு, வேளச்சேரி ரெயில் நிலைய பகுதி, மடிப்பாக்கம், கோவிலம்பாக்கம் பகுதிகளில் இன்று ஆய்வு செய்தனர். பின்னர் எ.வ.வேலு கூறியதாவது:-

    மழை நீர் வடிகால் கால்வாய் பணிகள் நிறைவடையாமல் போனதற்கு காரணம். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு ஒப்பந்ததாரருக்கு பல பணிகள் ஒதுக்கி இருக்கிறார்கள். அதனால்தான் குறிப்பிட்ட காலத்துக்குள் பணிகள் முடியவில்லை. இப்போது நாங்கள் ஒரு ஒப்பந்ததாரருக்கு ஒரு பணி என்ற அடிப்படையில்தான் பணிகளை ஒதுக்கி வருகிறோம். அ.தி.மு.க. ஆட்சியில்தான் பிரச்சினை. அவர்கள் கஜானாவையும் காலி செய்து, ஊரையும் காலி செய்து விட்டார்கள். நாங்கள்தான் அதை சரி செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக சிதம்பரம் பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
    • மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளானர்கள்.

    கடலூர்:

    தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. அதன்படி பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் கடந்த 1 வாரத்துக்கு மேலாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது.

    நேற்று முதல் பெய்ய தொடங்கிய மழை இன்று காலை வரை விடிய விடிய கொட்டிதீர்த்தது. இன்று காலையும் மழை பெய்தபடி காணப்பட்டது. இதேபோல மாவட்டத்தில் உள்ள பண்ருட்டி, விருத்தாசலம், சிதம்பரம், பரங்கிப்பேட்டை, சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார் கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு கொள்ளிடம் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு காரணமாக சிதம்பரம் பகுதியில் 1500-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. மாவட்டம் முழுவதும் 1000-க்கும் மேற்பட்ட ஏக்கர் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளானர்கள்.

    தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்ட நிர்வாகம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. தண்ணீர் சூழும் பகுதிகளுக்கு செல்ல படகு தயார் நிலையில் உள்ளது. இதுதவிர மாநகராட்சி, நகராட்சி பகுதியில் வெள்ளத்தை தடுக்க மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலும் ஏரிகள் மற்றும் குளங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

    மேலும் புவனகிரியை சுற்றியுள்ள ஆதிவராக நத்தம், மஞ்சகுழி, பெருமாத்தூர், சுத்துக்குழி, பூதவராயன்பேட்டை, வண்டு ராயன்பட்டு, உடையூர், கீரப்பாளையம், வடகறி ராஜபுரம், ஒரத்தூர், தெற்கு திட்டை, வடக்குதிட்டை, பு.சித்தேரி, சாத்தப்பாடி ஆகிய பல்வேறு கிராமங்களில் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது.

    ×